ETV Bharat / crime

பாலியல் தொல்லை, ரவுடீசம் போன்ற பல்வேறு வழக்குகளில் மூவர் மீது குண்டாஸ்!

author img

By

Published : Jul 24, 2021, 11:34 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் பாலியல் தொல்லை, ரவுடீசம், கள் இறக்குதல் உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவரை காவல் துறையினர் கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

gundas act
gundas act

ராமநாதபுரம்: குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவர் மீது காவல் துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.

சாயல்குடியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் தனது 13 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்தார். இது குறித்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் சிறுமியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அதேபோல், ராமநாதபுரம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன் (34). இவர் மதுபோதையில் சாயல்குடி மாதவன்நகர் வீரன் (60) என்ற பூசாரியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் கட்டையால் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக சாயல்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்கண்ணனை கைது செய்தனர்.

காதலிப்பதாக கூறி மாணவி பாலியல் வன்புணர்வு- போக்சோவில் இளைஞர் கைது

மேலும், ஏர்வாடி அடுத்த தொத்தன் மகன்வாடி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (52) கள் இறக்கி விற்பனை செய்து வந்த நிலையில், ஏர்வாடி காவல் துறையினர் அவரை கைதுசெய்தனர். இந்த மூவர் மீதும் வழக்குகள் உள்ளதால், இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பரிந்துரை செய்தார்.

அதனடிப்படையில் ஆட்சியர் சந்திரகலா, இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன்படி 3 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமநாதபுரம்: குற்றச் செயல்களில் ஈடுபட்ட மூவர் மீது காவல் துறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது.

சாயல்குடியைச் சேர்ந்த 35 வயதுடைய நபர் தனது 13 வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்தார். இது குறித்த புகாரின்பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் சிறுமியின் தந்தை மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

அதேபோல், ராமநாதபுரம் சாயல்குடி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன் (34). இவர் மதுபோதையில் சாயல்குடி மாதவன்நகர் வீரன் (60) என்ற பூசாரியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுத்ததால் கட்டையால் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக சாயல்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சுரேஷ்கண்ணனை கைது செய்தனர்.

காதலிப்பதாக கூறி மாணவி பாலியல் வன்புணர்வு- போக்சோவில் இளைஞர் கைது

மேலும், ஏர்வாடி அடுத்த தொத்தன் மகன்வாடி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (52) கள் இறக்கி விற்பனை செய்து வந்த நிலையில், ஏர்வாடி காவல் துறையினர் அவரை கைதுசெய்தனர். இந்த மூவர் மீதும் வழக்குகள் உள்ளதால், இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் பரிந்துரை செய்தார்.

அதனடிப்படையில் ஆட்சியர் சந்திரகலா, இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதன்படி 3 பேரும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.