ETV Bharat / city

தொலைக்காட்சியில் மூழ்கிய பெற்றோர்; நீரில் மூழ்கிய குழந்தை! - அலட்சியத்தால் இன்னொரு இரண்டு வயதுக் குழந்தை பலி!

author img

By

Published : Oct 29, 2019, 9:44 AM IST

Updated : Oct 29, 2019, 10:00 AM IST

தூத்துக்குடி: சுஜித் மீட்புப் பணியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த பெற்றோரின் இரண்டு வயது பெண் குழந்தை, தண்ணீர்த் தொட்டியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அலட்சியத்தால் இன்னொரு இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு!

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் லிங்கேஸ்வரன், நிஷா தம்பதியினர். இவர்களது மகள் ரேவதி சஞ்சனா(2). இவர்கள் நேற்று மாலை தொலைக்காட்சியில் சுஜித் மீட்புப் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது குழந்தை சஞ்சனாவைக் காணவில்லை. இதனால் பதற்றமடைந்து அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

இந்நிலையில் லிங்கேஸ்வரன் தனது வீட்டின் குளியலறையைத் திறந்து பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை சஞ்சனா தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் மூச்சுப்பேச்சின்றி கிடந்துள்ளார்.

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க:

சுஜித்தை வைத்து தீபாவளியை மறைக்க முயலுகின்றனவா ஊடகங்கள்? - விளக்குகிறார் மூத்த ஊடகவியலாளர்

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் லிங்கேஸ்வரன், நிஷா தம்பதியினர். இவர்களது மகள் ரேவதி சஞ்சனா(2). இவர்கள் நேற்று மாலை தொலைக்காட்சியில் சுஜித் மீட்புப் பணிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது குழந்தை சஞ்சனாவைக் காணவில்லை. இதனால் பதற்றமடைந்து அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர்.

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு

இந்நிலையில் லிங்கேஸ்வரன் தனது வீட்டின் குளியலறையைத் திறந்து பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை சஞ்சனா தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் மூச்சுப்பேச்சின்றி கிடந்துள்ளார்.

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர், குழந்தையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்தினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்க:

சுஜித்தை வைத்து தீபாவளியை மறைக்க முயலுகின்றனவா ஊடகங்கள்? - விளக்குகிறார் மூத்த ஊடகவியலாளர்

Intro:தூத்துக்குடி: நடுகாட்டு சுர்ஜித் மீட்பு பணியை டிவியில் பார்த்து கொண்டிருந்த பெற்றோரின் மகள் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு.Body:தூத்துக்குடி: நடுகாட்டு சுர்ஜித் மீட்பு பணியை டிவியில் பார்த்து கொண்டிருந்த பெற்றோரின் மகள் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழப்பு.

தூத்துக்குடி


தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்தவர் லிங்கேஸ்வரன் இவரது மனைவி நிஷா. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுக்கு முன் திருமணம் நடைப்பெற்றது. இவர்களது மகள் ரேவதி சஞ்சனா (2 வயது ). மீனவரான லிங்கேஷ்வரன் இன்று மாலை வீட்டில் தனது மனைவியுடன் இன்று மாலை நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்பது தொடர்பாக மீட்பு பணிகளை டிவியில் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது தனது குழந்தை சஞ்சனா காணாமல் போகவே பதற்றமடைந்து அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார். இந்நிலையில் லிங்கேஸ்வரன் தனது வீட்டின் குளியலறையை திறந்து பார்த்தபோது அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் தலைக்குப்புற கவிழ்ந்த நிலையில் முச்சுப்பேச்சின்றி சஞ்சனா கிடப்பது தெரியவந்தது.


இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தை சஞ்சனாவை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனையில் குழந்தை சஞ்சனா ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசாரின் விசாரணையில், குளியலறையில் சிறுநீர் கழிப்பதற்காக சென்ற சிறுமி சஞ்சனா, தண்ணீர் ஊற்றுவதற்காக தொட்டிக்குள் தண்ணீர் எடுக்க முயன்றபோது கால் தவறி தலைகுப்புற உள்ளே விழுந்து மூச்சுத்திணறி இறந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்Conclusion:
Last Updated : Oct 29, 2019, 10:00 AM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.