தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தென்மண்டல காவல் துறைத் தலைவர் (ஐஜி) சண்முக ராஜேஸ்வரன் இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், அப்பதவியில் டாக்டர் எஸ். முருகன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது, சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு ஐஜியாக இருக்கிறார்.