ETV Bharat / crime

ரவுடி ஓடஓட விரட்டி கொலை - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்! - chennai district news

சென்னையில் திருடன் எனக்கூறி ரவுடியை ஓடஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
author img

By

Published : Jun 16, 2021, 5:19 PM IST

சென்னை: தாம்பரம் சானிடோரியம் துர்க்கை அம்மன் தெருவைச் சேர்ந்தவர் கறுப்பு வடிவேல் என்ற வடிவழகன் (27). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 14) இரவு கருப்பு வடிவேல் செனாய் நகர் முத்தையப்பன் தெருவில் சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது.

பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

தகவலறிந்து சேத்துப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த கருப்பு வடிவேல் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து சேத்துப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த விநாயக மூர்த்தி, ஸ்டீபன், சுரேஷ், காரமணி, வினோத், ரஜினி, அப்பு, சாய்நாத், நிர்மல், சந்துரு உள்பட ஏழு பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து சந்துருவை தவிர மற்ற ஆறு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், முன்பகையின் காரணமாக ரவுடி ரஜினி திட்டத்தின் பேரில் கறுப்பு வடிவேலை கொலை செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில் கறுப்பு வடிவேலை கொலை செய்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: முட்டைக்கோஸ் மூட்டையில் கஞ்சா, குட்கா கடத்தல் - இருவர் கைது

சென்னை: தாம்பரம் சானிடோரியம் துர்க்கை அம்மன் தெருவைச் சேர்ந்தவர் கறுப்பு வடிவேல் என்ற வடிவழகன் (27). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் குற்ற வழக்குகள் அதிகம் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 14) இரவு கருப்பு வடிவேல் செனாய் நகர் முத்தையப்பன் தெருவில் சென்று கொண்டிருக்கும் போது அடையாளம் தெரியாத ஏழு பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது.

பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

தகவலறிந்து சேத்துப்பட்டு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்டு கிடந்த கருப்பு வடிவேல் உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான காரணம் குறித்து சேத்துப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்த விநாயக மூர்த்தி, ஸ்டீபன், சுரேஷ், காரமணி, வினோத், ரஜினி, அப்பு, சாய்நாத், நிர்மல், சந்துரு உள்பட ஏழு பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து சந்துருவை தவிர மற்ற ஆறு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில், முன்பகையின் காரணமாக ரவுடி ரஜினி திட்டத்தின் பேரில் கறுப்பு வடிவேலை கொலை செய்தது தெரியவந்தது.

இந்த நிலையில் கறுப்பு வடிவேலை கொலை செய்த பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

இதையும் படிங்க: முட்டைக்கோஸ் மூட்டையில் கஞ்சா, குட்கா கடத்தல் - இருவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.