ETV Bharat / city

மதுரையில் கரோனா தொற்று பரவும் அபாயம்

author img

By

Published : Mar 24, 2020, 7:20 AM IST

மதுரை: விமானத்தை விட்டு வெளியே வந்து உறவினர்களைச் சந்திக்கும் வெளிநாட்டுப் பயணிகளால் மதுரை விமான நிலையத்தில் கரோனா பெருந்தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Madurai corona update
Possibility of COVID-19 spread in madurai as passengers meets relatives in airport

துபாயிலிருந்து மூவரும், சிங்கப்பூரிலிருந்து ஒருவரும் நேற்று தாயகம் திரும்பினர். அதன்படி அவர்கள் டெல்லி விமான நிலையம் வந்தடைந்து பின்னர் அங்கிருந்து மதுரை விமான நிலையம் வந்தனர். இந்த நான்கு பேருக்கும் மதுரை விமான நிலையத்தில் கைகளில் சீல்வைக்கப்பட்டனர். பின்னர், இவர்கள் சின்ன உடைப்பு அரசு மருத்துவ முகாமுக்கு 14 நாள்கள் கண்காணிப்பில் இருக்க அனுப்பிவைக்கப்பட்டனர்.

தற்போதுவரை வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளில் மொத்தமாக ஒன்பது நபர்கள் சின்ன உடைப்பு மருத்துவ முகாமில் தங்கியுள்ளனர்.

இதனிடையே விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள், அங்கிருந்து வெளியில் வந்ததும் குடும்பத்தினரைச் சந்தித்தது மட்டுமின்றி, குழந்தைகளுடன் பேசினர்.

Possibility of COVID-19 spread in madurai as passengers meets relatives in airport

கரோனா வைரஸ் பெருந்தொற்று பற்றிய விழிப்புணர்வு இல்லாமலும், தொற்று பரவும் அபாயம் குறித்த அச்சம் இல்லாமல் இருப்பதால் நகரில் இந்தத் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: தெருக்களில் மஞ்சல் நீர் தெளித்த மக்கள்!

துபாயிலிருந்து மூவரும், சிங்கப்பூரிலிருந்து ஒருவரும் நேற்று தாயகம் திரும்பினர். அதன்படி அவர்கள் டெல்லி விமான நிலையம் வந்தடைந்து பின்னர் அங்கிருந்து மதுரை விமான நிலையம் வந்தனர். இந்த நான்கு பேருக்கும் மதுரை விமான நிலையத்தில் கைகளில் சீல்வைக்கப்பட்டனர். பின்னர், இவர்கள் சின்ன உடைப்பு அரசு மருத்துவ முகாமுக்கு 14 நாள்கள் கண்காணிப்பில் இருக்க அனுப்பிவைக்கப்பட்டனர்.

தற்போதுவரை வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளில் மொத்தமாக ஒன்பது நபர்கள் சின்ன உடைப்பு மருத்துவ முகாமில் தங்கியுள்ளனர்.

இதனிடையே விமான நிலையத்துக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள், அங்கிருந்து வெளியில் வந்ததும் குடும்பத்தினரைச் சந்தித்தது மட்டுமின்றி, குழந்தைகளுடன் பேசினர்.

Possibility of COVID-19 spread in madurai as passengers meets relatives in airport

கரோனா வைரஸ் பெருந்தொற்று பற்றிய விழிப்புணர்வு இல்லாமலும், தொற்று பரவும் அபாயம் குறித்த அச்சம் இல்லாமல் இருப்பதால் நகரில் இந்தத் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: தெருக்களில் மஞ்சல் நீர் தெளித்த மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.