ETV Bharat / city

17 வயது சிறுமி கடத்தல் - இளைஞர் போக்சோவில் கைது!

author img

By

Published : Feb 3, 2020, 8:01 PM IST

சேலம்: 17 வயது சிறுமியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

youth arrested in pocso act, சேலம் சிறுமி கடத்தல், இளைஞர் போக்சோவில் கைது
இளைஞர் போக்சோவில் கைது

சேலம் மாவட்டம், நங்கவள்ளி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னசோரகை கிராமத்தில் வசிக்கும் சுப்பிரமணி என்பவரது மகன் பசுபதி(24). இவர் அங்குள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இச்சூழலில் அதே பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமியிடம், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, 27ஆம் தேதியன்று, அந்தச் சிறுமியை பசுபதி கடத்திச் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஜனவரி 29ஆம் தேதி ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

'போதை ஆசாமிகளிடம் இருந்து காப்பாற்றுங்கள்': பள்ளிக்குழந்தைகள் ஆட்சியரிடம் கண்ணீர் மல்கப் புகார்!

பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் காவல்துறை விசாரணை நடத்தியதில், சிறுமியை பசுபதி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இன்று ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் தீவிரமாக தேடி சிறுமியை மீட்டு, கடத்திச் சென்ற பசுபதியை கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தினர். பின்னர் ஓமலூர் கிளைச்சிறையில் அவரை அடைத்தனர்.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னசோரகை கிராமத்தில் வசிக்கும் சுப்பிரமணி என்பவரது மகன் பசுபதி(24). இவர் அங்குள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இச்சூழலில் அதே பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமியிடம், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, 27ஆம் தேதியன்று, அந்தச் சிறுமியை பசுபதி கடத்திச் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், ஜனவரி 29ஆம் தேதி ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

'போதை ஆசாமிகளிடம் இருந்து காப்பாற்றுங்கள்': பள்ளிக்குழந்தைகள் ஆட்சியரிடம் கண்ணீர் மல்கப் புகார்!

பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் காவல்துறை விசாரணை நடத்தியதில், சிறுமியை பசுபதி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து இன்று ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் தீவிரமாக தேடி சிறுமியை மீட்டு, கடத்திச் சென்ற பசுபதியை கைது செய்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தினர். பின்னர் ஓமலூர் கிளைச்சிறையில் அவரை அடைத்தனர்.

Intro:17வயது சிறுமியை கடத்திய
இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

Body:
சேலம் மாவட்டம், நங்கவள்ளி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சின்னசோரகை கிராமத்தில் வசிப்பவர் சுப்பிரமணி என்பவரது மகன் பசுபதி(24) .

இவர் அங்குள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17வயது சிறுமியிடம், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார்.

இதைத்தொடர்ந்து கடந்த 27ம் தேதி அன்று, அந்தச் சிறுமியை பசுபதி கடத்திச் சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் மகளை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், சென்ற ஜனவரி 29ம் தேதி ஓமலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் காவல்துறை விசாரணையில் சின்னசோரகை பகுதியை சேர்ந்த பசுபதி என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து இன்று ஓமலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் தீவிரமாக தேடி சிறுமியை கடத்தி சென்ற பசுபதியை கைது செய்து போச்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து குற்றவியல் நடுவர் முன் ஆஜர்படுத்தினர்.

Conclusion:
பின்னர் ஓமலூர் பசுபதியை கிளைச்சிறையில் போலீசார் அடைத்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.