ETV Bharat / city

ஒரு படுக்கையில் மூன்று கரோனா நோயாளிகள்: சேலம் அரசு மருத்துவமனை குறித்து புகார்

author img

By

Published : Jun 1, 2021, 2:42 PM IST

சேலம் அரசு மருத்துவமனையில் ஒரு படுக்கையில் மூன்று கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனை அவலம்
அரசு மருத்துவமனை அவலம்

சேலம்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சேலம் அரசு மருத்துவமனையில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கரோனா நோய்த்தொற்று கடந்த ஒரு வாரமாக சேலம் மாவட்டத்தில் உச்சம் பெற்றுள்ளது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அரசு மருத்துவமனை அவலம்

இந்த நிலையில், நேற்று (மே.31) சேலம் அரசு மருத்துவமனையில், கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை ஒரே படுக்கையில் மூன்று நபர்கள் வீதம் அமரவைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், இங்கு படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் வசதியுடன் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கரோனா அவசர சிகிச்சை பெறும் வார்டில் நோயாளிகள் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்து வருவதால் அவர்கள் மூலம் நோய்த்தொற்று மேலும் சேலம் மாவட்டத்தில் பல மடங்கு உயரும் அபாயம் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: நிசான் நிறுவனத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? - உயர் நீதிமன்றம்

சேலம்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சேலம் அரசு மருத்துவமனையில் மக்களின் கூட்டம் அலைமோதுகிறது. கரோனா நோய்த்தொற்று கடந்த ஒரு வாரமாக சேலம் மாவட்டத்தில் உச்சம் பெற்றுள்ளது. நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அரசு மருத்துவமனை அவலம்

இந்த நிலையில், நேற்று (மே.31) சேலம் அரசு மருத்துவமனையில், கரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களை ஒரே படுக்கையில் மூன்று நபர்கள் வீதம் அமரவைக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

மேலும், இங்கு படுக்கை வசதி இல்லாத காரணத்தினால் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆக்சிஜன் வசதியுடன் தரையில் படுக்க வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

கரோனா அவசர சிகிச்சை பெறும் வார்டில் நோயாளிகள் உறவினர்கள் நூற்றுக்கணக்கானோர் குவிந்து வருவதால் அவர்கள் மூலம் நோய்த்தொற்று மேலும் சேலம் மாவட்டத்தில் பல மடங்கு உயரும் அபாயம் உருவாகியுள்ளது.

இதையும் படிங்க: நிசான் நிறுவனத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படுகிறதா? - உயர் நீதிமன்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.