ETV Bharat / city

வெற்றிடம் உள்ளதாகக் கூறிய ரஜினியின் கருத்துக்கு செல்லூர் ராஜு பதிலடி!

author img

By

Published : Jan 10, 2020, 10:56 AM IST

Updated : Jan 10, 2020, 11:23 AM IST

மதுரை: அரசியலில் வெற்றிடம் உள்ளதாக விமர்சித்த ரஜினிக்கு, வானொலி நடத்திய கருத்துக் கணிப்பில் ஆளுமைமிக்கத் தலைவராக முதலமைச்சர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி செல்லூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செல்லூர் ராஜூ பேட்டி
மதுரை விமான நிலையத்தில் செல்லூர் ராஜூ பேட்டி

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வெளிநடப்பு செய்த திமுக தலைவர் ஸ்டாலின் குறித்த கேள்விக்கு, 'எதிர்க்கட்சிகள் பொதுவாக அப்படித்தான் நடந்துகொள்வார்கள். இந்த அரசை அவர்கள் குற்றம் குறை சொல்ல இயலாது. அதனால் சட்டப்பேரவையில் எதிர்வாதம் செய்ய முடியாமல் செல்கின்றனர்' என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அதிமுக அரசு தங்களது நிலைப்பாட்டை மாற்றினால் மக்களின் ஆதரவு இருக்கும் என்று தொல். திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு, இந்தச் சட்டத்தின் மூலமாக இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் இந்த அரசு சிறுபான்மையினருக்கு அளித்த சலுகைகள் குறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் கூறியபொழுது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர் என்றும் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் செல்லூர் ராஜூ பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு அரசு கரும்பிற்கு ஏறத்தாழ 20 ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆகையால் எந்த ஒரு விவசாயியையும் பாதிக்கும் அளவிற்கு அரசு ஈடுபடாது. அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று ரஜினி சொன்னார். அந்த வெற்றிடம் என்பது இல்லை என்று ஒரு வானொலி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்தது. சுமார் ஒரு கோடி நேயர்கள் பங்குகொண்ட அந்தக் கருத்துக் கணிப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் உள்ளனர். அதில் ஆளுமைமிக்கத் தலைவராக முதலமைச்சர் பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்று கூறினார்.


இதையும் படிங்க:

'சப்பாக்' படத்துக்கு தடை கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது, சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் வெளிநடப்பு செய்த திமுக தலைவர் ஸ்டாலின் குறித்த கேள்விக்கு, 'எதிர்க்கட்சிகள் பொதுவாக அப்படித்தான் நடந்துகொள்வார்கள். இந்த அரசை அவர்கள் குற்றம் குறை சொல்ல இயலாது. அதனால் சட்டப்பேரவையில் எதிர்வாதம் செய்ய முடியாமல் செல்கின்றனர்' என்றார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் அதிமுக அரசு தங்களது நிலைப்பாட்டை மாற்றினால் மக்களின் ஆதரவு இருக்கும் என்று தொல். திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு, இந்தச் சட்டத்தின் மூலமாக இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் இந்த அரசு சிறுபான்மையினருக்கு அளித்த சலுகைகள் குறித்து முதலமைச்சர் சட்டப்பேரவையில் கூறியபொழுது சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர் என்றும் கூறினார்.

மதுரை விமான நிலையத்தில் செல்லூர் ராஜூ பேட்டி

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாடு அரசு கரும்பிற்கு ஏறத்தாழ 20 ரூபாய் ஒதுக்கியுள்ளது. ஆகையால் எந்த ஒரு விவசாயியையும் பாதிக்கும் அளவிற்கு அரசு ஈடுபடாது. அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று ரஜினி சொன்னார். அந்த வெற்றிடம் என்பது இல்லை என்று ஒரு வானொலி நடத்திய கருத்துக் கணிப்பில் தெரியவந்தது. சுமார் ஒரு கோடி நேயர்கள் பங்குகொண்ட அந்தக் கருத்துக் கணிப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் உள்ளனர். அதில் ஆளுமைமிக்கத் தலைவராக முதலமைச்சர் பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" என்று கூறினார்.


