ETV Bharat / crime

காவலர் கொடூர கொலை - மூன்று பேருக்கு வலைவீச்சு!

author img

By

Published : Jun 21, 2021, 11:16 PM IST

நாகர்கோவில் அருகே புறா வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக காவலர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்டார். கொலை செய்துவிட்டு தப்பியோடிய மூவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

குமரி கொலை
குமரி கொலை

கன்னியாகுமரி: புறா வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக காவலர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகர்கோவிலை அடுத்த பீச் ரோடு, கலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (32). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையில் பணிக்கு சேர்ந்தார்.

மணிமுத்தாறு ஆயுதப்படையில் காவலராக தற்போது பணியாற்றி வந்தார். இந்நிலையில் சரவணனை சில காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை மீண்டும் பணியில் சேர சொல்லி அழைப்பு வந்தது.

இவரது உறவினர் ரமேஷ் (30) பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ரவுடியாக உலாவி வந்தார். காவல் நிலையங்களில் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் சரவணனுக்கும் ரமேஷுக்கும் புறா வளர்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இவ்வேளையில், இன்று மதியம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் சரவணனின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளார். சரவணன் மருத்துவமனைக்கு சென்று கத்திக்குத்துக்கு சிகிச்சை பெற்றுவிட்டு இன்று மாலை வீட்டிற்கு வந்தார்.

அப்போது அவரது வீட்டின் அருகில் மறைந்திருந்த ரமேஷும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் காவலர் சரவணனை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூராய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோட்டார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி: புறா வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக காவலர் ஒருவர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

நாகர்கோவிலை அடுத்த பீச் ரோடு, கலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (32). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காவல் துறையில் பணிக்கு சேர்ந்தார்.

மணிமுத்தாறு ஆயுதப்படையில் காவலராக தற்போது பணியாற்றி வந்தார். இந்நிலையில் சரவணனை சில காரணங்களுக்காக பணியிடை நீக்கம் செய்திருந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரை மீண்டும் பணியில் சேர சொல்லி அழைப்பு வந்தது.

இவரது உறவினர் ரமேஷ் (30) பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் ரவுடியாக உலாவி வந்தார். காவல் நிலையங்களில் இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது. மேலும் சரவணனுக்கும் ரமேஷுக்கும் புறா வளர்ப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இவ்வேளையில், இன்று மதியம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரமேஷ் சரவணனின் முதுகில் கத்தியால் குத்தியுள்ளார். சரவணன் மருத்துவமனைக்கு சென்று கத்திக்குத்துக்கு சிகிச்சை பெற்றுவிட்டு இன்று மாலை வீட்டிற்கு வந்தார்.

அப்போது அவரது வீட்டின் அருகில் மறைந்திருந்த ரமேஷும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் காவலர் சரவணனை சரமாரியாக தாக்கினார். இதில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதைத் தொடர்ந்து அவரது உடல் உடற்கூராய்வு செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கோட்டார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.