ETV Bharat / city

நெல்லை மாநகராட்சியைக் கைப்பற்றுகிறது திமுக! - DMK victory in nellai corporation

திருநெல்வேலி மாநகராட்சியை திமுக வேட்பாளர்கள் கைப்பற்றியுள்ளனர்.

நெல்லை மாநகராட்சியை கைப்பற்றுகிறது
நெல்லை மாநகராட்சியை கைப்பற்றுகிறது
author img

By

Published : Feb 22, 2022, 2:46 PM IST

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் என மொத்தம் காலியாக உள்ள 388 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்று இன்று (பிப்ரவரி 22) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நெல்லை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

குறிப்பாக நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் இதுவரை 21 வார்டுகள் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 18 இடங்களில் திமுக வெற்றிபெற்று முன்னிலை வகித்துவருகிறது.

எதிர்க்கட்சியான அதிமுக இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதேபோல் அம்பாசமுத்திரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ள நிலையில் 14 இடங்களில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வெற்றிபெற்று அம்பாசமுத்திரம் நகராட்சி அதிமுக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

அதேபோல் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ள நிலையில், எட்டு இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது. அங்கு அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

களக்காடு நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ள நிலையில், அங்கு 11 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் 10 இடங்களில் திமுக வேட்பாளர்கள் ஆறு இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். எனவே திமுக இங்கு சுயேச்சைகள் ஆதரவுடன் நகராட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிகிறது.

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் திமுக 10 இடங்களிலும், மணிமுத்தாறு பேரூராட்சியில் திமுக 11 இடங்களிலும், முக்கூடல் பேரூராட்சியில் திமுக எட்டு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் நெல்லையில் ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சிகள், 17 பேரூராட்சிகளையும் ஆளுங்கட்சியான திமுகவே கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது.

நெல்லை மாநகராட்சி ( மொத்தம் 55 வார்டுகள்)

திமுக கூட்டணி - 23

அதிமுக - 2

சுயேச்சை - 1

அம்பாசமுத்திரம் நகராட்சி ( மொத்தம் 21 )

திமுக கூட்டணி - 14

அதிமுக - 3

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ( மொத்தம் 21 )

திமுக - 8

அதிமுக - 1

சுயேச்சை - 3

களக்காடு நகராட்சி (மொத்தம் 27)

திமுக - 10

அதிமுக - 6

சுயேச்சை - 11

பிற நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சிகளில் பெரும்பாலும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிவரும் நிலையில் களக்காடு நகராட்சியில் சுயேச்சைகள் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் இங்கு திமுக இரண்டாவது இடத்தில் இருப்பதால் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் திமுக களக்காடு நகராட்சியைக் கைப்பற்றும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: திமுக மாபெரும் வெற்றி: ஸ்டாலினை சந்தித்து மூத்த நிர்வாகிகள் வாழ்த்து..

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி, 3 நகராட்சிகள், 17 பேரூராட்சிகள் என மொத்தம் காலியாக உள்ள 388 பதவிகளுக்குத் தேர்தல் நடைபெற்று இன்று (பிப்ரவரி 22) வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் நெல்லை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.

குறிப்பாக நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இதில் இதுவரை 21 வார்டுகள் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் 18 இடங்களில் திமுக வெற்றிபெற்று முன்னிலை வகித்துவருகிறது.

எதிர்க்கட்சியான அதிமுக இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இதேபோல் அம்பாசமுத்திரம் நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ள நிலையில் 14 இடங்களில் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வெற்றிபெற்று அம்பாசமுத்திரம் நகராட்சி அதிமுக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

அதேபோல் விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ள நிலையில், எட்டு இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது. அங்கு அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

களக்காடு நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ள நிலையில், அங்கு 11 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் 10 இடங்களில் திமுக வேட்பாளர்கள் ஆறு இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். எனவே திமுக இங்கு சுயேச்சைகள் ஆதரவுடன் நகராட்சியைக் கைப்பற்றும் எனத் தெரிகிறது.

கல்லிடைக்குறிச்சி பேரூராட்சியில் திமுக 10 இடங்களிலும், மணிமுத்தாறு பேரூராட்சியில் திமுக 11 இடங்களிலும், முக்கூடல் பேரூராட்சியில் திமுக எட்டு இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் நெல்லையில் ஒரு மாநகராட்சி, மூன்று நகராட்சிகள், 17 பேரூராட்சிகளையும் ஆளுங்கட்சியான திமுகவே கைப்பற்றும் சூழல் உருவாகியுள்ளது.

நெல்லை மாநகராட்சி ( மொத்தம் 55 வார்டுகள்)

திமுக கூட்டணி - 23

அதிமுக - 2

சுயேச்சை - 1

அம்பாசமுத்திரம் நகராட்சி ( மொத்தம் 21 )

திமுக கூட்டணி - 14

அதிமுக - 3

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி ( மொத்தம் 21 )

திமுக - 8

அதிமுக - 1

சுயேச்சை - 3

களக்காடு நகராட்சி (மொத்தம் 27)

திமுக - 10

அதிமுக - 6

சுயேச்சை - 11

பிற நகராட்சிகள், பேரூராட்சிகள், மாநகராட்சிகளில் பெரும்பாலும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிவரும் நிலையில் களக்காடு நகராட்சியில் சுயேச்சைகள் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும் இங்கு திமுக இரண்டாவது இடத்தில் இருப்பதால் சுயேச்சை வேட்பாளர்களின் ஆதரவுடன் திமுக களக்காடு நகராட்சியைக் கைப்பற்றும் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: திமுக மாபெரும் வெற்றி: ஸ்டாலினை சந்தித்து மூத்த நிர்வாகிகள் வாழ்த்து..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.