இதையும் படிங்க:

'சப்பாக்' படத்துக்கு தடை கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Intro:*அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று ரஜினி சொன்னார், ஆனால் இன்று ஆளுமைமிக்க தலைவர் தமிழகத்தில் யார் என்றால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தேர்ந்தெடுத்து இன்று கிரீடம் சூட்டியுள்ளது பெயர் சொல்ல விரும்பாத வானொலி* - *அமைச்சர் செல்லூர் K ராஜு பேட்டி*Body:*அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று ரஜினி சொன்னார், ஆனால் இன்று ஆளுமைமிக்க தலைவர் தமிழகத்தில் யார் என்றால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தேர்ந்தெடுத்து இன்று கிரீடம் சூட்டியுள்ளது பெயர் சொல்ல விரும்பாத வானொலி* - *அமைச்சர் செல்லூர் K ராஜு பேட்டி*

தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் K ராஜு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;

*நான்கு நாட்கள் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் இரண்டு நாட்கள் வெளிநடப்பு செய்த திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து கேட்ட கேள்விக்கு*

இன்று பொங்கல் பரிசு கொடுத்துள்ளோம் அது பற்றிய நல்ல செய்திகளை கேளுங்கள்.

எதிர்க்கட்சிகள் பொதுவாக அப்படித்தான் நடந்துகொள்வார்கள். இந்த அரசை அவர்கள் குற்றம் குறை சொல்ல இயலாது. அதனால் சட்டமன்றத்தில் எதிர்வாதம் செய்ய முடியாமல் செல்கின்றனர்.


*குடியுரிமை சட்டத்தில் அதிமுக அரசு தங்களது நிலைப்பாட்டை மாற்றினால் மக்களின் ஆதரவு இருக்கும் என்று தொல் திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு*

இந்த சட்டத்தின் மூலமாக இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று சொன்னதன் அடிப்படையில் அதைத் தொடருகிறது இந்த அரசு. இந்த அரசு சிறுபான்மையினருக்கு அளித்த சலுகைகள் குறித்து முதல்வர் சட்டமன்றத்தில் கூறியபொழுது சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.


*அரசு கொள்முதல் செய்யும் கரும்பின் விலை 9 முதல் 12 வரை தான் உள்ளது ஆனால் விவசாயிகளுக்கு 16 ரூபாய் வரை இருந்தால் தான் லாபம் ஈட்ட முடியும் என்ற கோரிக்கை குறித்த கேள்விக்கு*

தமிழக அரசு இன்று கரும்பிற்கு ஏறத்தாழ 20 ரூபாய் ஒதுக்கியுள்ளது ஆகையால் எந்த ஒரு விவசாயியும் பாதிக்கும் அளவிற்கு தமிழக அரசு ஈடுபடாது.


*ரஜினியின் தர்பார் படத்தில் சசிகலா பற்றிய விமர்சனங்கள் உள்ள காட்சிகள் குறித்த கேள்விக்கு*

அதுபற்றி எனக்கு தெரியவில்லை. அது பற்றி எங்களுக்கு கவலை இல்லை.

ஆனால் அரசியலில் வெற்றிடம் உள்ளது என்று ரஜினி சொன்னார். அந்த வெற்றிடம் என்பது இல்லை என்று ஒரு வானொலி நடத்திய கருத்துக் கணிப்பில் ஏறத்தாள ஒருகோடி நேயர்கள் பங்குபெற்றனர். அந்தக் கருத்துக் கணிப்பில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் உள்ளடக்கியுள்ளனர் அதில் இன்று ஆளுமைமிக்க தலைவர் தமிழகத்தில் யார் என்றால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை தேர்ந்தெடுத்து இன்று கிரீடம் சூட்டியுள்ளது. ஆகவே ஆளுமை வெற்றிடம் இல்லை என்பதை திரு ரஜினிகாந்த் அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும்Conclusion:
Last Updated : Jan 10, 2020, 11:23 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.