ETV Bharat / city

'கொலைக்கு காத்திருந்து பழிக்குப்பழி' -  நினைவஞ்சலி சுவரொட்டியால் மதுரையில் பரபரப்பு!

author img

By

Published : Oct 19, 2019, 8:52 PM IST

மதுரை: கல்லூரி மாணவன் கொலை செய்யப்பட்டு ஓராண்டு ஆன நிலையில், அஞ்சலிக்காக ஒட்டப்பட்ட எச்சரிக்கை சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

போஸ்டரில் எச்சரிக்கை வாசகம்

மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகனின் மகன் பிரவீன் குமார், மதுரை காமராசர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இவர், வேகமாக பைக்கில் சென்றதற்காக அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி இரவு அனுப்பானடி பகுதியில் பிரவீன் குமார் சென்றபோது, எட்டு பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

அதன்பின் தகவலறிந்து சம்பவ இடம் சென்ற தெப்பக்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்ணன், அருண் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர். இந்நிலையில், உயிரிழந்த கல்லூரி மாணவன் பிரவீன் குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காமராசர் பல்கலைக்கழக கல்லூரி, சமுதாயக் கல்லூரி, அழகர்கோயில் சாலையில் உள்ள சுவர்களில் பிரவீன் கொலைக்கு காத்திருந்து பழிவாங்கப் போவது போன்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகள் அச்சேற்றப்பட்ட சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுவரொட்டியில் எச்சரிக்கை வாசகம்

இது குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், இதேபோன்று புதூர் பகுதியில் எச்சரிக்கை சுவரொட்டிகள் ஓட்டி, அதில் கூறியதுபோல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்த எச்சரிக்கை சுவரொட்டிகளால் காவல் துறைக்கு சவால் ஏற்பட்டுள்ளது.

மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகனின் மகன் பிரவீன் குமார், மதுரை காமராசர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார். இவர், வேகமாக பைக்கில் சென்றதற்காக அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுடன் தகராறு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18ஆம் தேதி இரவு அனுப்பானடி பகுதியில் பிரவீன் குமார் சென்றபோது, எட்டு பேர் கொண்ட கும்பலால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

அதன்பின் தகவலறிந்து சம்பவ இடம் சென்ற தெப்பக்குளம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்ணன், அருண் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர். இந்நிலையில், உயிரிழந்த கல்லூரி மாணவன் பிரவீன் குமாரின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காமராசர் பல்கலைக்கழக கல்லூரி, சமுதாயக் கல்லூரி, அழகர்கோயில் சாலையில் உள்ள சுவர்களில் பிரவீன் கொலைக்கு காத்திருந்து பழிவாங்கப் போவது போன்ற சர்ச்சைக்குரிய வார்த்தைகள் அச்சேற்றப்பட்ட சுவரொட்டி ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சுவரொட்டியில் எச்சரிக்கை வாசகம்

இது குறித்து தல்லாகுளம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன், இதேபோன்று புதூர் பகுதியில் எச்சரிக்கை சுவரொட்டிகள் ஓட்டி, அதில் கூறியதுபோல் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்தடுத்த எச்சரிக்கை சுவரொட்டிகளால் காவல் துறைக்கு சவால் ஏற்பட்டுள்ளது.

Intro:*மதுரையில் கல்லூரி மாணவன் கொலை சம்பவத்தின் அஞ்சலிக்காக ஒட்டப்பட்ட எச்சரிக்கை போஸ்டர்களால் பரபரப்பு - காவல்துறை தீவிர விசாரணை*Body:*மதுரையில் கல்லூரி மாணவன் கொலை சம்பவத்தின் அஞ்சலிக்காக ஒட்டப்பட்ட எச்சரிக்கை போஸ்டர்களால் பரபரப்பு - காவல்துறை தீவிர விசாரணை*


மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த பாலமுருகனின் மகன் பிரவீன் குமார் இவர் மதுரை காமராசர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அந்த பகுதியில் வேகமாக பைக்கில் சென்றதற்காக அந்தப் பகுதியில் உள்ள இளைஞருக்கும் பிரவீன்குமார் தகராறு ஏற்பட்டது, அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு 18-ஆம் தேதி இரவு அனுப்பானடி பகுதியில் அவருடைய அண்ணன் பாலகுரு ராஜா உடன் நடந்து சென்ற போது அதே பகுதியை சேர்ந்த
சைக்கோ கண்ணன்,அருண்,சோப்பு செல்வகுமார், பிரவீன் குமார்,விக்கி, மணி,ராஜவேலு, பாலா ஆகிய 8 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக பிரவீன் குமாரைவெட்டிப் படுகொலை செய்து விட்டு தப்பி ஓடினர் அதைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 8 பேரை சிறையில் அடைத்தனர் இந்த நிலையில் உயிரிழந்த கல்லூரி மாணவன் பிரவீனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் சமுதாய கல்லூரி, மாநகர காவல் ஆணையர் அலுவலகம் அமைந்துள்ள அழகர்கோவில் சாலையில் உள்ள அனைத்து சுவர்களிலும் பிரவீன் கொலைக்கு காத்திருந்து பழிவாங்க போவது போன்ற பல்வேறு சர்ச்சைக்குரிய வார்த்தைகளை அச்சிட்டு ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது, இது குறித்து தல்லாகுளம் போலிசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக புதூர் பகுதியில் இதே போன்று எச்சரிக்கை நோட்டிஸ் ஓட்டி அதில் கூறியது போன்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அடுத்தடுத்த எச்சரிக்கை சுவரொட்டிகள் காவல்துறைக்கு சவாலாக அமைந்துவருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.