ETV Bharat / city

நாம் தமிழர் கட்சியிலிருந்து திருநங்கை தேவி விலகல் - Transgender devi deviate from Naam Tamilar Katchi

சேலம்: கடந்த 2016ம் ஆண்டு ஆர் கே நகர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட திருநங்கை தேவி நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

தாய்மடி அறக்கட்டளை இயக்குனர் திருநங்கை தேவி
author img

By

Published : Sep 20, 2019, 9:43 AM IST

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த தாய்மடி அறக்கட்டளை இயக்குனர் திருநங்கை தேவி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லை. நான், நாம் தமிழர் கட்சியில் இணைந்த பிறகு தாய்மடி அறக்கட்டளையின் மூலமாக ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்ய இயலவில்லை. நிதி உதவி கேட்க சென்றால் நீங்கள் அரசியல் கட்சியில் தானே இருக்கிறீர்கள் என்று கேட்டு புறக்கணிக்கிறார்கள். இதனால் ஆதரவற்றவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதை தொடர முடிவு செய்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்" என்றார்.

திருநங்கை தேவி பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர் கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட எனக்கு சீமான் வாய்ப்பளித்தார்.திருநங்கைகளுக்கான அங்கீகாரத்தை கொடுத்த சீமான் அண்ணனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சேலம் மட்டுமல்லாது தர்மபுரி ,கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் எனது தாய்மடி அறக்கட்டளை சார்பில் கிளைகள் அமைக்கப்பட்டு ஆதரவற்றோருக்கு உதவி செய்திட முடிவெடுத்துள்ளேன். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த தாய்மடி அறக்கட்டளை இயக்குனர் திருநங்கை தேவி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லை. நான், நாம் தமிழர் கட்சியில் இணைந்த பிறகு தாய்மடி அறக்கட்டளையின் மூலமாக ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்ய இயலவில்லை. நிதி உதவி கேட்க சென்றால் நீங்கள் அரசியல் கட்சியில் தானே இருக்கிறீர்கள் என்று கேட்டு புறக்கணிக்கிறார்கள். இதனால் ஆதரவற்றவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதை தொடர முடிவு செய்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்" என்றார்.

திருநங்கை தேவி பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர் கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட எனக்கு சீமான் வாய்ப்பளித்தார்.திருநங்கைகளுக்கான அங்கீகாரத்தை கொடுத்த சீமான் அண்ணனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் சேலம் மட்டுமல்லாது தர்மபுரி ,கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் எனது தாய்மடி அறக்கட்டளை சார்பில் கிளைகள் அமைக்கப்பட்டு ஆதரவற்றோருக்கு உதவி செய்திட முடிவெடுத்துள்ளேன். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

இதையும் படியுங்க:

இந்தியா விற்பனைக்கு வந்து 15ஆண்டுகள் ஆகிறது - நாம் தமிழர் சீமான்!

பாஜகவை வெளுத்து வாங்கிய சீமான்!

Intro:நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக திருநங்கை தேவி தெரிவித்துள்ளார்.


Body:சேலத்தில் இன்று தாய்மடி அறக்கட்டளை இயக்குனர் திருநங்கை தேவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்," அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பகத்தன்மை இல்லை.

நாம் தமிழர் கட்சியில் இணைவதற்கு முன்பாக நான் தொடங்கிய தாய்மடி அறக்கட்டளையின் மூலமாக ஆதரவற்றவர்களுக்கு சேவை செய்ய தற்போது இயலவில்லை.

நிதி உதவி கேட்க சென்றால் நீங்கள் அரசியல் கட்சியில் தானே இருக்கிறீர்கள் என்று கேட்டு புறக்கணிக்கிறார்கள். இதனால் ஆதரவற்றவர்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதை தொடர முடிவு செய்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன் .

கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர் கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட எனக்கு சீமான் வாய்ப்பளித்தார்.

திருநங்கைகளுக்கு அங்கீகாரத்தை அவர்தான் கொடுத்தார் இந்த அரசியல் அங்கீகாரம் அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும் எனது விலகல் குறித்து சீமானிடம் தெரிவித்திருக்கிறேன் . சேலம் மட்டுமல்லாது தர்மபுரி ,கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் எனது தாய்மடி அறக்கட்டளை சார்பில் கிளைகள் அமைக்கப்பட்டு ஆதரவற்றோருக்கு உதவி செய்திட முடிவெடுத்துள்ளேன். அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.


Conclusion:திருநங்கை தேவி சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் .இவர் நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறையில் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.