ETV Bharat / city

வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை... ‘வா குவாட்டர் கட்டிங்’ என்றழைத்த நிறுவனம்!

பின்னலாடை நிறுவனங்களுக்கு பணியாள்கள் கிடைக்காத நிலையில், 'மதியம் கட்டிங், இரவு குவாட்டர்' எனப் பணியாளர்களைக் கவர ஒட்டப்பட்ட அதிரவைக்கும் விளம்பரத்தைத் தொடர்ந்து, பணிக்கு சேர ஆள்கள் திரண்ட ருசிகர சம்பவம் திருப்பூரில் நிகழ்ந்துள்ளது.

author img

By

Published : Jan 26, 2020, 1:42 PM IST

Updated : Jan 26, 2020, 3:15 PM IST

Pasted advertising to impress employees, tirupur textile industry offering liquor, offering liquor in their recruitment ads in tirupur, பேட்லாக் டைலர் தேவை, பேட்லாக் டெய்லர் தேவை, மதியம் ஒரு கட்டிங் இரவு ஒரு குவாட்டர்
பேட்லாக் டைலர் தேவை

திருப்பூர்: பின்னலாடை நிறுவனம் ஒன்று, தங்கள் நிறுவனத்தில் பணிக்கு ஆள் சேர்க்க ஒட்டிய விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பின்னலாடை நகரான திருப்பூரில் ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ஏற்றுமதியும், 18 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்றுவருகிறது. இங்குள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கு தற்பொழுது ஆள் பற்றாக்குறை நிலவிவருகிறது. பணியாளர்கள் வேலைக்கு வந்தாலும் பாதி நாள்கள் பணிபுரிந்து திரும்பி வராத சூழல் நிலவுகிறது.

‘நேர்மை, வாய்மை, தூய்மை’ - காமராஜரின் வாழ்க்கைப் பயணம் ஓர் பார்வை!

இதனால் முன்னதாக பெறப்பட்ட ஆர்டர்கள் முடித்து தரமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் தள்ளப்படுகின்றனர். இச்சூழலில் பொங்கல் பண்டிகை முடிந்ததும் பல நிறுவனங்களுக்கு போதிய ஆள்கள் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் பணம் அதிகம் வேண்டும் என்று பணியாளர்கள் பெற்றுக்கொண்டு, மதுபோதையில் வேலைக்கு வராமலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Pasted advertising to impress employees, tirupur textile industry offering liquor, offering liquor in their recruitment ads in tirupur, பேட்லாக் டைலர் தேவை, பேட்லாக் டெய்லர் தேவை, மதியம் ஒரு கட்டிங் இரவு ஒரு குவாட்டர்
விளம்பர சுவரொட்டி

இந்நிலையில், திருப்பூரில் உள்ள சிறு பின்னலாடை நிறுவன உரிமையாளர் பேட்லாக் என்னும் தையல் இயந்திரத்தை இயக்குவதற்கு ஆள்கள் தேவை எனப் பலமுறை தெரிவித்தும் கிடைக்காததால் பணிக்கு வருபவர்களுக்கு மதியம் கட்டிங்கும், இரவு குவாட்டரும், தேனீருக்கும் காசும் வழங்கப்படும் என சுவரொட்டி அடித்து ஒட்டியுள்ளார்.

மேரி கோமிற்கு பத்ம விபூஷன், பி.வி. சிந்துவிற்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு

இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் செந்தில்வேல் என்பவர், விளம்பரம் செய்த நபருக்கு தொலைபேசியில் அழைத்துப் பேசியபோது பலவிதமாக ஆள்கள் தேடிய நிலையில் யாரும் வரவில்லை எனவும் இந்த சுவரொட்டி விளம்பரம் ஒட்டிய சில மணி நேரங்களில் ஆள்கள் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

விளம்பரம் செய்த நபரின் குரல் பதிவு

தற்பொழுது இந்தச் சுவரொட்டி விளம்பரமும், பின்னலாடை நிறுவன உரிமையாளரின் குரல் பதிவும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

திருப்பூர்: பின்னலாடை நிறுவனம் ஒன்று, தங்கள் நிறுவனத்தில் பணிக்கு ஆள் சேர்க்க ஒட்டிய விளம்பரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பின்னலாடை நகரான திருப்பூரில் ஆண்டுக்கு 26 ஆயிரம் கோடி ஏற்றுமதியும், 18 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்றுவருகிறது. இங்குள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கு தற்பொழுது ஆள் பற்றாக்குறை நிலவிவருகிறது. பணியாளர்கள் வேலைக்கு வந்தாலும் பாதி நாள்கள் பணிபுரிந்து திரும்பி வராத சூழல் நிலவுகிறது.

