ETV Bharat / city

தூத்துக்குடியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதிக்கு உற்சாக வரவேற்பு!

செஸ் ஒலிம்பியாட் போட்டியினை முன்னிட்டு தூத்துக்குடிக்கு வருகை தந்த தொடர் ஓட்ட ஜோதியை அரசு அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆகியோர் வரவேற்றனர்.

author img

By

Published : Jul 26, 2022, 3:22 PM IST

தூத்துக்குடியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி
தூத்துக்குடியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி

தூத்துக்குடி: சென்னை மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் ஒலிம்பியாட் ஜோதி எடுத்துச்செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, தொடர் ஓட்டமாக ஏந்தி வந்த ஜோதியை எட்டயபுரம் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலர் கணேசன், வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரி, பேரூராட்சித்தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் ஜோதியை வரவேற்றனர்.

மணிமண்டபத்திலிருந்து ஜோதிஓட்டமாக புறப்பட்டு, மெயின் பஜார், பாரதியார் இல்லம் வழியாக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மாணவ மாணவிகளுக்கு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் எடுத்துச்செல்லப்பட்டது. விளாத்திகுளத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு தீபத்தை சட்டப்பேரவை உறுப்பினர் மாா்க்கண்டேயன் தொடங்கி வைத்தாா்.

விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வைத்து சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு தீபத்தை ஏற்றி, விழிப்புணர்வு பேரணியைத்தொடங்கி வைத்து, தடகள வீரரிடம் தீபத்தை ஒப்படைத்தார்.

இதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் வைப்பாற்று பாலம் வரையில் ஒலிம்பியாட் தீபத்தை மாணவர்கள் அலுவலர்கள் அனைவரும் பேரணியாக கொண்டு சென்றனர். இதனையடுத்து தடகள வீரர்கள் ஒலிம்பியாட் தீபத்தை எட்டயபுரம் பகுதிக்குச் சாலை மார்க்கமாக எடுத்துச்சென்றனர்.

தூத்துக்குடியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் தொடர்: நேற்று ஒரே நாளில் 150 வெளிநாட்டு வீரர்கள் வருகை

தூத்துக்குடி: சென்னை மாமல்லபுரத்தில் நாளை மறுநாள் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதை ஒட்டி, தமிழ்நாடு முழுவதும் ஒலிம்பியாட் ஜோதி எடுத்துச்செல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, தொடர் ஓட்டமாக ஏந்தி வந்த ஜோதியை எட்டயபுரம் தேர்வு நிலை பேரூராட்சி அலுவலர் கணேசன், வட்டாட்சியர் கிருஷ்ணகுமாரி, பேரூராட்சித்தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் ஜோதியை வரவேற்றனர்.

மணிமண்டபத்திலிருந்து ஜோதிஓட்டமாக புறப்பட்டு, மெயின் பஜார், பாரதியார் இல்லம் வழியாக செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மாணவ மாணவிகளுக்கு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் எடுத்துச்செல்லப்பட்டது. விளாத்திகுளத்தில் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு தீபத்தை சட்டப்பேரவை உறுப்பினர் மாா்க்கண்டேயன் தொடங்கி வைத்தாா்.

விளாத்திகுளம் தாலுகா அலுவலகத்தில் வைத்து சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன் செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு தீபத்தை ஏற்றி, விழிப்புணர்வு பேரணியைத்தொடங்கி வைத்து, தடகள வீரரிடம் தீபத்தை ஒப்படைத்தார்.

இதனைத்தொடர்ந்து விளாத்திகுளம் வைப்பாற்று பாலம் வரையில் ஒலிம்பியாட் தீபத்தை மாணவர்கள் அலுவலர்கள் அனைவரும் பேரணியாக கொண்டு சென்றனர். இதனையடுத்து தடகள வீரர்கள் ஒலிம்பியாட் தீபத்தை எட்டயபுரம் பகுதிக்குச் சாலை மார்க்கமாக எடுத்துச்சென்றனர்.

தூத்துக்குடியில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி

இதையும் படிங்க: செஸ் ஒலிம்பியாட் தொடர்: நேற்று ஒரே நாளில் 150 வெளிநாட்டு வீரர்கள் வருகை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.