ETV Bharat / city

7 அணிகள், 140 வீரர்கள்... துறைமுகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டி! - voc port football tournament

தூத்துக்குடி: ரூ.2,000 கோடி திட்டமதிப்பிலான வ.உ. சிதம்பரனார் துறைமுக வளர்ச்சிப் பணிகளை அடுத்த இரண்டாண்டுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக கால்பந்து போட்டியை தொடங்கிவைத்த பின்னர் துறைமுகத் தலைவர் டி.கே. ராமச்சந்திரன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Football match
author img

By

Published : Sep 26, 2019, 9:20 AM IST

இந்திய அளவில் பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் இன்று தொடங்கியது. போட்டிகளைத் துறைமுகத் தலைவர் டி.கே. ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், “இந்திய அளவில் உள்ள பெரிய துறைமுகங்களுக்கிடையேயான கால்பந்து போட்டி தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனார் துறைமுகம் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இதில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம், கொல்கத்தா, மும்பை, பாரதீப், கொச்சின் உள்பட 7 பெரிய துறைமுக அணிகளைச் சேர்ந்த 140 வீரர்கள் கலந்துகொள்வதற்காக வந்துள்ளனர். இந்தப் போட்டிகள் இன்று தொடங்கி 29ஆம் தேதிவரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.

பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டி

பசுமைக்காக தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் ஐந்து மெகாவாட் திறனுடைய சூரியசக்தி மின்விளக்கு நிறுவப்பட உள்ளது. 100 மீட்டர் உயரத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது.

140 கி.வா. மின் உற்பத்திக்கு மேற்கூரைகளில் சூரியசக்தி மின் உற்பத்தி தகடுகள் பதிக்க முயற்சி எடுத்துவருகிறோம். கடந்தாண்டு 34 மில்லியன் டன் அளவு சரக்கு கையாளப்பட்டது. இந்த ஆண்டு 40 மில்லியன் டன் அளவுக்குச் சரக்குகளைக் கையாள திட்டமிட்டுள்ளோம்.

துறைமுக நுழைவு வாயிலை 153 மீட்டரிலிருந்து 250 மீட்டராக அகலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த அனைத்து திட்டங்களும் ரூ.2000 கோடி செலவில் அடுத்த இரண்டு ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். சென்னை, மும்பை, புதுச்சேரி போன்ற இடங்களில் பயணிகள் கப்பல் போக்குவரத்து உள்ளது. தூத்துக்குடியிலும் பயணிகள் கப்பலை இயக்குவதற்கு திட்டங்கள் தீட்டிவருகிறோம்” என்றார்.

இந்திய அளவில் பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் இன்று தொடங்கியது. போட்டிகளைத் துறைமுகத் தலைவர் டி.கே. ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.

இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளிக்கையில், “இந்திய அளவில் உள்ள பெரிய துறைமுகங்களுக்கிடையேயான கால்பந்து போட்டி தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனார் துறைமுகம் மைதானத்தில் தொடங்கியுள்ளது.

இதில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம், கொல்கத்தா, மும்பை, பாரதீப், கொச்சின் உள்பட 7 பெரிய துறைமுக அணிகளைச் சேர்ந்த 140 வீரர்கள் கலந்துகொள்வதற்காக வந்துள்ளனர். இந்தப் போட்டிகள் இன்று தொடங்கி 29ஆம் தேதிவரை தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.

பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டி

பசுமைக்காக தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் ஐந்து மெகாவாட் திறனுடைய சூரியசக்தி மின்விளக்கு நிறுவப்பட உள்ளது. 100 மீட்டர் உயரத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது.

140 கி.வா. மின் உற்பத்திக்கு மேற்கூரைகளில் சூரியசக்தி மின் உற்பத்தி தகடுகள் பதிக்க முயற்சி எடுத்துவருகிறோம். கடந்தாண்டு 34 மில்லியன் டன் அளவு சரக்கு கையாளப்பட்டது. இந்த ஆண்டு 40 மில்லியன் டன் அளவுக்குச் சரக்குகளைக் கையாள திட்டமிட்டுள்ளோம்.