‘நேர்மை, வாய்மை, தூய்மை’ - காமராஜரின் வாழ்க்கைப் பயணம் ஓர் பார்வை!

இதனால் முன்னதாக பெறப்பட்ட ஆர்டர்கள் முடித்து தரமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் தள்ளப்படுகின்றனர். இச்சூழலில் பொங்கல் பண்டிகை முடிந்ததும் பல நிறுவனங்களுக்கு போதிய ஆள்கள் கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும் பணம் அதிகம் வேண்டும் என்று பணியாளர்கள் பெற்றுக்கொண்டு, மதுபோதையில் வேலைக்கு வராமலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Pasted advertising to impress employees, tirupur textile industry offering liquor, offering liquor in their recruitment ads in tirupur, பேட்லாக் டைலர் தேவை, பேட்லாக் டெய்லர் தேவை, மதியம் ஒரு கட்டிங் இரவு ஒரு குவாட்டர்
விளம்பர சுவரொட்டி

இந்நிலையில், திருப்பூரில் உள்ள சிறு பின்னலாடை நிறுவன உரிமையாளர் பேட்லாக் என்னும் தையல் இயந்திரத்தை இயக்குவதற்கு ஆள்கள் தேவை எனப் பலமுறை தெரிவித்தும் கிடைக்காததால் பணிக்கு வருபவர்களுக்கு மதியம் கட்டிங்கும், இரவு குவாட்டரும், தேனீருக்கும் காசும் வழங்கப்படும் என சுவரொட்டி அடித்து ஒட்டியுள்ளார்.

மேரி கோமிற்கு பத்ம விபூஷன், பி.வி. சிந்துவிற்கு பத்ம பூஷண் விருது அறிவிப்பு

இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் செந்தில்வேல் என்பவர், விளம்பரம் செய்த நபருக்கு தொலைபேசியில் அழைத்துப் பேசியபோது பலவிதமாக ஆள்கள் தேடிய நிலையில் யாரும் வரவில்லை எனவும் இந்த சுவரொட்டி விளம்பரம் ஒட்டிய சில மணி நேரங்களில் ஆள்கள் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

விளம்பரம் செய்த நபரின் குரல் பதிவு

தற்பொழுது இந்தச் சுவரொட்டி விளம்பரமும், பின்னலாடை நிறுவன உரிமையாளரின் குரல் பதிவும் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

Intro:திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களுக்கு பணியாட்கள் கிடைக்காத நிலையில் மதியம் கட்டிங் இரவு குவாட்டர் என பணியாளர்களை கவர ஒட்டப்பட்ட விளம்பரத்தால் பரபரப்பு.Body:

பின்னலாடை நகரான திருப்பூரில் ஆண்டுக்கு 26,000 கோடி ஏற்றுமதியும் 18 ஆயிரம் கோடி உள்நாட்டு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இங்குள்ள பின்னலாடை நிறுவனங்களுக்கு தற்பொழுது ஆள் பற்றாக்குறை நிலவி வருகிறது. பணியாளர்கள் வேலைக்கு வந்தாலும் பாதி நாட்கள் பணிபுரிந்து திரும்பி வராத சூழல் நிலவுகிறது இதனால் முன்னதாக பெறப்பட்ட ஆர்டர்கள் முடிந்து தரமுடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் தள்ளப்படுகின்றனர் இந்நிலையில் பொங்கல் பண்டிகை முடிந்ததும் பல நிறுவனங்களுக்கு போதிய ஆட்கள் கிடைக்காத சூழ்நிலையில் திருப்பூரில் உள்ள சிறு பின்னலாடை நிறுவன உரிமையாளர் பேட்லாக் என்னும் தையல் இயந்திரத்தை இயக்குவதற்கு ஆட்கள் தேவை என பலமுறை தெரிவித்தும் ஆட்கள் கிடைக்காததால் பணிக்கு வருபவர்களுக்கு மதியம் இரவு குவாட்டர் மற்றும் டீ காசு வழங்கப்படும் என சுவரொட்டி அடித்து ஓட்டியுள்ளார். இதனைக் கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்தனர் இதுகுறித்து பின்னலாடை நிறுவன உரிமையாளர் செந்தில்வேல் என்பவர் அந்த நபருக்கு தொலைபேசியில் அழைத்துப் பேசிய போது பலவிதமாக ஆட்கள் தேடிய நிலையில் யாரும் வரவில்லை எனவும் இந்த சுவரொட்டி விளம்பரம் ஒட்டிய சில மணி நேரங்களில் ஆட்கள் வந்துவிட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தார். தற்பொழுது இந்த சுவரொட்டி விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.Conclusion:
Last Updated : Jan 26, 2020, 3:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.