ETV Bharat / elections

அதிமுக கூட்டணியில் இருந்தும் கடுமையான போட்டியை சந்திக்கிறார் அன்புமணி ராமதாஸ்.... - கடுமையான போட்டியை சந்திகிறார்

தருமபுரி: கடந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு திராவிட கட்சி வேட்பாளர்களையும் தோற்கடித்து மக்களவை உறுப்பினரான அன்புமணி ராமதாஸ், இம்முறை அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்தும் மிக கடுமையான போட்டியை சந்திக்கிறார்.

அன்புமணி ராமதாஸ்
author img

By

Published : Apr 13, 2019, 10:26 AM IST


கடந்த மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அன்புமணி ராமதாசுக்கு இந்தத் தேர்தல் எளிய தேர்தலாகவே இருக்க வேண்டும். காரணம், 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அன்புமணி நான்கு லட்சத்து 68 ஆயிரத்து194 வாக்குகளும், தற்போது கூட்டணியில் உள்ள அதிமுக மூன்று லட்சத்து,91 ஆயிரத்து 048 வாக்குகளும் பெற்றன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இவ்விரண்டு கட்சிகளும் பெற்ற வாக்குகள் 8.6 லட்சமாகவும், எதிரணியான திமுக காங்கிரஸ் கடந்த தேர்தலில் மொத்தமாக பெற்ற வாக்குகள் இரண்டு லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக தருமபுரியில் உள்ள ஆறு சட்டபேரவைத் தொகுதிகளில் மொத்தமாக 2.85 லட்சம் வாக்குகள் பெற்றது. அதிமுகவோ சுமார் நான்கு லட்சம் வாக்குகள் பெற்றது.

இதுபோன்ற எண்ணிக்கை கணக்குகளின் சாதகமும், பாமகவின் கோட்டையாக தருமபுரி கருதப்பட்டாலும், தேர்தலை சந்திக்கும் அன்புமணிக்கு இம்முறை பெரும் சவால் காத்திருக்கிறது. காரணம், அமமுக பலம் வாய்ந்த வேட்பாளரான பழனியப்பனை நிறுத்தியுள்ளது இதனால் வாக்கு பிரிவது, உள்ளூர் திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு சாதகமாகவே அமையும் என எதிர்பாரக்கப்படுகிறது. அத்துடன் அன்புமணியின் கடந்த ஐந்தாண்டுகால செயல்பாடு குறித்தும் தொகுதியில் கேள்வி எழுப்பப்படுகிறது. அவர் உறுதியளித்தபடி விவசாயிகளுக்கான நீர் பிரச்னையும் தீர்க்கவில்லை, வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளும் எதுவும் தொடங்கவில்லை. சில மாதங்களுக்கு முன்வரை அதிமுக மற்றும் பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக சாடிய அன்புமணி தற்போது அவர்களின் கூட்டணியிலேயே சிக்கிக்கொண்டுள்ளார்.

1977ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்தொகுதியில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இருமுறை வென்றுள்ளன. வானம் பார்த்த பூமியாகவும், வேலைகளை உருவாக்க அதிகளவிலான தொழிற்சாலைகள் இல்லாத காரணத்தினாலும் தருமபுரி மாவட்ட இளைஞர்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. அத்துடன் சாதிச் சண்டைகள், குழந்தைத் திருமணம், பெண் சிசு கொலை போன்றவை தருமபுரி மாவட்டத்தில் அதிகளவில் காணப்படும் பிரச்னைகள். காவிரி நதி நீர் தமிழ்நாட்டுக்குள் நுழைவது தருமபுரி மாவட்டமாக இருப்பினும், அங்கு தண்ணீர் பிரச்னை பிராதன பங்கு வகிக்கிறது. தருமபுரி மக்களவைத் தொகுதியின் விவசாயகளின் நீண்டகால கோரிக்கையான காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் இருந்து நீர் கொண்டுவரும் திட்டம் இன்னும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டம் சரியாக பராமரிக்கப்படாததாலும், அதிமுக அரசு அறிவித்த சிப்காட் மற்றும் சிட்கோ ஆகிய நிறுவனங்கள் தொகுதியில் தொடங்கப்படாததாலும் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட எட்டு வழிச்சாலை திட்டமும் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பெரும் பங்கு வகிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பாமக தலைவர்கள் அதிமுகவுடனான கூட்டணியில் கருத்து வேறுபாடுடன் இருந்தாலும், பரப்புரையில் இருக்கட்சியனரும் ஈடுபட்டதால் அனைத்தையும் மறந்து ஒன்று சேர்ந்துள்ளனர். இப்படிப்பட்ட கடும் சவால்கள் நிறைந்துள்ள தேர்தல் களத்தில் தன் சமூக வாக்குகள் வெற்றிக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் அன்புமணி தன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரைகளில் முழு வீச்சுடன் ஈடுபட்டு வருகிறார்.


