திருச்சி: புத்தாநத்தம் அருகேயுள்ள கம்பிளியம்பட்டி ஆற்றுவாரியில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புத்தாநத்தம் காவல் துறையினர், மணல் அள்ளிக் கொண்டிருந்த வடக்கு இடையபட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி (54), கம்பிளியம்பட்டியைச் சேர்ந்த துரைராஜ்(45) இருவரையும் கைது செய்து கடத்தலுக்குப் பயன்படுத்திய டிராக்டரை மணலுடன் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து அவர்களைக் கைது செய்து, அவர்கள் மீது வழக்குப் பதிந்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆவின் ஆலையில் தீ விபத்து - ஒருவர் படுகாயம்