ETV Bharat / crime

ஸ்ரீபெரும்புதூரில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து: ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு

author img

By

Published : May 8, 2021, 12:42 AM IST

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Auto Accident In Sriperumbudur
Auto Accident In Sriperumbudur

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் தெரு வீதி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் முருகையன் 55. இவர் ஸ்ரீபெரும்புதூர் ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று (மே. 8) சவாரி சென்றுவிட்டு முருகையன் திரும்பி வரும்பொழுது முன்பாக எதிர்பாராதவிதமாக அவரது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்பொழுது அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட முருகையன் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்திலேயே இருந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் உயிரிழந்த முருகையன் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விகாக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கிளாய் தெரு வீதி அம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் முருகையன் 55. இவர் ஸ்ரீபெரும்புதூர் ஆட்டோ ஸ்டேண்டில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், இன்று (மே. 8) சவாரி சென்றுவிட்டு முருகையன் திரும்பி வரும்பொழுது முன்பாக எதிர்பாராதவிதமாக அவரது ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவர் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார்.

அப்பொழுது அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் உள்ள அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்ட முருகையன் சிகிச்சை பலனளிக்காமல் சிறிது நேரத்திலேயே இருந்துள்ளார்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் உயிரிழந்த முருகையன் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விகாக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.