ETV Bharat / city

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி - ஏற்காடு வட்டார சேவை மையம் புதுப்பிப்பு!

சேலம்: கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி ஈடிவி பாரத் தளத்தில் வெளியான செய்தியின் எதிரொலியாக குப்பை கிடங்காக இருந்த ஏற்காடு வட்டார சேவை மையம் தற்போது குப்பைகள் அகற்றப்பட்டு புதிப்பிக்கப்படும் பணி நடைபெற்று வருகிறது.

Yercaud regional service center
author img

By

Published : Sep 6, 2019, 9:03 AM IST

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஏற்காடு நுழைவுப் பகுதியில் கடந்த சில மாதங்களாக துர்நாற்றம் வீசுவதாக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

ஆனால் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் எதிர்புறம் மலைபோல் குப்பை கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வந்தது. அந்த குப்பை கழிவுகளில் கால்நடைகள் தினமும் மேய்வது வழக்கமாக இருந்தது.ஏற்காடு டவுன் பகுதிகளில் இயங்கி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்படும் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் இந்தப் பகுதியில் தொடர்ந்து கொட்டப்படுகிறது.

இதனால் கடுமையான துர்நாற்றம் அப்பகுதியில் வீசுவது வாடிக்கையாக மாறிவிட்டது. கடந்த 2013 14 ஆம் ஆண்டு 40 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ஏற்காடு வட்டார வள சேவை மையம் கட்டப்பட்டது. இதனை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கணொளி மூலம் திறந்து வைத்தார். இந்தப் புதிய கட்டடம் செயல்படாமல் பூட்டி வைக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக மாட்டுத் தொழுவமாகவும், குப்பைக் கிடங்காகவும் மாறிப்போனது.

ஈ - டிவி பாரத் செய்தியின் எதிரொலி

இந்த அவல நிலை குறித்து ஈடிவி பாரத் தளம் செய்தி வெளியிட்டது. அச்செய்தி ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலர், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.ஏற்காடு வட்டார வள சேவை மையத்தின் அவல நிலையை மாற்றி, கட்டடம் புதுப்பிக்கப்பட்டு எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறும் வகையில், அரசு மக்கள் பயன்பாட்டிற்கு புதிய கட்டடம் வழங்கப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்து அதற்கான பணியை இன்று தொடங்கி உள்ளனர்.

yercaud  salem  குப்பை கழிவுகள்  Garbage wastes  ஏற்காடு  சேலம்  Yercaud regional service center  ஏற்காடு வட்டார சேவை மையம்
வட்டார சேவை மையம் புதுப்பிக்கும் பணி

இதானல், மிக விரைவில் வட்டார வள மைய கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது ஏற்காடு வாசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல குப்பை கிடங்கு பிரச்சனை மிக விரைவில் தீர்க்கப்பட்டு, கழிவுகளிலிருந்து பயோ கேஸ் தயாரிக்கப்பட்டு, அதுவும் மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் சில வாரங்களில் கொண்டு வரப்படும் என்றும் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. சேலம் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், ஏற்காடு நுழைவுப் பகுதியில் கடந்த சில மாதங்களாக துர்நாற்றம் வீசுவதாக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

ஆனால் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் எதிர்புறம் மலைபோல் குப்பை கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வந்தது. அந்த குப்பை கழிவுகளில் கால்நடைகள் தினமும் மேய்வது வழக்கமாக இருந்தது.ஏற்காடு டவுன் பகுதிகளில் இயங்கி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்படும் உணவு கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகள் இந்தப் பகுதியில் தொடர்ந்து கொட்டப்படுகிறது.

இதனால் கடுமையான துர்நாற்றம் அப்பகுதியில் வீசுவது வாடிக்கையாக மாறிவிட்டது. கடந்த 2013 14 ஆம் ஆண்டு 40 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக ஏற்காடு வட்டார வள சேவை மையம் கட்டப்பட்டது. இதனை மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கணொளி மூலம் திறந்து வைத்தார். இந்தப் புதிய கட்டடம் செயல்படாமல் பூட்டி வைக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக மாட்டுத் தொழுவமாகவும், குப்பைக் கிடங்காகவும் மாறிப்போனது.

