ETV Bharat / city

எட்டயபுரம் அருகே விபத்து! இருவர் உயிரிழப்பு!

தூத்துக்குடி: லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

author img

By

Published : Nov 9, 2019, 10:28 PM IST

Updated : Nov 9, 2019, 11:31 PM IST

எட்டயப்புரம் அருகே விபத்து! இருவர் உயிரிழப்பு!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பணிக்கன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜி (எ) நந்தகுமார் (40), வைத்தியநாதன் (48), பாலு (36), ராஜ் (36), செளத்ரி (28), ரமேஷ் (40), செந்தில்குமார் (35), ஓட்டுநர் பிராங்ளின் (32) ஆகியோர்.

இவர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு இன்னோவா காரில் சென்று கொண்டிருந்த போது எட்டயபுரம் அருகே கீழ ஈரால் பகுதியில் தூத்துக்குடி துறைமுகம் நோக்கி வந்த லாரி இவர்களின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் பிராங்ளின், நந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த ஆறு பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இதுகுறித்து எட்டயபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: வெங்காயத்தால் பெருங்'காயம்' அடையும் விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பணிக்கன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் விஜி (எ) நந்தகுமார் (40), வைத்தியநாதன் (48), பாலு (36), ராஜ் (36), செளத்ரி (28), ரமேஷ் (40), செந்தில்குமார் (35), ஓட்டுநர் பிராங்ளின் (32) ஆகியோர்.

இவர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு இன்னோவா காரில் சென்று கொண்டிருந்த போது எட்டயபுரம் அருகே கீழ ஈரால் பகுதியில் தூத்துக்குடி துறைமுகம் நோக்கி வந்த லாரி இவர்களின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் பிராங்ளின், நந்தகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த ஆறு பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இதுகுறித்து எட்டயபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்க: வெங்காயத்தால் பெருங்'காயம்' அடையும் விவசாயிகள்!

Intro:எட்டயபுரம் அருகே லாரி - கார் மோதி விபத்து : 2பேர் பலி - 6பேர் படுகாயம்
Body:தூத்துக்குடி

எட்டயபுரம் கீழ ஈரால் அருகே லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6பேர் படுகாயம் அடைந்தனர்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி பணிக்கன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 8பேர் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக இன்னோவா காரில் புறப்பட்டு வந்துள்ளனர். காரை அதே ஊரைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் பிராங்ளின் (32), என்பவர் ஓட்டி வந்தார். காரில், குமாரசாமி மகன் விஜி (எ) நந்தகுமார் (40), ராஜகோபால் மகன் வைத்தியநாதன் (48), செல்வராஜ் மகன் பாலு (36) அன்பழகன் மகன் ராஜ் (36), நடராஜன் மகன் செளத்ரி (28), ராமு மகன் ரமேஷ் (40), ராமசுந்திரம் மகன் செந்தில்குமார் (35) ஆகிய 8பேரும் வந்துள்ளனர்.

இன்று காலை எட்டயபுரம் அருகே கீழ ஈரால் பகுதியில் கார் வந்தபோது, நாமக்கல்லில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் நோக்கிச் சென்ற லாரியின் பின்புறம் கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் கார் டிரைவர் பிராக்ளின், விஜி (எ) நந்தகுமார் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். இதுகுறித்து எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.Conclusion:
Last Updated : Nov 9, 2019, 11:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.