துறைமுக நுழைவு வாயிலை 153 மீட்டரிலிருந்து 250 மீட்டராக அகலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த அனைத்து திட்டங்களும் ரூ.2000 கோடி செலவில் அடுத்த இரண்டு ஆண்டுக்குள் முடிக்கத் திட்டமிட்டுள்ளோம். சென்னை, மும்பை, புதுச்சேரி போன்ற இடங்களில் பயணிகள் கப்பல் போக்குவரத்து உள்ளது. தூத்துக்குடியிலும் பயணிகள் கப்பலை இயக்குவதற்கு திட்டங்கள் தீட்டிவருகிறோம்” என்றார்.

Intro:ரூ.2,000 கோடி திட்டமதிப்பிலான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக வளர்ச்சிப் பணிகளை அடுத்த 2 ஆண்டுக்குள் முடிக்க திட்டம் - துறைமுகத் தலைவர் வி கே ராமச்சந்திரன் பேட்டி
Body:

தூத்துக்குடி

இந்திய அளவில் பெரிய துறைமுகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டியில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் இன்று தொடங்கியது. போட்டிகளை துறைமுகத் தலைவர் டி.கே.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

இந்திய அளவில் உள்ள பெரிய துறைமுகங்களுக்கிடையேயான கால்பந்து போட்டி தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனார் துறைமுகம் மைதானத்தில் தொடங்கியுள்ளது இதில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம், கொல்கத்தா, மும்பை, பாரதீப், கொச்சின் உள்பட 7 பெரிய துறைமுக அணி அணிகளைச் சேர்ந்த 140 வீரர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர். இந்த போட்டிகள் இன்று தொடங்கி 29 ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறுகிறது.

பசுமைக்காக, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 5 மெகாவாட் திறனுடைய சோலார் மின்விளக்கு நிறுவப்பட உள்ளது. 100 மீட்டர் உயரத்தில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. 140 கி.வா. மின் உற்பத்திக்கு மேற்கூரைகளில் சோலார் மின் உற்பத்தி தகடுகள் பதிக்க முயற்சி எடுத்து வருகிறோம். கடந்த ஆண்டு 34 மில்லியன் டன் அளவு சரக்கு கையாளப்பட்டது. இந்த ஆண்டு 40 மில்லியன் டன் அளவுக்கு சரக்குகளை கையாள திட்டமிட்டுள்ளோம்.

தூத்துக்குடி துறைமுகத்தை சரக்கு பெட்டக மாற்று முனையமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. துறைமுக சரக்கு இறங்குதளம், நுழைவுவாயில் ஆகியவற்றை ஆழப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது இதனால் பெரிய கப்பல்களும் உள்ளே வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

கொழும்பு துறைமுகம் போல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு இங்கிருந்து சரக்குகளை ஏற்றுமதி செய்யமுடியும். சரக்கு தளம் 9-ஐ பெட்டக மாற்று இறங்குதளமாக பயன்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த ஆண்டு சரக்குபெட்டக மாற்று விகிதம் 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
கூடுதலாக சரக்குமாற்றுத்தளங்களை அமைக்க ஏற்பாடு செய்து வருகிறோம்.
சரக்கு இறங்குதளம் ஆழப்படுத்தும் பணி தொடங்குவதற்கு விரைவில் டெண்டர் விடப்படும்.

துறைமுக நுழைவு வாயிலை 153 மீட்டரிலிருந்து இருந்து 250 மீட்டராக அகலப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த அனைத்து திட்டங்களும் ரூ.2000 கோடி செலவில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளோம். சென்னை, மும்பை, புதுச்சேரி போன்ற இடங்களில் பயணிகள் கப்பல் போக்குவரத்து உள்ளது. தூத்துக்குடியிலும் பயணிகள் கப்பலை இயக்குவதற்கு திட்டங்கள் தீட்டி வருகிறோம் என்றார்.

இந்நிகழ்ச்சியில் துறைமுக துணை தலைவர் வையாபுரி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.