ETV Bharat / city

'சிஏஏ சல்லடை போன்றது' - கனிமொழி எம்பி

author img

By

Published : Feb 2, 2020, 11:54 PM IST

Updated : Feb 3, 2020, 9:22 AM IST

தூத்துக்குடி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டமானது சல்லடை போன்றது என மக்களவை உறுப்பினர் கனிமொழி சாடியுள்ளார்.

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பரப்புரை
தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பரப்புரை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, விசிக, திக, முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கனிமொழி எம்பி கலந்துகொண்டு தனது கையெழுத்தை முதல் கையெழுத்தாகச் செலுத்தி, பொதுமக்களிடம் கையெழுத்துகளைப் பெற்றுத் தொடக்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், "இந்த நாட்டில் மக்களுக்கு எதிரான திட்டங்களைத் தொடர்ந்து பிஜேபி அரசு நிறைவேற்றி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாகவே போராடத் தொடங்கியுள்ளனர். இந்த அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் அவர்கள் அரசுக்கு விரோதமானவர்கள் என்று முடிவு செய்து விடுகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டமானது சல்லடை போன்றது. யார் யார் அந்த சல்லடையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் இந்த நாட்டின் குடிமக்களாக மத்திய அரசு அங்கீகரிக்கும்" என்றார்.

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பரப்புரை

தொடர்ந்து பேசிய அவர், "இந்தச் சட்டத்தின் மூலமாக அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதன் பாதிப்புகளைக் குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்கும் விதமாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பும் இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். எனவே, அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கலந்துகொண்டு கையெழுத்திட்டு அந்தக் கோப்பை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டும்" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், நாட்டின் எந்தப் பிரச்னைக்கான தீர்வையும் தராத நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. இந்த பட்ஜெட்டானது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைத்தான் மேலும் அதிகப்படுத்தும்" என்றார்.

இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, விசிக, திக, முஸ்லிம் லீக், மமக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதில் கனிமொழி எம்பி கலந்துகொண்டு தனது கையெழுத்தை முதல் கையெழுத்தாகச் செலுத்தி, பொதுமக்களிடம் கையெழுத்துகளைப் பெற்றுத் தொடக்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், "இந்த நாட்டில் மக்களுக்கு எதிரான திட்டங்களைத் தொடர்ந்து பிஜேபி அரசு நிறைவேற்றி வருகிறது. இதற்காக நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாகவே போராடத் தொடங்கியுள்ளனர். இந்த அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் அவர்கள் அரசுக்கு விரோதமானவர்கள் என்று முடிவு செய்து விடுகின்றனர். குடியுரிமை திருத்தச் சட்டமானது சல்லடை போன்றது. யார் யார் அந்த சல்லடையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் இந்த நாட்டின் குடிமக்களாக மத்திய அரசு அங்கீகரிக்கும்" என்றார்.

தூத்துக்குடியில் கனிமொழி எம்பி பரப்புரை

தொடர்ந்து பேசிய அவர், "இந்தச் சட்டத்தின் மூலமாக அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். அதன் பாதிப்புகளைக் குடியரசுத் தலைவருக்கு தெரிவிக்கும் விதமாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பும் இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். எனவே, அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கலந்துகொண்டு கையெழுத்திட்டு அந்தக் கோப்பை குடியரசுத் தலைவருக்கு அனுப்பவேண்டும்" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், "நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், நாட்டின் எந்தப் பிரச்னைக்கான தீர்வையும் தராத நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. இந்த பட்ஜெட்டானது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைத்தான் மேலும் அதிகப்படுத்தும்" என்றார்.

இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: மத்திய அரசின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

Intro:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நம் கடைசி மூச்சுவரை எதிர்க்க வேண்டும் - கனிமொழி எம்பி பேச்சு
Body:குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நம் கடைசி மூச்சுவரை எதிர்க்க வேண்டும் - கனிமொழி எம்பி பேச்சு

தூத்துக்குடி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் தூத்துக்குடியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை கனிமொழி எம்பி துவங்கி வைத்தார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் பிப்ரவரி 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை கையெழுத்து இயக்கம் நடத்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் தூத்துக்குடியில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் கையெழுத்து இயக்கம் துவங்கும் நிகழ்ச்சி சிதம்பரநகர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் தலைமையில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைசிறுத்தை கட்சி, திராவிடர் கழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்ட கையெழுத்து இயக்கத்தை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்பி கலந்து கொண்டு தனது கையெழுத்தை முதல் கையெழுத்தாக செலுத்தி, பொதுமக்களிடம் கையெழுத்துகளை பெற்று துவங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில்,

இந்த நாட்டில் மக்களுக்கு எதிரான திட்டங்களைத் தொடர்ந்து பிஜேபி அரசு நிறைவேற்றி வருகிறது. அதன்படி தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இந்த சட்டத் திருத்தத்திற்கு பிறகு நாடு முழுவதும் மக்கள் தன்னெழுச்சியாகவே போராடத் தொடங்கியுள்ளனர்.
இந்த அரசை எதிர்த்து யார் கேள்வி கேட்டாலும் அவர்கள் அரசுக்கு விரோதமானவர்கள் என்று முடிவு செய்து விடுகின்றனர். உதாரணமாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அனைத்து தரப்பு மக்களும் போராட்டத்தில் பங்கெடுத்தனர். அவர்களையெல்லாம் இந்த சட்டத்தின் மூலம் இந்த நாட்டின் குடிமக்கள் இல்லை என சொல்லிவிட முடியும். இதைபோல ஹைட்ரோ கார்பன் திட்டத்தை விவசாயிகள் எதிர்த்து வருகின்றனர். அவர்களை கூட தேசிய குடியுரிமை சட்டத்தின் கீழ் நாட்டின் குடிமக்கள் இல்லை என அறிவித்து விடலாம். இந்த சட்டமானது சல்லடை போன்றது. யார் யார் அந்த சல்லடையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களோ அவர்களுக்கு மட்டும்தான் இந்த நாட்டின் குடிமக்களாக மத்திய அரசு அங்கீகரிக்கும். மற்றவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை செய்யும். இந்த சட்டத்தின் மூலமாக அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.
எனவே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவினால் ஏற்படும் பாதிப்புகளை குடியரசு தலைவருக்கு தெரிவிக்கும் விதமாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று அனுப்பும் இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். எனவே அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்டு தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கையெழுத்திட்டு அந்த கோப்பை குடியரசு தலைவருக்கு அனுப்பவேண்டும்.

நேற்றையதினம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். மிக நீண்ட நேர பட்ஜெட் உரையாக அமைந்த அந்த நிதிநிலை அறிக்கை நாட்டின் எந்த பிரச்சினைக்கான தீர்வையும் தராத நிதிநிலை அறிக்கையாக அமைந்துள்ளது. கிராமப்புற பெண்கள் பெண்களுக்கு தினசரி வேலை வழங்கும் விதமாக கொண்டுவரப்பட்ட 100 நாள் வேலைத்திட்டத்திற்கு கிட்டத்தட்ட ரூபாய் 10 ஆயிரம் கோடி நிதியானது இந்த பட்ஜெட்டில் குறைக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெடானது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை தான் மேலும் அதிகப்படுத்தும். இவை தவிர எந்த வளர்ச்சியையும் அடுத்து தராது வேலையில்லா திண்டாட்டம், நிதிநிலை வீழ்ச்சி பொருளாதார வீழ்ச்சி அதிகரித்து வரும் நிலையில் இந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு திரும்பபெறும் வரையில், நம் கடைசி மூச்சு வரை எதிர்க்க வேண்டும் என்றார்.Conclusion:
Last Updated : Feb 3, 2020, 9:22 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.