ETV Bharat / city

தீண்டாமை வன்கொடுமைகளில் மதுரை முதலிடம் - அதிர்ச்சி தகவல்!

author img

By

Published : May 7, 2022, 8:08 AM IST

தமிழ்நாட்டில் தீண்டாமை வன்கொடுமைகள் கடைப்பிடிக்கப்படும் முதல் 10 மாவட்டங்கள் பட்டியலில் மதுரை மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் 445 தீண்டாமை கிராமங்களில், தென் மாவட்டங்களில் மட்டும் 137 கிராமங்கள் என ஆர்டிஐ மூலம் பெறப்பட்ட பதில்களில் தகவல் வெளியாகியுள்ளன.

தகவல் அறியும் உரிமைச் சட்டம்
தகவல் அறியும் உரிமைச் சட்டம்

மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமை) ஆர்வலர் கார்த்திக், தமிழ்நாட்டில் நடைபெறும் தீண்டாமை வன்கொடுமைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் பின்வருமாறு பதில்கள் பெறப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

கறைபடிந்த கிராமங்கள்: கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, தமிழ்நாடு காவல்துறையில் ஏடிஜிபி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி தமிழ்நாட்டில் தீண்டாமை பாகுபாடு கடைபிடிக்கபடும் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை மொத்தம் 445.

இதில், அதிகபட்சமாக முதல் இடத்தில் மதுரை மாவட்டம் 43, இரண்டாம் இடத்தில் விழுப்புரம் 25, அதற்கு அடுத்தடுத்த இடத்தில் திருநெல்வேலி 24, வேலூர் 19, திருவண்ணாமலை 18 என்கிற வரிசையில் இடங்களை பிடித்துள்ளன. இந்தாண்டு(2022), கடைசி இடத்தில் ஒரே ஒரு கிராமத்துடன் சென்னை இடம் பெற்றுள்ளது. மற்றொரு பக்கம், தீண்டாமை வன்கொடுமைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கிராமங்கள் என்று 341 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டிஐ ஆர்வலர் கார்த்திக்
ஆர்டிஐ ஆர்வலர் கார்த்திக்

திருச்சியும்... மதுரையும்...: மேற்கண்ட பட்டியல் வரிசையில், தீண்டாமை கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் இக்கிராமங்களில் தீண்டாமை ஒழிப்பிற்கான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு 2021இல் மொத்தம் 597 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. 6ஆவது இடத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் முதலிடத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் வெகு குறைவாக வெறும் 21 விழிப்புணர்வு கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.

நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் குறித்த தகவல்
நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் குறித்த தகவல்

அதே போல், இந்தாண்டு 2022 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் ஏடிஜிபி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு ஏற்படுத்திய விழிப்புணர்வு கூட்டங்கள் மொத்தம் 212. அதில் தீண்டாமை வன்கொடுமைகள் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள மாவட்டமான மதுரையில் நடத்திய கூட்டங்கள் வெறும் 3 மட்டுமே. இதே காலகட்டத்தில் 6ஆவது இடத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் 28 இடங்களில் நடைபெற்றுள்ளன. அதாவது மதுரையைவிட கூடுதலாக 25 கூட்டங்கள் திருச்சியில் நடைபெற்று உள்ளன. மேலும் தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விழிப்புணர்வு கூட்டங்களே நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: இதுகுறித்து, ஆர்டிஐ ஆர்வலர் கார்த்திக் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, "தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) அறிக்கையின்படி தமிழ்நாட்டில் பட்டியலினத்தோர் வன்கொடுமை வழக்குகள் கடந்த 2009-ல் இருந்து 2018 வரையிலான 10 ஆண்டுகளில் 27.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், அதை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாதிய தீண்டாமை கிராமங்களை கண்டறிந்து அங்கு இரு தரப்பு மக்களிடையே விழிப்புணர்வு கூட்டங்கள் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படாத நிலை உள்ளது. ஆகையால் கீழ்க்கண்ட பரிந்துரைகளை அரசு முன்னின்று செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

மாவட்ட வாரியான தகவல்கள்
மாவட்ட வாரியான தகவல்கள்
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஏடிஜிபி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு மற்றும் சமூகநலத்துறைகள் ஆகிய மூன்று துறைகளும் இணைந்து தமிழ்நாட்டில் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகம் உள்ள முதல் 10 மாவட்டங்களில் முதற்கட்டமாக அதிக எண்ணிக்கையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு சமூக நல்லிணக்க கிராமங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இதற்காக சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
  • தீண்டாமை வன்கொடுமை கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட 445 கிராமங்களை, மாடல் நல்லிணக்க கிராமங்களாக உருவாக்க நடவடிக்கை எடுப்பதோடு அவ்வாறான மாடல் கிராமங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்" என்றார்.
    தீண்டாமை வன்கொடுமைகளில் மதுரை முதலிடம்
    தீண்டாமை வன்கொடுமைகளில் மதுரை முதலிடம்

தீண்டாமை வன்கொடுமை தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் நடைபெறுவது குறித்தும், குறிப்பாக மதுரை மாவட்டம் அதில் முதலிடத்தில் இருப்பது குறித்தும் வெளியான இந்த ஆர்டிஐ தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உசிலம்பட்டியில் தீண்டாமையை கடைபிடிக்காத கிராமம் - ரூ.10 லட்சம் பரிசை வென்றது!

