ETV Bharat / city

உமறுப்புலவரின் 379ஆவது பிறந்தநாள் விழா - நினைவிடத்தில் மரியாதை

author img

By

Published : Oct 23, 2021, 8:10 PM IST

உமறுப்புலவரின் 379ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு எட்டயபுரத்தில் உள்ள நினைவிடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி, உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

உமறுப்புலவரின் 379ஆவது பிறந்தநாள் விழா
உமறுப்புலவரின் 379ஆவது பிறந்தநாள் விழா

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் சீறாப்புராணம் காப்பியம் எழுதிய தமிழறிஞர் அமுத கவி உமறுப் புலவரின் 379ஆவது பிறந்தநாள் விழா இன்று (அக்.23) கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நடந்த விழாவில், மக்களவை உறுப்பினர் கனிமொழி, மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி. சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர், உமறுப்புலவர் நினைவிடத்தில் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து, சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதையும் படிங்க: ‘திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை’ - அமைச்சர் சேகர்பாபு

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே எட்டயபுரத்தில் சீறாப்புராணம் காப்பியம் எழுதிய தமிழறிஞர் அமுத கவி உமறுப் புலவரின் 379ஆவது பிறந்தநாள் விழா இன்று (அக்.23) கொண்டாடப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தலைமையில் நடந்த விழாவில், மக்களவை உறுப்பினர் கனிமொழி, மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன், மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜீ.வி. மார்க்கண்டேயன், ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி. சண்முகையா, ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர், உமறுப்புலவர் நினைவிடத்தில் அனைவரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதையடுத்து, சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதையும் படிங்க: ‘திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி இல்லை’ - அமைச்சர் சேகர்பாபு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.