ETV Bharat / city

‘இந்து மக்களின் பாதுகாவலர்கள் போல் நாடகமாடும் பாஜக’ - ஸ்டாலின் சாடல் - ஸ்டாலின்

நெல்லை: பாஜக கட்சி தங்கள் மீது எந்த ஒரு குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால், நாங்கள் இந்துமதத்திற்கு எதிராக செயல்படுவதாக பொய்யான பரப்புரையை ஆளும் கட்சிகள் மேற்கொண்டு வருவதாக ஸ்டாலின் தனது பரப்புரையில் தெரிவித்துள்ளார்.

முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரை பொதுகூட்டத்தில் பேசியது
author img

By

Published : Apr 9, 2019, 8:15 PM IST

நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் திமுக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அதில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாம் அனைத்து நாடாளுமன்ற தொகுதியிலும் அவசியம் வெற்றி பெறுவோம். திராவிட கழகத்தைக் கொச்சைப்படுத்த பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்து மதத்துக்கு எதிராக திமுக செயல்படுவதாக அவர்கள் அவதூறு பரப்பி வருகின்றனர். ஏதோ தாங்கள்தான் இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து தெளிவாகச் சொல்லி இருக்கிறோம் .

முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரை பொதுகூட்டத்தில் பேசியது

கோவில் சொத்துக்களைத் தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டவர் தலைவர் கலைஞர். கோவில் சொத்தை பாதுகாக்க முக்கிய நடவடிக்கை எடுத்தவர், நமது தலைவர் கலைஞர், அதிக கோவில்களில் குடமுழுக்கு நடத்தியவர் கலைஞர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர்.

மத்தியில் ஐந்தாண்டு கால ஆட்சி பொறுப்பில் இருக்கும் மோடி அவர்கள் வீட்டுக்குப் போக வேண்டும் அவரின் ஆட்சி அப்புறப்படுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளில் அவர் அளித்த உறுதி மொழிகள் எல்லாம் செயல்படுத்தப்பட்டு விட்டது என்று அவரால் கூற முடியுமா எடப்பாடி ஒரு விவசாயி என்று கூறுகிறார், அவர் ஒரு விவசாய நாட்டு மக்களின் பிரச்னையைத் தீர்த்து வைத்தாராம். ஆட்சி மாற்றம் வர திமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மைதீன்கான், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து தென்காசி தொகுதி வேட்பாளரை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொள்ள சங்கரன்கோவில் சென்றார்.

நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் திமுக கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு அதில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நாம் அனைத்து நாடாளுமன்ற தொகுதியிலும் அவசியம் வெற்றி பெறுவோம். திராவிட கழகத்தைக் கொச்சைப்படுத்த பாஜக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்து மதத்துக்கு எதிராக திமுக செயல்படுவதாக அவர்கள் அவதூறு பரப்பி வருகின்றனர். ஏதோ தாங்கள்தான் இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திமுகவின் தேர்தல் அறிக்கையில் இதுகுறித்து தெளிவாகச் சொல்லி இருக்கிறோம் .

முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரை பொதுகூட்டத்தில் பேசியது

கோவில் சொத்துக்களைத் தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டவர் தலைவர் கலைஞர். கோவில் சொத்தை பாதுகாக்க முக்கிய நடவடிக்கை எடுத்தவர், நமது தலைவர் கலைஞர், அதிக கோவில்களில் குடமுழுக்கு நடத்தியவர் கலைஞர். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தவர் தலைவர் கலைஞர்.

மத்தியில் ஐந்தாண்டு கால ஆட்சி பொறுப்பில் இருக்கும் மோடி அவர்கள் வீட்டுக்குப் போக வேண்டும் அவரின் ஆட்சி அப்புறப்படுத்த வேண்டும். ஐந்து ஆண்டுகளில் அவர் அளித்த உறுதி மொழிகள் எல்லாம் செயல்படுத்தப்பட்டு விட்டது என்று அவரால் கூற முடியுமா எடப்பாடி ஒரு விவசாயி என்று கூறுகிறார், அவர் ஒரு விவசாய நாட்டு மக்களின் பிரச்னையைத் தீர்த்து வைத்தாராம். ஆட்சி மாற்றம் வர திமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

இந்த கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மைதீன்கான், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து தென்காசி தொகுதி வேட்பாளரை ஆதரித்து அவர் பரப்புரை மேற்கொள்ள சங்கரன்கோவில் சென்றார்.

