ETV Bharat / city

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் மும்முரம்! - அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல்

சேலம்: ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

Candidates
Candidates
author img

By

Published : Dec 14, 2019, 10:42 AM IST

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி, சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

முன்னதாக, சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி , வீரபாண்டி உள்ளிட்ட 12 ஊராட்சி ஒன்றியங்களில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

Candidates

இதைத் தொடர்ந்து சேலம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றியக்குழு ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக, அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், சேலம் அடுத்த வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி, சேலம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

முன்னதாக, சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் டிசம்பர் 9ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி , வீரபாண்டி உள்ளிட்ட 12 ஊராட்சி ஒன்றியங்களில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

Candidates

இதைத் தொடர்ந்து சேலம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றியக்குழு ஊராட்சி மன்ற தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக, அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், சேலம் அடுத்த வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

Intro:சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.


Body:தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல் சேலம் மாவட்டத்தில் வருகிற 27 மற்றும் 30-ஆம் தேதி ஆகிய இரண்டு நாட்களில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது .

இந்த தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல் அலுவலர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகள் சாதாரண தேர்தலுக்கான வேட்புமனுக்கள் அளிக்கும் நிகழ்வு கடந்த 9ஆம் தேதி தொடங்கியது.

இதனையடுத்து இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி , வீரபாண்டி உள்ளிட்ட 12 ஊராட்சி ஒன்றியங்களில் வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

சேலம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒன்றியக்குழு ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட ஊராட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்காக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் , சேலம் அடுத்த வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.


Conclusion:இந்த நிகழ்வில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எஸ் கே செல்வம் உள்ளிட்ட அக் கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் ஊராட்சி மன்ற செயலாளர் உள்ளிட்டோர் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.