ETV Bharat / city

'வாழை கழிவுகளில் விமான பாகங்கள்' - புது யோசனை சொன்ன மயில்சாமி அண்ணாதுரை - Bodavur, Trichy district

திருச்சி: வாழை கழிவுகளை பயன்படுத்தி விமான பாகம் தயாரிக்கலாம் என்று விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

'வாழை கழிவுகளில் விமான பாகங்கள்'  - புது ஐடியா சொன்ன மயில்சாமி அண்ணாதுரை
'வாழை கழிவுகளில் விமான பாகங்கள்' - புது ஐடியா சொன்ன மயில்சாமி அண்ணாதுரை
author img

By

Published : Feb 13, 2021, 6:21 AM IST

திருச்சி மாவட்டம் போதாவூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வாழை தார்கள் அறுவடைக்கு பிறகு கிடைக்கும் கழிவுகளை பயன்படுத்தி ஆக்கப்பூர்வ பொருள்களாக மாற்றுவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கவுன்சிலின் துணைத் தலைவருமான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் பேசுகையில், "வாழையில் நிலையான கழிவு மேலாண்மைக்கு எனது பங்களிப்பு எப்போதும் உண்டு. வாழை அறுவடைக்கு பிறகு சுமார் 80 மில்லியன் டன் கழிவு பொருள்கள் வீணாகின்றன. மிகப்பெரிய தொழில்துறை இருந்த போதிலும் அது நன்கு பயன்படுத்தப்படுவதில்லை.

வாழை நாரை பிரித்து எடுத்த பிறகு உருவாக்கப்படும் கழிவுகளை பயன்டுத்தி ஒலி பேனல்கள், விமான பாகங்கள் தயாரிக்கலாம். பழங்கள், காய்கறிகள் விளைச்சலை அதிகரிப்பதற்கும், கார்பன் அளவைக் குறைப்பதற்கும் வாழைப்பட்டை சாறு ஒரு சிறந்த ஊட்டசத்தாகும்" என்றார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரையும், தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் உமாவும் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் இந்திய விவசாய பொறியியல் மையத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் ரவீந்திரன் நாயக், விஞ்ஞானி ரவி, சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருச்சி மாவட்டம் போதாவூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வாழை தார்கள் அறுவடைக்கு பிறகு கிடைக்கும் கழிவுகளை பயன்படுத்தி ஆக்கப்பூர்வ பொருள்களாக மாற்றுவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் இயக்குனரும், தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான கவுன்சிலின் துணைத் தலைவருமான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அவர் பேசுகையில், "வாழையில் நிலையான கழிவு மேலாண்மைக்கு எனது பங்களிப்பு எப்போதும் உண்டு. வாழை அறுவடைக்கு பிறகு சுமார் 80 மில்லியன் டன் கழிவு பொருள்கள் வீணாகின்றன. மிகப்பெரிய தொழில்துறை இருந்த போதிலும் அது நன்கு பயன்படுத்தப்படுவதில்லை.

வாழை நாரை பிரித்து எடுத்த பிறகு உருவாக்கப்படும் கழிவுகளை பயன்டுத்தி ஒலி பேனல்கள், விமான பாகங்கள் தயாரிக்கலாம். பழங்கள், காய்கறிகள் விளைச்சலை அதிகரிப்பதற்கும், கார்பன் அளவைக் குறைப்பதற்கும் வாழைப்பட்டை சாறு ஒரு சிறந்த ஊட்டசத்தாகும்" என்றார். இதனைத்தொடர்ந்து நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரையும், தேசிய வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் உமாவும் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் இந்திய விவசாய பொறியியல் மையத்தின் முதன்மை விஞ்ஞானி டாக்டர் ரவீந்திரன் நாயக், விஞ்ஞானி ரவி, சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.