ETV Bharat / crime

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கு: காவலர்களுக்குப் பிணை மறுப்பு!

author img

By

Published : May 26, 2021, 4:09 PM IST

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட காவல் அலுவலர் ரகு கணேஷ் உச்ச நீதிமன்றத்தில் பிணை வழங்கவேண்டி மனு தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு

டெல்லி: சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறைவாசம் அனுபவித்து வரும் காவல் அலுவலர் ரகு கணேஷுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.

"இது மிக மோசமான வழக்கு. எனவே, இவ்வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நீங்கள் சில காலமாவது சிறையில் இருக்க வேண்டும்" என்று நீதிபதி சரண் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு குறித்த முழு விவரங்களை இந்த இணைப்பை க்ளிக் செய்வதன் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்

காவல் அலுவலர் ரகு கணேஷ் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், "முன்னதாக இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் அலுவலர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருவதால், மனுதாரரின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு பிணை வழங்கவேண்டும்" என்று கேட்டுள்ளார்.

டெல்லி: சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் - மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவர் காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறைவாசம் அனுபவித்து வரும் காவல் அலுவலர் ரகு கணேஷுக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துள்ளது.

"இது மிக மோசமான வழக்கு. எனவே, இவ்வழக்கு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நீங்கள் சில காலமாவது சிறையில் இருக்க வேண்டும்" என்று நீதிபதி சரண் தெரிவித்துள்ளார். மேலும், இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு குறித்த முழு விவரங்களை இந்த இணைப்பை க்ளிக் செய்வதன் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்

காவல் அலுவலர் ரகு கணேஷ் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், "முன்னதாக இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் அலுவலர் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். தற்போது கரோனா தொற்று அதிகரித்து வருவதால், மனுதாரரின் உடல்நிலையைக் கருத்திற்கொண்டு பிணை வழங்கவேண்டும்" என்று கேட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.