ETV Bharat / city

சுடுகாட்டில் பட்டியலினத்தவருக்கு அனுமதி மறுப்பு: அம்பலப்படுத்திய ஊடகங்களுக்கு ஆட்சியர் நன்றி! - ஊடகங்களுக்கு வேலூர் ஆட்சியர் நன்றி

வேலூர்: வாணியம்பாடி சுடுகாட்டில் பட்டியிலின மக்களை அனுமதிக்காத விவகாரம் குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகைகள், ஊடகங்களுக்கு வேலூர் ஆட்சியர் சண்முகசுந்தரம் நன்றி தெரிவித்துள்ளார்.

vellore collector
author img

By

Published : Aug 23, 2019, 2:43 PM IST

வல்லரசு நாடுகளுக்கு இணையாக நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்புவது, அணுகுண்டு சோதனை நடத்துவது, அரசுத் துறைகளை டிஜிட்டல்மயமாக்குதல் என அடுத்தடுத்த தொழில்நுட்ப நகர்வை நோக்கி இந்தியா சென்றாலும் கூட சாதிய பாகுபாடு, தீண்டாமை கொடுமை கிராமப்புறங்களில் கரும்புள்ளியாக இருந்துவருகிறது.

இதை எடுத்துகாட்டும் வகையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் சுடுகாட்டுக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தை எரிக்க அங்கிருந்த பிற சமுதாயத்தினர் அனுமதிக்காத சம்பவம் வேலூர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் நாராயணபுரம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு அமைப்பதற்காக 50 சென்ட் இடம் ஒதுக்கி தரப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்தச் சம்பவம் குறித்த செய்தியை வெளிக் கொண்டுவர உதவிய பத்திரிகைகள், ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், இதுபோன்று மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வராமல் இருக்கும் பிரச்னைகளை வெளிக் கொண்டுவர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலான காணொலி

வல்லரசு நாடுகளுக்கு இணையாக நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்புவது, அணுகுண்டு சோதனை நடத்துவது, அரசுத் துறைகளை டிஜிட்டல்மயமாக்குதல் என அடுத்தடுத்த தொழில்நுட்ப நகர்வை நோக்கி இந்தியா சென்றாலும் கூட சாதிய பாகுபாடு, தீண்டாமை கொடுமை கிராமப்புறங்களில் கரும்புள்ளியாக இருந்துவருகிறது.

இதை எடுத்துகாட்டும் வகையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் சுடுகாட்டுக்கு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரின் சடலத்தை எரிக்க அங்கிருந்த பிற சமுதாயத்தினர் அனுமதிக்காத சம்பவம் வேலூர் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் நாராயணபுரம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் சுடுகாடு அமைப்பதற்காக 50 சென்ட் இடம் ஒதுக்கி தரப்படும் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