பாஜக கட்சி தங்கள் மீது எந்த ஒரு குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதால் நாங்கள் இந்துமத்த்திற்கு எதிராக செயல்படுவதாக பொய்யான பிரச்சாரத்தை தற்போது மேற்கொண்டு வருவதாக முகஸ்டாலின் குற்றம் சாட்டினார் மேலும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரும் என்றும் தெரிவித்தார்

நெல்லை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவுயத்தை ஆதரித்து பாளையங்கோட்டை பெல்மைதானத்தில் திமுக கட்சி சார்பில் பொதுகூட்டம் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றானார் அப்போது அவர் பேசும்போதுஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக பாடுபடும் இயக்கம் நா ங்கள் தான் என்ற ஒரே நம்பிக்கையில் உங்களிடம் ஓட்டு கேட்க வந்துள்ளேன் நம்மிடம் தலைவர் அவர்கள் இல்லை
அவர் இருத்திருந்தார் அவரே உங்களை நேரிடையாக சந்தித்து ஓட்டு கேட்க வந்திருப்பார்
கடந்த இருபது நாட்களாக நான் இந்த பயணத்தை தொடர்ந்து நடத்தி ஏறைக்குறைய 9 க்கு மேற்பட்ட தொகுதிகளில் பயணத்தை முடித்துவிட்டு இன்று நெல்லைக்கு வந்திருக்கிறேன்

நாம் அனைத்துசட்டமன்ற தொகுதியில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம்
திராவிட கழகத்தை கொச்சைப்படுத்த பிஜேபி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அவர்கள் எந்தக் குறையும் சொல்ல முடியவில்லை அதனால் அவர்கள் ஒரு அவதுறை பரப்புகிறார்கள் இந்து மதத்துக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற ஒரு அவதூறை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் ஏதோ தாங்கள் தான் இந்து மதத்தில் பாதுகாவலர்கள் என்று ஒரு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் திராவிட கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இது குறித்து தெளிவாக சொல்லி இருக்கிறோம் மதப் பாதுகாப்பு என்றும் எந்த ஒரு மதத்திற்கும் ஜாதிக்கும் திமுக எதிரானவர்கள் அல்ல இந்து மதத்திற்கு மட்டும் அல்ல எந்த மதத்திற்கும் ஏதிரானவர்கள் எதிரானவர்கள் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இந்து மதக் கோயில்களை பாதுகாக்க வேண்டும் என்று நாம் தேர்தல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்
கோவில் சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது என்று உத்தரவிட்டவர் தலைவர் கலைஞர் அவர்கள் கோவில் சொத்தை பாதுகாக்க முக்கிய நடவடிக்கை எடுத்தவர் நமது தலைவர் கலைஞர் அவர்கள் அதிக கோவில்களில் குடமுழுக்கு நடத்இயவர் கலைஞர் அவர்கள்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தவர் தலைவர் அவர்கள் ஆனால் சிலர் திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று கூறிக் கொள்கின்றனர் ஆனால் இதுபோன்ற விமர்சனங்களையும் அவமானம் தாண்டி திராவிட கட்சி வந்து கொண்டிருக்கிறது மத்தியில் ஐந்தாண்டு கால ஆட்சி பொறுப்பில் இருக்கும் மோடி அவர்கள் வீட்டுக்குப் போகவேண்டும் அவரின் ஆட்சி அப்புறப்படுத்த வேண்டும்
ஐந்து ஆண்டுகளில் அவர் அளித்த உறுதி மொழிகள் எல்லாம் செயல்படுத்தப்பட்டு விட்டது என்று அவரால் கூற முடியுமா எடப்பாடி ஒரு விவசாயி என்று கூறுகிறார் அவர் ஒரு விவவாயு நாட்டு மக்களின் பிரச்சனையைத் தீர்த்து வைத்தாராம் இப்படிப்பட்ட ஒரு கேவலமான மனிதர் தான் தற்போது தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார் என்று மக்கள் புரிந்து கொள்வார்கள் நான் தொடர்ந்து மூன்று கேள்விகளை ஆளுக்கு ஆட்சியை பார்த்து கேட்டுக் கொண்டிருக்கிறேன் அதற்கு எந்த பதிலும் இல்லை ஆனால் ஒரு கலவரத்தை தூண்டும் விதத்தில் தான் அவர் எங்களைப் பற்றி தவறான கருத்தைப் பரப்பி கொண்டிருக்கிறார்கள் என்றார் மக்கள் இதனை புரிந்து கொண்டு தமிழகத்திலும் மத்தியிலும் ஆட்சிமாற்றம் வர திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார் இந்த கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மைதீன்கான், அலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை, மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்து தென்காசி தொகுதி வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரம் செய்ய சங்கரன்கோவில் சென்றார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.