ETV Bharat / city

வாக்கு மையத்தைப் பூட்டிய அதிமுக முன்னாள் கவுன்சிலர்!

மதுரை: திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் பரப்புரை செய்வதைக் கண்டித்து வாக்கு மையத்தைப் பூட்டிய அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author img

By

Published : Dec 27, 2019, 12:03 PM IST

வாக்கு மையத்தை பூட்டிய நபரால் பரபரப்பு
வாக்கு மையத்தை பூட்டிய நபரால் பரபரப்பு

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் திமுகவைச் சேர்ந்த சில வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தனர். இந்நிலையில், மதுரை ஒத்தக்கடை ஊராட்சியைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன், திடீரென வாக்குமையத்தைப் பூட்டினார். இதனையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு செய்தியாளரிடம் பேசிய கிருஷ்ணன், "திமுகவைச் சேர்ந்த சிலர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் அத்துமீறி பரப்பரை செய்துவருகின்றனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது. காவல் துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகையால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வாக்கு மையத்தை பூட்டுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை" என்றார்.

மதுரையில் வாக்கு மையத்தை பூட்டிய நபரால் பரபரப்பு

பிறகு உள்ளே வந்த காவல் துறையினர் வாக்குச்சாவடிக்குள் இருந்த அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களையும் உடனடியாக வெளியேற்றினர். பின்னர் அப்பகுதி வாக்குச்சாவடிகளை ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்த மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "விதிகளை மீறி வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்கு சேகரித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க:

துணை நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை!

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலுள்ள வாக்குச்சாவடி மையத்தில் திமுகவைச் சேர்ந்த சில வேட்பாளர்கள் வாக்குச்சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தனர். இந்நிலையில், மதுரை ஒத்தக்கடை ஊராட்சியைச் சேர்ந்த அதிமுகவின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன், திடீரென வாக்குமையத்தைப் பூட்டினார். இதனையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிறகு செய்தியாளரிடம் பேசிய கிருஷ்ணன், "திமுகவைச் சேர்ந்த சிலர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் அத்துமீறி பரப்பரை செய்துவருகின்றனர். இது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது. காவல் துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. ஆகையால் ஜனநாயகத்தைக் காப்பாற்ற வாக்கு மையத்தை பூட்டுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை" என்றார்.

மதுரையில் வாக்கு மையத்தை பூட்டிய நபரால் பரபரப்பு

பிறகு உள்ளே வந்த காவல் துறையினர் வாக்குச்சாவடிக்குள் இருந்த அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களையும் உடனடியாக வெளியேற்றினர். பின்னர் அப்பகுதி வாக்குச்சாவடிகளை ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்த மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "விதிகளை மீறி வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்கு சேகரித்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

இதையும் படிங்க:

துணை நடிகையின் கணவர் தூக்கிட்டு தற்கொலை!

Intro:வாக்கு மையத்தை பூட்டிய நபரால் பரபரப்பு

அதிமுக மற்றும் திமுக சார்பில் வேட்பாளர்கள் வாக்கு சாவடிக்குள் வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்வதை கண்டித்து வாக்கு மையத்தை பூட்டிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.Body:வாக்கு மையத்தை பூட்டிய நபரால் பரபரப்பு

அதிமுக மற்றும் திமுக சார்பில் வேட்பாளர்கள் வாக்கு சாவடிக்குள் வாக்காளர்களிடம் பிரச்சாரம் செய்வதை கண்டித்து வாக்கு மையத்தை பூட்டிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மதுரை மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இதில் போட்டியிடும் திமுகவைச் சேர்ந்த சில வேட்பாளர்கள் வாக்கு சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் வாக்கு சேகரித்தனர்.

மதுரை ஒத்தக்கடை ஊராட்சியை சேர்ந்த அதிமுக வின் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணன் என்பவர் திடீரென வாக்கியத்தை பூட்டினார். இதனையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரக செய்தியாளரிடம் பேசிய கிருஷ்ணன், திமுகவைச் சேர்ந்த சிலர் வாக்குச் சாவடிக்குள் புகுந்து வாக்காளர்களிடம் அத்துமீறி பிரச்சாரம் செய்து வருகின்றனர் இது தேர்தல் விதிமுறைகளுக்கு மாறானது. காவல்துறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை ஆகையால் ஜனநாயகத்தை காப்பாற்ற வாக்கியத்தை போடுவதை தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றார்.

பிறகு உள்ளே வந்த காவலர்கள் வாக்குச் சாவடிக்குள் இருந்த அனைத்து கட்சியின் வேட்பாளர்களையும் உடனடியாக வெளியேற்றினர்.

அப்பகுதி வாக்குச்சாவடிகளை ஆய்வு மேற்கொள்வதற்காக வருகை தந்த மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது விதிகளை மீறி வாக்குச் சாவடிக்குள் சென்று வாக்கு சேகரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகபட்சமாக வாக்குச் சாவடிக்குள் விதிகளை மீறி வாக்கு சேகரிப்பது புகார்கள் எழுந்துள்ளதாகவும் கூறினார் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.