ETV Bharat / city

நெல்லை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து: தம்பதி உயிரிழப்பு

author img

By

Published : Jul 29, 2022, 9:42 PM IST

நெல்லை கேடிசி நகர் மேம்பாலம் அருகே நான்கு வழிச்சாலையில் லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தம்பதி உயிரிழப்பு
தம்பதி உயிரிழப்பு

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அடுத்த ரஹ்மத் நகரை சேர்ந்தவர் அகஸ்டின் அந்தோணி ராஜ் (50) டெய்லராக பணிபுரிந்து வந்தார். தனது மனைவி கிரேஸ் பானுமதியோடு இன்று மாலை உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினர். கேடிசி நகர் அருகே நான்கு வழிச்சாலையின் சர்வீஸ் சாலையில் சென்றபோது எதிர் திசையில் நாகர்கோவிலில் பெயிண்ட் இறக்கிவிட்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக அந்தோணிராஜின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் உடனடியாக இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லை மாநகர கிழக்கு பகுதி துணை ஆணையர் ஸ்ரீனிவாசனும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

முதல்கட்ட விசாரணையில் அகஸ்டின் அந்தோணி ராஜ் ஹெல்மெட் அணியாமல் சென்றதும் நான்கு வழிச்சாலையில் தவறான பாதையில் சென்றதும் விபத்திற்கு காரணம் என தெரிகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலையே பலியான சம்பவம் அவர்களின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அடுத்த ரஹ்மத் நகரை சேர்ந்தவர் அகஸ்டின் அந்தோணி ராஜ் (50) டெய்லராக பணிபுரிந்து வந்தார். தனது மனைவி கிரேஸ் பானுமதியோடு இன்று மாலை உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பினர். கேடிசி நகர் அருகே நான்கு வழிச்சாலையின் சர்வீஸ் சாலையில் சென்றபோது எதிர் திசையில் நாகர்கோவிலில் பெயிண்ட் இறக்கிவிட்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக அந்தோணிராஜின் இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே கணவன், மனைவி இருவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த பாளையங்கோட்டை காவல்துறையினர் உடனடியாக இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெல்லை மாநகர கிழக்கு பகுதி துணை ஆணையர் ஸ்ரீனிவாசனும் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

முதல்கட்ட விசாரணையில் அகஸ்டின் அந்தோணி ராஜ் ஹெல்மெட் அணியாமல் சென்றதும் நான்கு வழிச்சாலையில் தவறான பாதையில் சென்றதும் விபத்திற்கு காரணம் என தெரிகிறது. இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலையே பலியான சம்பவம் அவர்களின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மதுரையில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.