மதுரையைச் சேர்ந்த ஆர்டிஐ (தகவல் அறியும் உரிமை) ஆர்வலர் கார்த்திக், தமிழ்நாட்டில் நடைபெறும் தீண்டாமை வன்கொடுமைகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேள்வி கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் பின்வருமாறு பதில்கள் பெறப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:

கறைபடிந்த கிராமங்கள்: கடந்த 2021ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, தமிழ்நாடு காவல்துறையில் ஏடிஜிபி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு அறிக்கையின்படி தமிழ்நாட்டில் தீண்டாமை பாகுபாடு கடைபிடிக்கபடும் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள கிராமங்களின் எண்ணிக்கை மொத்தம் 445.

இதில், அதிகபட்சமாக முதல் இடத்தில் மதுரை மாவட்டம் 43, இரண்டாம் இடத்தில் விழுப்புரம் 25, அதற்கு அடுத்தடுத்த இடத்தில் திருநெல்வேலி 24, வேலூர் 19, திருவண்ணாமலை 18 என்கிற வரிசையில் இடங்களை பிடித்துள்ளன. இந்தாண்டு(2022), கடைசி இடத்தில் ஒரே ஒரு கிராமத்துடன் சென்னை இடம் பெற்றுள்ளது. மற்றொரு பக்கம், தீண்டாமை வன்கொடுமைகள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட கிராமங்கள் என்று 341 கிராமங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்டிஐ ஆர்வலர் கார்த்திக்
ஆர்டிஐ ஆர்வலர் கார்த்திக்

திருச்சியும்... மதுரையும்...: மேற்கண்ட பட்டியல் வரிசையில், தீண்டாமை கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் இக்கிராமங்களில் தீண்டாமை ஒழிப்பிற்கான விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்தாண்டு 2021இல் மொத்தம் 597 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. 6ஆவது இடத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதே காலகட்டத்தில் முதலிடத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் வெகு குறைவாக வெறும் 21 விழிப்புணர்வு கூட்டங்கள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன.

நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் குறித்த தகவல்
நடத்தப்பட்ட விழிப்புணர்வு கூட்டங்கள் குறித்த தகவல்

அதே போல், இந்தாண்டு 2022 ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான மூன்று மாதத்தில் மட்டும் தமிழ்நாடு முழுவதும் ஏடிஜிபி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு ஏற்படுத்திய விழிப்புணர்வு கூட்டங்கள் மொத்தம் 212. அதில் தீண்டாமை வன்கொடுமைகள் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள மாவட்டமான மதுரையில் நடத்திய கூட்டங்கள் வெறும் 3 மட்டுமே. இதே காலகட்டத்தில் 6ஆவது இடத்தில் உள்ள திருச்சி மாவட்டத்தில் 28 இடங்களில் நடைபெற்றுள்ளன. அதாவது மதுரையைவிட கூடுதலாக 25 கூட்டங்கள் திருச்சியில் நடைபெற்று உள்ளன. மேலும் தூத்துக்குடி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் விழிப்புணர்வு கூட்டங்களே நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு: இதுகுறித்து, ஆர்டிஐ ஆர்வலர் கார்த்திக் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தை தொடர்பு கொண்டு பேசியபோது, "தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) அறிக்கையின்படி தமிழ்நாட்டில் பட்டியலினத்தோர் வன்கொடுமை வழக்குகள் கடந்த 2009-ல் இருந்து 2018 வரையிலான 10 ஆண்டுகளில் 27.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில், அதை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாதிய தீண்டாமை கிராமங்களை கண்டறிந்து அங்கு இரு தரப்பு மக்களிடையே விழிப்புணர்வு கூட்டங்கள் அதிக எண்ணிக்கையில் நடத்தப்படாத நிலை உள்ளது. ஆகையால் கீழ்க்கண்ட பரிந்துரைகளை அரசு முன்னின்று செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.

மாவட்ட வாரியான தகவல்கள்
மாவட்ட வாரியான தகவல்கள்
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, ஏடிஜிபி சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் காவல் பிரிவு மற்றும் சமூகநலத்துறைகள் ஆகிய மூன்று துறைகளும் இணைந்து தமிழ்நாட்டில் தீண்டாமை வன்கொடுமைகள் அதிகம் உள்ள முதல் 10 மாவட்டங்களில் முதற்கட்டமாக அதிக எண்ணிக்கையில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு சமூக நல்லிணக்க கிராமங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இதற்காக சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
  • தீண்டாமை வன்கொடுமை கிராமங்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட 445 கிராமங்களை, மாடல் நல்லிணக்க கிராமங்களாக உருவாக்க நடவடிக்கை எடுப்பதோடு அவ்வாறான மாடல் கிராமங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கி ஊக்கப்படுத்த வேண்டும்" என்றார்.
    தீண்டாமை வன்கொடுமைகளில் மதுரை முதலிடம்
    தீண்டாமை வன்கொடுமைகளில் மதுரை முதலிடம்

தீண்டாமை வன்கொடுமை தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் நடைபெறுவது குறித்தும், குறிப்பாக மதுரை மாவட்டம் அதில் முதலிடத்தில் இருப்பது குறித்தும் வெளியான இந்த ஆர்டிஐ தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: உசிலம்பட்டியில் தீண்டாமையை கடைபிடிக்காத கிராமம் - ரூ.10 லட்சம் பரிசை வென்றது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.