ETV Bharat / city

'அதிமுகவின் முககவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ் முகமே தெரியும்' - சேலத்தில் பேசிய ராகுல் காந்தி

அதிமுகவின் முககவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ், பாஜகவின் முகமே தெரியும் என்றும் பழைய அதிமுக இறந்துவிட்டது, இப்போது இருப்பது பாஜக இயக்கும் ஒரு அமைப்பு எனவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்.

சேலத்தில் ராகுல் காந்தி உரை
சேலத்தில் ராகுல் காந்தி உரை
author img

By

Published : Mar 29, 2021, 3:04 AM IST

சேலம்: சீலநாயக்கன்பட்டி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் காந்தி, "இந்தியாவை ஒற்றை சிந்தனையில் தள்ளும் முயற்சி ஏற்புடையதல்ல. ஒற்றை சிந்தனை என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. தமிழ் கலாசாரம், மொழி மீது முழுமையான தாக்குதலை சந்தித்து கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் மீதான தாக்குதலை நான் ஒட்டு மொத்த இந்தியா மீதான தாக்குதலாக பார்க்கிறேன்.

அதிமுகவின் முககவசம்.. ஆர்எஸ்எஸின் முகம்..

திராவிட கழக தலைவர், வீரமணி பேசும் போது, கரோனா நேரத்தில் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற சிறந்த கருத்தை சொன்னார். முககவசம் அணிவதால் ஒருவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. இப்போது தமிழ்நாட்டில் இருப்பது பழைய அதிமுக இல்லை; அதிமுக முககவசம் அணிந்துள்ளது. அதிமுகவின் முககவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ், பாஜகவின் முகமே தெரியும். பழைய அதிமுக இறந்து விட்டது. இப்போது இருப்பது பாஜக இயக்கும் ஒரு அமைப்பாக உள்ளது.

சேலத்தில் ராகுல் காந்தி உரை

மோடி முன்பு தலைகுனிந்து நிற்க தமிழன் விரும்பவில்லை

ஒரு தமிழன் கூட மோடி முன்பு தலைகுனிந்து நிற்க விரும்பவில்லை; இந்த நிலையில் முதலமைச்சர் ஏன் மோடி, அமித்ஷா காலடியில் கிடக்க வேண்டும். ஏன் முதலமைச்சர் தலைகுனிந்து நிற்கிறார் என்றால் புலனாய்வுதுறை, வருமான வரித்துறை மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளது. முதலமைச்சர் ஒவ்வொரு முறை தலைகுனிந்து நிற்பதற்கும் ஒரு விலையை கொடுத்தாக வேண்டும். மோடியும், அமித்ஷாவும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற அனுமதியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். ஆர்எஸ்எஸ், பாஜகவை உள்ளே நுழையவிடாமல் தடுக்க வேண்டும்.

தேர்தலே தேவையில்ல.. ஸ்டாலினே முதலமைச்சர்..

இங்கு தேர்தலே தேவையில்லை; தேர்தலை சந்திக்காமலே ஸ்டாலின் முதலமைச்சராவார் என்ற நிலை உள்ளது. தமிழர்களுடன் எனது உறவு மிக எளிமையானது. அந்த உறவை என் பாட்டி, தந்தையாருடன் வந்த போது பார்த்திருக்கிறேன். குறைந்தபட்ச அன்பை காட்டினால் பேரன்பை தமிழர்கள் காட்டுபவர்கள். இதை மோடியும் ஆர்எஸ்எஸூம் உணர்ந்து கொள்ளவில்லை. தமிழர்கள் மனதில் இடம்பிடிக்க ஒரே வழி அன்பு, பாசம், மரியாதை மட்டுமே. இதை தேர்தலுக்கு பின்பு பாஜகவுக்கு புரிய வைப்போம்" என்றார்.

சேலம்: சீலநாயக்கன்பட்டி பகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோர் ஒரே மேடையில் பரப்புரை மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் காந்தி, "இந்தியாவை ஒற்றை சிந்தனையில் தள்ளும் முயற்சி ஏற்புடையதல்ல. ஒற்றை சிந்தனை என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். இந்தியா பன்முகத் தன்மை கொண்ட நாடு. தமிழ் கலாசாரம், மொழி மீது முழுமையான தாக்குதலை சந்தித்து கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் மீதான தாக்குதலை நான் ஒட்டு மொத்த இந்தியா மீதான தாக்குதலாக பார்க்கிறேன்.

அதிமுகவின் முககவசம்.. ஆர்எஸ்எஸின் முகம்..

திராவிட கழக தலைவர், வீரமணி பேசும் போது, கரோனா நேரத்தில் முககவசம் அணிந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற சிறந்த கருத்தை சொன்னார். முககவசம் அணிவதால் ஒருவர் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை. இப்போது தமிழ்நாட்டில் இருப்பது பழைய அதிமுக இல்லை; அதிமுக முககவசம் அணிந்துள்ளது. அதிமுகவின் முககவசத்தை அகற்றினால் ஆர்எஸ்எஸ், பாஜகவின் முகமே தெரியும். பழைய அதிமுக இறந்து விட்டது. இப்போது இருப்பது பாஜக இயக்கும் ஒரு அமைப்பாக உள்ளது.

சேலத்தில் ராகுல் காந்தி உரை

மோடி முன்பு தலைகுனிந்து நிற்க தமிழன் விரும்பவில்லை

ஒரு தமிழன் கூட மோடி முன்பு தலைகுனிந்து நிற்க விரும்பவில்லை; இந்த நிலையில் முதலமைச்சர் ஏன் மோடி, அமித்ஷா காலடியில் கிடக்க வேண்டும். ஏன் முதலமைச்சர் தலைகுனிந்து நிற்கிறார் என்றால் புலனாய்வுதுறை, வருமான வரித்துறை மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளது. முதலமைச்சர் ஒவ்வொரு முறை தலைகுனிந்து நிற்பதற்கும் ஒரு விலையை கொடுத்தாக வேண்டும். மோடியும், அமித்ஷாவும் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற அனுமதியை முதலமைச்சர் வழங்கியுள்ளார். ஆர்எஸ்எஸ், பாஜகவை உள்ளே நுழையவிடாமல் தடுக்க வேண்டும்.

தேர்தலே தேவையில்ல.. ஸ்டாலினே முதலமைச்சர்..

இங்கு தேர்தலே தேவையில்லை; தேர்தலை சந்திக்காமலே ஸ்டாலின் முதலமைச்சராவார் என்ற நிலை உள்ளது. தமிழர்களுடன் எனது உறவு மிக எளிமையானது. அந்த உறவை என் பாட்டி, தந்தையாருடன் வந்த போது பார்த்திருக்கிறேன். குறைந்தபட்ச அன்பை காட்டினால் பேரன்பை தமிழர்கள் காட்டுபவர்கள். இதை மோடியும் ஆர்எஸ்எஸூம் உணர்ந்து கொள்ளவில்லை. தமிழர்கள் மனதில் இடம்பிடிக்க ஒரே வழி அன்பு, பாசம், மரியாதை மட்டுமே. இதை தேர்தலுக்கு பின்பு பாஜகவுக்கு புரிய வைப்போம்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.