ETV Bharat / city

வடமாநில வணிகர்கள் வரி முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் - அமைச்சர் மூர்த்தி

தமிழ்நாட்டில் வணிகம் செய்து வரும் வட மாநில வணிகர்களில் பெரும்பாலானோர் வரி முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் என்று வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

author img

By

Published : Jul 17, 2022, 10:11 AM IST

வடமாநில வணிகர்கள் வரி முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் - அமைச்சர் மூர்த்தி
வடமாநில வணிகர்கள் வரி முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் - அமைச்சர் மூர்த்தி

மதுரை: மதுரை தெப்பக்குளத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் முப்பெரும் விழாவில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை எம்.பி சு.வெங்கடேசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில், "தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுதும் வணிகம் செய்ய வேண்டும். வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தமிழ்நாட்டில் வணிகம் செய்ய அனுமதிக்க கூடாது.

தமிழ்நாட்டில் 3 லட்சம் வணிகர்கள் வரி செலுத்துவதில்லை. வணிகர்கள் முறையாக வரி செலுத்தினால் தமிழ்நாடு வளர்ச்சியடையும், வணிகர்கள் வரி செலுத்தினால் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு என்றும் துணை நிற்கும்.

தமிழ்நாடு அரசின் வருவாயில் 85 சதவீதம் வருவாய் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரி வழியாக கிடைக்கிறது. அரசுத்துறையில் யார் தவறு செய்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார். அரசுத் துறைகளில் பல்வேறு சீர் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் செய்யும் வணிகத்தில் வரி முறைகேடு செய்கிறார்கள். வட மாநில வணிகர்களை இங்கு இருந்து அப்புறப்படுத்த தமிழ்நாடு வணிகர்கள் முன் வர வேண்டும். அதிமுக ஆட்சியில் பணம் கொடுத்தால்தான் வணிகம் செய்ய வேண்டிய சூழல் இருந்தது.

வடமாநில வணிகர்கள் வரி முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் - அமைச்சர் மூர்த்தி

திமுக ஆட்சியில் வணிகர்கள் சுதந்திரமாக வணிகம் செய்து வருகிறார்கள். வணிகர்கள் நல வாரியம் அமைப்பதில் எந்தவொரு தடையுமில்லை. உறுப்பினர்கள் சேர்க்கையால் மட்டுமே வணிகர்கள் நல வாரியம் அமைப்பதில் காலதாமதம் ஆகிறது” எனக் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, "அரிசி உள்ளிட்ட பொருள்களுக்கு ஒன்றிய அரசு விதித்த ஜிஎஸ்டி வரியை வாபஸ் பெற வேண்டும். மதுரையில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். ஜிஎஸ்டி வரி ஏற்ற தாழ்வுகளை சரி செய்ய முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" என கூறினார்.

பின்னர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறுகையில் "புதிதாக 5 சதவீத வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் வரும் 22ஆம் தேதி போராட்டம், புதிய ஜிஎஸ்டி வரி அறிவிப்பை வாபஸ் பெறவில்லை என்றால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க :வணிகம் புரிதலை எளிதாக்குதல் தரவரிசையில் 3ஆவது இடம்: தமிழ்நாடு சிறந்த சாதனையாளர் பிரிவிற்கு முன்னேற்றம் - இதுதான் காரணமா?

மதுரை: மதுரை தெப்பக்குளத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் முப்பெரும் விழாவில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை எம்.பி சு.வெங்கடேசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேசுகையில், "தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் மட்டுமே மாநிலம் முழுதும் வணிகம் செய்ய வேண்டும். வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து தமிழ்நாட்டில் வணிகம் செய்ய அனுமதிக்க கூடாது.

தமிழ்நாட்டில் 3 லட்சம் வணிகர்கள் வரி செலுத்துவதில்லை. வணிகர்கள் முறையாக வரி செலுத்தினால் தமிழ்நாடு வளர்ச்சியடையும், வணிகர்கள் வரி செலுத்தினால் அவர்களுக்கு தமிழ்நாடு அரசு என்றும் துணை நிற்கும்.

தமிழ்நாடு அரசின் வருவாயில் 85 சதவீதம் வருவாய் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரி வழியாக கிடைக்கிறது. அரசுத்துறையில் யார் தவறு செய்தாலும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க தயங்கமாட்டார். அரசுத் துறைகளில் பல்வேறு சீர் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

வட மாநிலத்தவர் தமிழ்நாட்டில் செய்யும் வணிகத்தில் வரி முறைகேடு செய்கிறார்கள். வட மாநில வணிகர்களை இங்கு இருந்து அப்புறப்படுத்த தமிழ்நாடு வணிகர்கள் முன் வர வேண்டும். அதிமுக ஆட்சியில் பணம் கொடுத்தால்தான் வணிகம் செய்ய வேண்டிய சூழல் இருந்தது.

வடமாநில வணிகர்கள் வரி முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள் - அமைச்சர் மூர்த்தி

திமுக ஆட்சியில் வணிகர்கள் சுதந்திரமாக வணிகம் செய்து வருகிறார்கள். வணிகர்கள் நல வாரியம் அமைப்பதில் எந்தவொரு தடையுமில்லை. உறுப்பினர்கள் சேர்க்கையால் மட்டுமே வணிகர்கள் நல வாரியம் அமைப்பதில் காலதாமதம் ஆகிறது” எனக் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, "அரிசி உள்ளிட்ட பொருள்களுக்கு ஒன்றிய அரசு விதித்த ஜிஎஸ்டி வரியை வாபஸ் பெற வேண்டும். மதுரையில் நடைபெற உள்ள ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளோம். ஜிஎஸ்டி வரி ஏற்ற தாழ்வுகளை சரி செய்ய முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்" என கூறினார்.

பின்னர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா கூறுகையில் "புதிதாக 5 சதவீத வரி விதிப்பை ரத்து செய்ய வலியுறுத்தி சென்னையில் வரும் 22ஆம் தேதி போராட்டம், புதிய ஜிஎஸ்டி வரி அறிவிப்பை வாபஸ் பெறவில்லை என்றால் டெல்லியில் போராட்டம் நடத்தப்படும்" என்றார்.

இதையும் படிங்க :வணிகம் புரிதலை எளிதாக்குதல் தரவரிசையில் 3ஆவது இடம்: தமிழ்நாடு சிறந்த சாதனையாளர் பிரிவிற்கு முன்னேற்றம் - இதுதான் காரணமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.