ETV Bharat / crime

18000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் - ஆறு பேர் கைது!

author img

By

Published : Feb 22, 2021, 6:17 AM IST

திருவள்ளூர்: தாமரைப்பாக்கம் அருகே கிடங்கு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18000 லிட்டர் எரிசாராயத்தை காவல்துரையினர் பறிமுதல் செய்தனர்.

18000 லிட்டர் எரிசாராயம்
18000 liters of Arrack

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தை அடுத்த காரணிப்பேட்டையில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அங்குள்ள கிடங்கு ஒன்றில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, அங்கு தடை செய்யப்பட்ட எரிசாராயம் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 500க்கும் மேற்பட்ட கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18,000 லிட்டர் எரிசாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் எரிசாராயத்தை பதுக்கி வைத்திருந்த ராஜ்குமார், வெங்கடேசன், ஹரிஷ், ரவி, மதன், பாபு ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தை அடுத்த காரணிப்பேட்டையில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் அங்குள்ள கிடங்கு ஒன்றில் காவல்துறையினர் சோதனை மேற்கொண்டபோது, அங்கு தடை செய்யப்பட்ட எரிசாராயம் கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து 500க்கும் மேற்பட்ட கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 18,000 லிட்டர் எரிசாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் எரிசாராயத்தை பதுக்கி வைத்திருந்த ராஜ்குமார், வெங்கடேசன், ஹரிஷ், ரவி, மதன், பாபு ஆகிய ஆறு பேரை கைது செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெங்களூரில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.