ETV Bharat / city

கரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனுக்கு நீதி கேட்ட நவீன கண்ணகி

author img

By

Published : May 16, 2021, 7:32 PM IST

சேலம்:"கரோனாவால் பாதிக்கப்பட்ட தன் கணவனை மருத்துவமனையில் அட்மிட் செய்யவே 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்கள். நோயாளிகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார்கள். அவர்களுக்கான போதிய வசதிகள் இல்லை" என பெண் ஒருவர் பரபரப்பு குற்றஞ்சாட்டியுள்ளார்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனுக்கு நீதி கேட்கும்  நவீன கண்ணகி
கரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனுக்கு நீதி கேட்கும் நவீன கண்ணகி

சேலம் அரசு மருத்துவனையில் செயல்பட்டு வரும் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் நூற்றுக்கணக்கான கரோனா நோயாளிகள் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லையென்றும்; ஊழியர்கள் நோயாளிகளை அலைக்கழிப்பதாகவும் கூறி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் போராட்டம்

அப்போது பேசிய பெண் ஒருவர் தன் கணவனை அட்மிட் செய்யவே 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்கள் எனவும்; பணத்தை வாங்கிய பிறகுதான் படுக்கை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்றும் பரபரப்பு குற்றஞ்சாட்டினார். அவர் தன் மனக்குமுறலைத் தெரிவித்த பின்னர், அடுத்தடுத்து தங்களுக்குள் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனுக்கு நீதி கேட்ட நவீன கண்ணகி

அவரைத் தொடர்ந்து பேசிய நோயாளியின் உறவினர் ஒருவர், மருத்துவர்கள், செவிலியர் நோயாளிகளை சரியாக கண்காணிப்பதில்லை. நோயாளிகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார்கள். அதை அப்புறப்படுத்த கூட ஆட்கள் இல்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

சேலம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் வாக்குவாதம்

நேற்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபடும் நீங்கள்; நேற்றே இதை அவரிடம் தெரிவித்திருத்திருக்கலாமே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், 'அவர் எங்களிடம் எங்கே பேசினார்; மருத்துவர்களிடம் மட்டுமே பேசிவிட்டு சென்றுவிட்டதாக' அங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கரோனா நோயை விட மருத்துவமனை சூழல் எங்களை மேலும் அச்சுறுத்துகிறது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'ராஜா போல வாழனுமா...' - ரோஜாப்பூ கொடுத்து போலீசார் அட்வைஸ்!

சேலம் அரசு மருத்துவனையில் செயல்பட்டு வரும் கரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் நூற்றுக்கணக்கான கரோனா நோயாளிகள் அட்மிட் செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லையென்றும்; ஊழியர்கள் நோயாளிகளை அலைக்கழிப்பதாகவும் கூறி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் போராட்டம்

அப்போது பேசிய பெண் ஒருவர் தன் கணவனை அட்மிட் செய்யவே 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்கள் எனவும்; பணத்தை வாங்கிய பிறகுதான் படுக்கை வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார்கள் என்றும் பரபரப்பு குற்றஞ்சாட்டினார். அவர் தன் மனக்குமுறலைத் தெரிவித்த பின்னர், அடுத்தடுத்து தங்களுக்குள் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட கணவனுக்கு நீதி கேட்ட நவீன கண்ணகி

அவரைத் தொடர்ந்து பேசிய நோயாளியின் உறவினர் ஒருவர், மருத்துவர்கள், செவிலியர் நோயாளிகளை சரியாக கண்காணிப்பதில்லை. நோயாளிகள் படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கிறார்கள். அதை அப்புறப்படுத்த கூட ஆட்கள் இல்லை என வேதனையுடன் தெரிவித்தார்.

சேலம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் வாக்குவாதம்

நேற்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் இன்று போராட்டத்தில் ஈடுபடும் நீங்கள்; நேற்றே இதை அவரிடம் தெரிவித்திருத்திருக்கலாமே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், 'அவர் எங்களிடம் எங்கே பேசினார்; மருத்துவர்களிடம் மட்டுமே பேசிவிட்டு சென்றுவிட்டதாக' அங்கே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

கரோனா நோயை விட மருத்துவமனை சூழல் எங்களை மேலும் அச்சுறுத்துகிறது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: 'ராஜா போல வாழனுமா...' - ரோஜாப்பூ கொடுத்து போலீசார் அட்வைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.