ETV Bharat / city

புற்றுநோயால் இறந்த மகன்! சோகத்தில் குடும்பமே தற்கொலை!

author img

By

Published : Dec 7, 2020, 3:25 PM IST

Updated : Dec 7, 2020, 4:59 PM IST

சேலம்: மூத்த மகன் இறந்த துக்கம் தாளாமல் இரண்டு மகன்களுடன் பெற்றோர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

suicide
suicide

பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால் பட்டறை அருகேயுள்ள வால்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். மனைவி கோகிலா மற்றும் மகன்கள் மூவருடன் வாழ்ந்து வந்த முருகனின் மூத்த மகன் மதன்குமார், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்று நோயால் உயிரிழந்தார்.

மதன்குமார் இறந்ததிலிருந்தே முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது முருகன், கோகிலா, அவர்களது இரு மகன்களான வசந்தகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல!
தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

இதனையடுத்து நான்கு பேரின் உடல்களையும் உடற்கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து அம்மாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சிவகாமி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சேலத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புற்றுநோயால் இறந்த மகன்! சோகத்தில் குடும்பமே தற்கொலை!

இதையும் படிங்க: பணியின்போது உயிரிழந்த காவல் ஆய்வாளரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர்

பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால் பட்டறை அருகேயுள்ள வால்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். 15 ஆண்டுகளுக்கும் மேலாக சலூன் கடையில் பணியாற்றி வருகிறார். மனைவி கோகிலா மற்றும் மகன்கள் மூவருடன் வாழ்ந்து வந்த முருகனின் மூத்த மகன் மதன்குமார், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு புற்று நோயால் உயிரிழந்தார்.

மதன்குமார் இறந்ததிலிருந்தே முருகன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகவும் சோகத்தில் ஆழ்ந்திருந்தனர். இந்நிலையில், இன்று காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது முருகன், கோகிலா, அவர்களது இரு மகன்களான வசந்தகுமார் மற்றும் கார்த்திக் ஆகியோர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல!
தற்கொலை எதற்கும் தீர்வல்ல!

இதனையடுத்து நான்கு பேரின் உடல்களையும் உடற்கூராய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். தற்கொலை குறித்து அம்மாபேட்டை காவல் நிலைய ஆய்வாளர் சிவகாமி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சேலத்தில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புற்றுநோயால் இறந்த மகன்! சோகத்தில் குடும்பமே தற்கொலை!

இதையும் படிங்க: பணியின்போது உயிரிழந்த காவல் ஆய்வாளரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் - முதலமைச்சர்

Last Updated : Dec 7, 2020, 4:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.