ETV Bharat / city

மந்த கதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் - பிற வேலைகளில் துரிதம் காட்டும் தமிழ்நாடு அரசு - மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை

மதுரை: எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் மந்த கதியில் நடைபெற்று வந்தாலும், அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியை தமிழ்நாடு அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை
author img

By

Published : Dec 3, 2019, 9:59 PM IST

மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 1, 264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக 2018ஆம் ஆண்டு ஜுன் மாதம் அறிவிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார்.

Road construction work in the area where AIIMS is to be built
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ள பகுதியில் சாலை அமைக்கும் பணி

இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த ஜுன் மாதம் 10ஆம் தேதி தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை அலுவலர்கள் , மத்திய குழுவினர், ஜப்பானிய நிதிக்குழுவினர் ஆகியோர் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும்; எனவே மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் 199.24 ஏக்கரில் மருத்துவமனை அமைப்பதற்கும்; 20 ஏக்கர் இந்தியன் எண்ணெய் நிறுவன குழாய் வழித்தடத்திற்கும்; 5 ஏக்கர் நிலம் சாலைப் பணிகளுக்கும் என வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருவாய்த்துறை தொடர்பான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திற்குச் செல்வதற்கான சாலைப் பணிகள் மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கூத்தியார் குண்டு விலக்கிலிருந்து கரடிக்கல் வரை, மத்திய சாலை நிதித் திட்டத்திலிருந்து ரூ.21 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 6.4 கி.மீ.நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Work on construction of Madurai AIIMS Hospital
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் அமைக்கும் பணி

மேலும் மருத்துவமனை கட்டடப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக அப்பகுதியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.12 அடி நீளம் 10 அடி உயரம் கொண்ட சிலாப்கள் தயாரிக்கப்பட்டு சுற்றிலும் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 1500 சிலாப்கள் தயாரிக்கப்படுவதாகவும்; இந்தப் பணியானது ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படும் எனவும் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

தீண்டாமை சுவர்: "தந்தையின் மனிதத்தால் மரணிக்காத பிள்ளைகள்"

மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 1, 264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக 2018ஆம் ஆண்டு ஜுன் மாதம் அறிவிக்கப்பட்டு, கடந்த ஜனவரி மாதம் மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார்.

Road construction work in the area where AIIMS is to be built
எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படவுள்ள பகுதியில் சாலை அமைக்கும் பணி

இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த ஜுன் மாதம் 10ஆம் தேதி தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறை அலுவலர்கள் , மத்திய குழுவினர், ஜப்பானிய நிதிக்குழுவினர் ஆகியோர் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது தமிழ்நாடு சுகாதாரத்துறை அலுவலர்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும்; எனவே மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் 199.24 ஏக்கரில் மருத்துவமனை அமைப்பதற்கும்; 20 ஏக்கர் இந்தியன் எண்ணெய் நிறுவன குழாய் வழித்தடத்திற்கும்; 5 ஏக்கர் நிலம் சாலைப் பணிகளுக்கும் என வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருவாய்த்துறை தொடர்பான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திற்குச் செல்வதற்கான சாலைப் பணிகள் மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கூத்தியார் குண்டு விலக்கிலிருந்து கரடிக்கல் வரை, மத்திய சாலை நிதித் திட்டத்திலிருந்து ரூ.21 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 6.4 கி.மீ.நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Work on construction of Madurai AIIMS Hospital
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான சுற்றுச்சுவர் அமைக்கும் பணி

மேலும் மருத்துவமனை கட்டடப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக அப்பகுதியைச் சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.12 அடி நீளம் 10 அடி உயரம் கொண்ட சிலாப்கள் தயாரிக்கப்பட்டு சுற்றிலும் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 1500 சிலாப்கள் தயாரிக்கப்படுவதாகவும்; இந்தப் பணியானது ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்படும் எனவும் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:

தீண்டாமை சுவர்: "தந்தையின் மனிதத்தால் மரணிக்காத பிள்ளைகள்"

Intro:மந்தகதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் - வேகம் காட்டும் தமிழக அரசு

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் மந்த கதியில் நடைபெற்று வந்தாலும், அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியை தமிழக அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது.
Body:மந்தகதியில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் - வேகம் காட்டும் தமிழக அரசு

எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் மந்த கதியில் நடைபெற்று வந்தாலும், அப்பகுதியில் சாலை அமைக்கும் பணியை தமிழக அரசு விரைந்து செயல்படுத்தி வருகிறது.

மதுரை மாவட்டம் தோப்பூரில் மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளை தனியார் நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ள நிலையில், தமிழக அரசு இந்த பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் பணிகளை மிகத் துரிதமாக மேற்கொண்டு வருகிறது.

மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் 1264 கோடி ரூபாய் செலவில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளதாக கடந்த 2018ஆம் ஆண்டு ஜுன் மாதம் அறிவிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை நாட்டினார்.

இதற்கான நிலங்கள் கையகப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த ஜுன் மாதம் 10ஆம் தேதி தமிழக சுகாதாரத் துறை அதிகாரிகள் , மத்தியகுழு மற்றும் ஜப்பானிய நிதிக்குழுவினர் இடத்தை ஆய்வு செய்தனர்.

அப்போது தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான இடம் சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் எனவே மருத்துவமனை அமைய உள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் எனவும் தெரிவித்தனர்.

தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள 224. 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 199.24 ஏக்கரில் மருத்துவமனை அமைப்பதற்கும் 20 ஏக்கர் இந்தியன் எண்ணெய் நிறுவன குழாய் வழித்தடத்திற்கும் 5 ஏக்கர் நிலம் சாலைப் பணிகளுக்குமான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு வருவாய்த்துறை தொடர்பான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்திற்கு செல்வதற்கான சாலைப் பணிகள் மதுரை கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் கூத்தியார் குண்டு விலக்கிலிருந்து கரடிக்கல் வரை மத்திய சாலை நிதித் திட்டத்திலிருந்து ரூ.21 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 6.4 கி.மீ.நீளத்திற்கு சாலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் 5.50 கிலோமீட்டர் சுற்றளவிற்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காக ஈரோட்டை சேர்ந்த பி & சி நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கட்டுமான பணிகள் தொடங்குவதற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில் மின் இணைப்பு வழங்கப்படாததால் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரியிடம் கேட்டபோது மருத்துவமனை அமைய உள்ள பகுதிகளில் தற்போது சாலை பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்கனவே பதிக்கப்பட்டிருந்த மின்கம்பங்கள் அனைத்தையும் எடுத்துவிட்டு சாலை பணிகள் நிறைவடைந்த உடன் மின் இணைப்பு கொடுக்கும் பணி தொடங்கும் என தெரிவித்தனர்.

இந்நிலையில் மருத்துவமனை கட்டிடப் பணிகள் தொடங்குவதற்கு முன்பாக அப்பகுதியை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.12 அடி நீளம் 10 அடி உயரம் கொண்ட சிலாப்கள் தயாரிக்கப்பட்டு சுற்றிலும் பதிக்கப்பட்டு வருகிறது. இதற்காக 1500 சிலாப்கள் தயாரிக்கப்படுவதாகவும் இந்தப் பணியானது ஆறுமாதங்களுக்குள் முடிக்கப்படும் எனவும் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனை கட்டுமானத்திற்கான சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் 10 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு மந்தகதியில் நடைபெற்று வந்தாலும் அப்பகுதிக்கு செல்வதற்கான சாலை விரிவாக்கப் பணிகளை தமிழக அரசு மிக துரிதகதியில் நடத்தி வருகிறதுConclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.