இந்தச் சம்பவம் குறித்த செய்தியை வெளிக் கொண்டுவர உதவிய பத்திரிகைகள், ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்த மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், இதுபோன்று மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வராமல் இருக்கும் பிரச்னைகளை வெளிக் கொண்டுவர வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலான காணொலி
Intro:வேலூர் வாணியம்பாடி சுடுகாடு விவகாரம்- 20 ஆண்டுகள் பிரச்னையில் ஒரே நாளில் தீர்வு கண்ட மாவட்ட ஆட்சியர் தகவலை வெளிக் கொண்டு வந்த பத்திரிகைகள் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார்Body:வல்லரசு நாடுகளுக்கு இணையாக நிலவுக்கு செயற்கைக்கோள் அனுப்புவது அணுகுண்டு சோதனை நடத்துவது அரசு துறைகளை டிஜிட்டல் மயமாக்குதல் என அடுத்தடுத்த தொழில்நுட்ப நகர்வை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது ஆனாலும் சாதிய பாகுபாடு, தீண்டாமை மற்றும் கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகள் இல்லாதது ஆகியவை நாட்டின் வளர்ச்சிக்கு இன்னும் கரும் புள்ளியாக உள்ளது இதை நிரூபிக்கும் வகையில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் சுடுகாட்டுக்கு செல்ல வழியில்லாததால் மேம்பாலத்தில் இருந்து கயிறு கட்டி சடலத்தை ஆற்றில் இறக்கி எரியூட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது அதாவது வாணியம்பாடி நாராயணபுரம் பகுதி ஆந்திர மாநில எல்லையோரம் அமைந்துள்ளது இங்கு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியைச் சேர்ந்த குப்பன் என்பவர் சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்தார் இங்குள்ள பொதுமக்கள் யாராவது உயிரிழந்தால் அவர்களின் சடலத்தை அருகில் உள்ள பாலாற்றங்கரையில் எரியூட்டுவது வழக்கம் சடலத்தை பாலாற்றங்கரையில் அமைந்துள்ள விவசாய நிலத்தின் வழியாக தான் கொண்டு செல்ல வேண்டும் அந்த வகையில் குப்பனின் சடலத்தை நாராயணபுரம் பொதுமக்கள் பாலாற்றங்கரைக்கு கொண்டு சென்றனர் அப்போது கரையின் இருபுறமும் உள்ள விவசாய நிலத்தின் உரிமையாளர்கள் வழி விட மறுத்ததால் வேறு வழியின்றி மேம்பாலத்தின் மேல் இருந்து கயிறு கட்டி சடலத்தை கீழே இறக்கி ஆற்றில் எரியூட்டினர் இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழக அரசுக்கும் தலைகுனிவை ஏற்படுத்தியதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர் இந்த நிலையில் இந்த விவகாரத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக எடுத்து நேற்று வாணியம்பாடி வட்டாட்சியர் முருகன் மற்றும் மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ஆகியோர் நாராயணபுரம் பகுதிக்குச் சென்று ஆய்வு நடத்தினர். பின்னர் நாராயணபுரம் பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து சுடுகாடு அமைப்பதற்காக 50 சென்ட் இடம் ஒதுக்கி தரப்படும் என அறிவித்தனர் அதன்படி அதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இன்று கருத்து தெரிவித்துள்ள மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், நாராயணபுரம் சுடுகாடு விவகாரத்தில் பொதுமக்களிடமிருந்து எந்த கோரிக்கையை வராமலேயே சுடுகாடு அமைப்பதற்கு இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது இந்த சம்பவத்தில் தகவலை வெளிக் கொண்டுவர உதவியாக இருந்த அனைத்து பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மேலும் இதுபோன்று மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு வராமல் உள்ள பிரச்சினைகளை தொடர்ந்து வெளிக் கொண்டுவர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், வாணியம்பாடி வட்டம் நாராயணபுரம் கிராம ஆதிதராவிட காலனி மக்களுக்கு 20 ஆண்டுகளாக சுடுகாடு இல்லாத நிலையில் நாராயணபுரம் கிராமம் தார் சாலையை ஒட்டி சர்வே எண்.24 பனந்தோப்பு புறம்போக்கில் 1.27.0 ஹெக்டேரில்(3.13 ஏக்கர்) 50 சென்ட் பரப்பு நிலம் சுடுகாட்டிற்காக தேர்வு செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகத்திற்கு இருபது ஆண்டுகளாக எந்தவொரு கோரிக்கையும் வரப்பெறாத நிலையில், இந்த பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை வெளிக்கொண்டுவந்த பத்திரிகை மற்றும் ஊடகத்துறையினருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எனது நன்றியினைப் பதிவு செய்ய விரும்புகிறேன். மாவட்டத்தில் இதுபோன்று, நிர்வாகத்தின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டு வராத பிரச்சினைகளை தொடர்ந்து பத்திரிகை, ஊடக நண்பர்கள் கொண்டுவரும் பட்சத்தில், உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.