கடந்த மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் தருமபுரி மக்களவைத் தொகுதி வேட்பாளர் அன்புமணி ராமதாசுக்கு இந்தத் தேர்தல் எளிய தேர்தலாகவே இருக்க வேண்டும். காரணம், 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அன்புமணி நான்கு லட்சத்து 68 ஆயிரத்து194 வாக்குகளும், தற்போது கூட்டணியில் உள்ள அதிமுக மூன்று லட்சத்து,91 ஆயிரத்து 048 வாக்குகளும் பெற்றன. ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது இவ்விரண்டு கட்சிகளும் பெற்ற வாக்குகள் 8.6 லட்சமாகவும், எதிரணியான திமுக காங்கிரஸ் கடந்த தேர்தலில் மொத்தமாக பெற்ற வாக்குகள் இரண்டு லட்சத்திற்கும் குறைவாகவே உள்ளன. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியிட்ட பாமக தருமபுரியில் உள்ள ஆறு சட்டபேரவைத் தொகுதிகளில் மொத்தமாக 2.85 லட்சம் வாக்குகள் பெற்றது. அதிமுகவோ சுமார் நான்கு லட்சம் வாக்குகள் பெற்றது.

இதுபோன்ற எண்ணிக்கை கணக்குகளின் சாதகமும், பாமகவின் கோட்டையாக தருமபுரி கருதப்பட்டாலும், தேர்தலை சந்திக்கும் அன்புமணிக்கு இம்முறை பெரும் சவால் காத்திருக்கிறது. காரணம், அமமுக பலம் வாய்ந்த வேட்பாளரான பழனியப்பனை நிறுத்தியுள்ளது இதனால் வாக்கு பிரிவது, உள்ளூர் திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு சாதகமாகவே அமையும் என எதிர்பாரக்கப்படுகிறது. அத்துடன் அன்புமணியின் கடந்த ஐந்தாண்டுகால செயல்பாடு குறித்தும் தொகுதியில் கேள்வி எழுப்பப்படுகிறது. அவர் உறுதியளித்தபடி விவசாயிகளுக்கான நீர் பிரச்னையும் தீர்க்கவில்லை, வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளும் எதுவும் தொடங்கவில்லை. சில மாதங்களுக்கு முன்வரை அதிமுக மற்றும் பாஜக அரசின் செயல்பாடுகளை கடுமையாக சாடிய அன்புமணி தற்போது அவர்களின் கூட்டணியிலேயே சிக்கிக்கொண்டுள்ளார்.

1977ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இத்தொகுதியில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இருமுறை வென்றுள்ளன. வானம் பார்த்த பூமியாகவும், வேலைகளை உருவாக்க அதிகளவிலான தொழிற்சாலைகள் இல்லாத காரணத்தினாலும் தருமபுரி மாவட்ட இளைஞர்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது. அத்துடன் சாதிச் சண்டைகள், குழந்தைத் திருமணம், பெண் சிசு கொலை போன்றவை தருமபுரி மாவட்டத்தில் அதிகளவில் காணப்படும் பிரச்னைகள். காவிரி நதி நீர் தமிழ்நாட்டுக்குள் நுழைவது தருமபுரி மாவட்டமாக இருப்பினும், அங்கு தண்ணீர் பிரச்னை பிராதன பங்கு வகிக்கிறது. தருமபுரி மக்களவைத் தொகுதியின் விவசாயகளின் நீண்டகால கோரிக்கையான காவிரி, தென்பெண்ணை ஆறுகளில் இருந்து நீர் கொண்டுவரும் திட்டம் இன்னும் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டம் சரியாக பராமரிக்கப்படாததாலும், அதிமுக அரசு அறிவித்த சிப்காட் மற்றும் சிட்கோ ஆகிய நிறுவனங்கள் தொகுதியில் தொடங்கப்படாததாலும் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட எட்டு வழிச்சாலை திட்டமும் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பெரும் பங்கு வகிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, பாமக தலைவர்கள் அதிமுகவுடனான கூட்டணியில் கருத்து வேறுபாடுடன் இருந்தாலும், பரப்புரையில் இருக்கட்சியனரும் ஈடுபட்டதால் அனைத்தையும் மறந்து ஒன்று சேர்ந்துள்ளனர். இப்படிப்பட்ட கடும் சவால்கள் நிறைந்துள்ள தேர்தல் களத்தில் தன் சமூக வாக்குகள் வெற்றிக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் அன்புமணி தன் இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரைகளில் முழு வீச்சுடன் ஈடுபட்டு வருகிறார்.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.