ETV Bharat / city

அனுமதியின்றி இயங்கிவந்த சாயப்பட்டறைகள் அகற்றம்: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி - மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

சேலம்: அனுமதியின்றி இயங்கிவந்த சாயப்பட்டறைகளை இடித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

சாயப்பட்டறைகள் அகற்றம்
author img

By

Published : Nov 14, 2019, 1:09 PM IST

சேலம் மாநகர எல்லைக்குள்பட்ட குகை பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பாக சாயப்பட்டறைகள் இயங்கிவருவதாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

தொடர்ந்து, சேலம் அடுத்த களரம்பட்டியில் உள்ள ஜி.கே. கலர்ஸ் சாயப்பட்டறையிலிருந்து சாயக் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாகவும் அது திருமணிமுத்தாற்றில் கலந்துவிடப்படுவதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சாயப்பட்டறைகள் அகற்றம்

இதையடுத்து சம்பவ இடம் சென்ற அலுவலர்கள், ஜி.கே. கலர்ஸ் சாயப்பட்டறையை இடித்து அகற்றியதோடு ஆலைக்கு வழங்கப்பட்டுவந்த மின்சார இணைப்பையும் துண்டித்தனர். மேலும், ஆலை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

இதேபோல், சீலநாயக்கன்பட்டியில் இயங்கிவந்த வெங்கடேசன் டையிங், களரம்பட்டி வெங்கடதாஸ் டையிங், ஸ்ரீ கணேஷ் டையிங் ஆகிய சாயப்பட்டறைகளும் அகற்றப்பட்டன.

சேலம் மாநகர எல்லைக்குள்பட்ட குகை பகுதியில் அரசு அனுமதியின்றி சட்டத்துக்கு புறம்பாக சாயப்பட்டறைகள் இயங்கிவருவதாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

தொடர்ந்து, சேலம் அடுத்த களரம்பட்டியில் உள்ள ஜி.கே. கலர்ஸ் சாயப்பட்டறையிலிருந்து சாயக் கழிவுநீர் வெளியேற்றப்படுவதாகவும் அது திருமணிமுத்தாற்றில் கலந்துவிடப்படுவதாகவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சாயப்பட்டறைகள் அகற்றம்

இதையடுத்து சம்பவ இடம் சென்ற அலுவலர்கள், ஜி.கே. கலர்ஸ் சாயப்பட்டறையை இடித்து அகற்றியதோடு ஆலைக்கு வழங்கப்பட்டுவந்த மின்சார இணைப்பையும் துண்டித்தனர். மேலும், ஆலை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.

இதேபோல், சீலநாயக்கன்பட்டியில் இயங்கிவந்த வெங்கடேசன் டையிங், களரம்பட்டி வெங்கடதாஸ் டையிங், ஸ்ரீ கணேஷ் டையிங் ஆகிய சாயப்பட்டறைகளும் அகற்றப்பட்டன.

Intro:
சேலத்தில் அரசு அனுமதி இன்றி
சட்டவிரோதமாக இயங்கி வந்த சாயப் பட்டறைகள் இடித்து அகற்றி , மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளனர்.Body:

சேலம் மாநகர எல்லைக்குள் உள்ள குகை பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக சாய ஆலைகள் இயங்கி வருவதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.


இந்நிலையில் சேலம் அடுத்த களரம்பட்டியில் உள்ள ஜி.கே. கலர்ஸ் சாய ஆலையில் இருந்து பெருமளவில் சாயக் கழிவு நீர் வெளியேற்றப்படுவதாகவும் அது திருமணிமுத்தாற்றில் கலந்து விடப்படும் தாகவும் சமூக ஆர்வலர்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அப்பகுதியில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பு செய்து, சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த சாய ஆலையைக் கண்டுபிடித்தனர்.

சாயப் பட்டறையில் இருந்து பி.வி.சி.பைப்புகள் அமைத்து சாயக் கழிவு நீரை, திருமணிமுத்தாற்றில் கலந்து விடப்படுவதைக் கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து அந்த ஆலையை இடித்து அகற்றிய அதிகாரிகள், ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த மின்சார இணைப்பையும் துண்டித்தனர்.

மேலும் அனுமதியின்றி சாயப்பட்டறை யை நீக்கி வந்த உரிமையாளர் மீது தடவும் சட்டரீதியிலான கடும் நடவடிக்கை எடுக்கவும் சேலம் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.


Conclusion:இதேபோல
சீலநாயக்கன்பட்டியில் இயங்கி வந்த வெங்கடேசன் டையிங், களரம்பட்டி வெங்கடதாஸ் டையிங், மற்றும் ஸ்ரீ கணேஷ் டையிங் ஆகிய அனுமதி இல்லாத சாய ஆலைகளும் அகற்றப்பட்டது.

மேலும் சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அனுமதி இல்லாத சாய ஆலைகள் ஏதேனும் இயங்கி வருகிறது மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தீவிரமாக கண்காணிப்பு சோதனை நடத்தி வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.