ஈ - டிவி பாரத் செய்தியின் எதிரொலி

இந்த அவல நிலை குறித்து ஈடிவி பாரத் தளம் செய்தி வெளியிட்டது. அச்செய்தி ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலர், ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.ஏற்காடு வட்டார வள சேவை மையத்தின் அவல நிலையை மாற்றி, கட்டடம் புதுப்பிக்கப்பட்டு எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறும் வகையில், அரசு மக்கள் பயன்பாட்டிற்கு புதிய கட்டடம் வழங்கப்படும் என அலுவலர்கள் உறுதி அளித்து அதற்கான பணியை இன்று தொடங்கி உள்ளனர்.

yercaud  salem  குப்பை கழிவுகள்  Garbage wastes  ஏற்காடு  சேலம்  Yercaud regional service center  ஏற்காடு வட்டார சேவை மையம்
வட்டார சேவை மையம் புதுப்பிக்கும் பணி

இதானல், மிக விரைவில் வட்டார வள மைய கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது ஏற்காடு வாசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல குப்பை கிடங்கு பிரச்சனை மிக விரைவில் தீர்க்கப்பட்டு, கழிவுகளிலிருந்து பயோ கேஸ் தயாரிக்கப்பட்டு, அதுவும் மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் சில வாரங்களில் கொண்டு வரப்படும் என்றும் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உறுதியளித்துள்ளனர்.

Intro:குப்பை கிடங்காக இருந்த ஏற்காடு வட்டார சேவை மையத்தின் புதிய கட்டடம் குறித்து இ - டிவி பாரத் சார்பில் சென்ற ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.

இந்த செய்தியின் எதிரொலியாக ஏற்காடு வட்டார வள சேவை மையத்தின் புதிய கட்டடம் தற்போது குப்பைகள் அகற்றப்பட்டு புதிப்பிக்கப் படும் பணி நடைபெற்று வருகிறது.


Body:சேலம் மாவட்டத்தின் பிரதான சுற்றுலாத் தலமான ஏற்காட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஏற்காடு நுழைவு பகுதியில் கடந்த சில மாதங்களாக துர்நாற்றம் வீசுவதாக சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் எதிர்புறம் மலைபோல் குப்பை கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டப்பட்டு வந்தது. அந்த குப்பை கழிவுகளில் கால்நடைகள் தினமும் மேய்வது வழக்கமாக இருந்தது.

ஏற்காடு டவுன் பகுதிகளில் இயங்கி வரும் நூற்றுக்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் தனியார் ரிசார்ட்டுகள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்படும் உணவு கழிவுகள் பிளாஸ்டிக் குப்பைகள் இந்தப் பகுதியில் தொடர்ந்து கொட்டப்படுகிறது. இதனால் கடுமையான துர்நாற்றம் அந்தப்பகுதியில் இருந்து வீசுவது வாடிக்கையாக மாறிவிட்டது.

மேலும் அதே பகுதியில் கடந்த 2013 14 ஆம் ஆண்டில் ரூபாய் 40 லட்சம் செலவில் புதிதாக ஏற்காடு வட்டார வள சேவை மையம் கட்டப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் வீடியோ கான்பரன்சிங் மூலம் அந்தக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது.

ஆண்டுகள் ஐந்துக்கு மேலாகியும், இந்தப் புதிய கட்டடம் செயல்படாமல் பூட்டி வைக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக மாட்டுத் தொழுவமாகவும், குப்பைக் கிடங்காகவும் மாறிப்போனது.

இந்த அவல நிலை குறித்து இ - டிவி பாரத் மூலம் செய்தி வெளியிடப்பட்டு, ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலர் மற்றும் ஏற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இதனையடுத்து ஏற்காடு வட்டார வள சேவை மையத்தின் அவல நிலையை மாற்றி, கட்டடம் புதுப்பிக்கப்பட்டு எந்த நோக்கத்திற்காக கட்டப்பட்டதோ, அந்த நோக்கம் நிறைவேறும் வகையில், அரசு , மக்கள் பயன்பாட்டிற்கு புதிய கட்டடம் வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்து அதற்கான பணியை இன்று தொடங்கி உள்ளனர்.

இதனையடுத்து மிக விரைவில் வட்டார வள மைய கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது ஏற்காடு வாசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Conclusion:அதேபோல குப்பை கிடங்கு பிரச்சனை மிக விரைவில் தீர்க்கப்பட்டு, கழிவுகளிலிருந்து பயோ கேஸ் தயாரிக்கப்பட்டு, அதுவும் மக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் சில வாரங்களில் கொண்டு வரப்படும் என்றும் ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.