ETV Bharat / city

கோயில் நிலத்தை விற்ற விவகாரம்: அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு

author img

By

Published : Apr 8, 2021, 12:19 PM IST

Updated : Apr 8, 2021, 12:39 PM IST

சென்னை: கோயில் நிலத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்த விவகாரத்தில், கோயில் சொத்துகளைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கைத் தாக்கல்செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயில் நிலத்தை விற்ற விவகாரம்
கோயில் நிலத்தை விற்ற விவகாரம்

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், "சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பெருமாள் கோயில் அழிக்கப்பட்டு, சிலைகள் திருடப்பட்டுள்ளன.

கோயிலுக்குச் சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. அந்த நிலம் வருவாய்த் துறை அலுவலர்களின் உடந்தையுடன், தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தக் கோயிலையும், அதன் சொத்துகளையும் மீட்க வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கோயிலுக்குத் தகுதியான நபரை நியமிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளதாகவும், அதன்பின் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோயிலில் நியமிக்கப்பட உள்ள தகுதியான நபர் பற்றிய விவரங்களை அறிக்கையாகத் தாக்கல்செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், கோயில் நிலங்களைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், கோயில் சொத்துகள் தொடர்பான அனைத்து ஆவணங்களுடனும் அறிக்கைத் தாக்கல்செய்யவும் உத்தரவிட்டனர்.

கோயில் நிலத்தின் தற்போதைய உரிமையாளரைக் கண்டுபிடித்து அறிக்கை அளிக்க வருவாய்த் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோயில் நிலம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பதிவுத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: 'மறக்க முடியாத தருணம்' - பிரதமருக்கு தடுப்பூசி செலுத்திய மகிழ்வில் செவிலியர்!

சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்த மனுவில், "சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பெருமாள் கோயில் அழிக்கப்பட்டு, சிலைகள் திருடப்பட்டுள்ளன.

கோயிலுக்குச் சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் இருக்கின்றன. அந்த நிலம் வருவாய்த் துறை அலுவலர்களின் உடந்தையுடன், தனி நபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தக் கோயிலையும், அதன் சொத்துகளையும் மீட்க வேண்டும்" எனக் கோரியுள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கோயிலுக்குத் தகுதியான நபரை நியமிப்பதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளதாகவும், அதன்பின் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், அதற்கு அவகாசம் வழங்க வேண்டும் எனவும் இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கோயிலில் நியமிக்கப்பட உள்ள தகுதியான நபர் பற்றிய விவரங்களை அறிக்கையாகத் தாக்கல்செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர்.

மேலும், கோயில் நிலங்களைப் பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்தும், கோயில் சொத்துகள் தொடர்பான அனைத்து ஆவணங்களுடனும் அறிக்கைத் தாக்கல்செய்யவும் உத்தரவிட்டனர்.

கோயில் நிலத்தின் தற்போதைய உரிமையாளரைக் கண்டுபிடித்து அறிக்கை அளிக்க வருவாய்த் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோயில் நிலம் விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க பதிவுத் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: 'மறக்க முடியாத தருணம்' - பிரதமருக்கு தடுப்பூசி செலுத்திய மகிழ்வில் செவிலியர்!

Last Updated : Apr 8, 2021, 12:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.