ETV Bharat / city

மதுரை விமான நிலையம்: நிலம் கையக பணிகள் 2 வாரத்தில் முடியும்! - நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் 2 வாரத்தில் முடியும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்
author img

By

Published : Jun 28, 2021, 9:23 PM IST

மதுரை விமான நிலையம் விரிவாக்கப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று(ஜூன்.28) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், வருவாய்த்துறை அலுவலர்கள், விமான நிலைய அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதையடுத்து செய்தியாளர்கள் சந்தித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளன. மாநில அரசு நிலங்களை கையகப்படுத்தி விமானநிலைய நிர்வாகத்திடம் கொடுத்தால்தான் விரிவாக்கப் பணிகளை தொடங்க முடியும்.

8 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள இந்தத் திட்டத்தில் தற்போது 2 வாரங்களுக்குள் நிலம் கையப்படுத்தப்படும் பணிகள் முடிக்கப்படும். தற்போது வரை 90 விழுக்காடு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன.

அத்துடன் விமான ஓடுதளத்தை நீட்டித்தல், அண்டர் பாஸ் முறையில் நெடுஞ்சாலை அமைத்தல் உள்ளிட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசிடம் நிதி கோர உள்ளோம். விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த உடன், பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் சென்று வர முடியும்.

தென் தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கு இது உதவியாக இருக்கும். அடுத்தாண்டு இறுதிக்குள் மதுரை விமான நிலையம் முழு சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா 2ஆவது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

மதுரை விமான நிலையம் விரிவாக்கப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று(ஜூன்.28) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், வருவாய்த்துறை அலுவலர்கள், விமான நிலைய அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதையடுத்து செய்தியாளர்கள் சந்தித்த பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், "மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளன. மாநில அரசு நிலங்களை கையகப்படுத்தி விமானநிலைய நிர்வாகத்திடம் கொடுத்தால்தான் விரிவாக்கப் பணிகளை தொடங்க முடியும்.

8 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள இந்தத் திட்டத்தில் தற்போது 2 வாரங்களுக்குள் நிலம் கையப்படுத்தப்படும் பணிகள் முடிக்கப்படும். தற்போது வரை 90 விழுக்காடு நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்துள்ளன.

அத்துடன் விமான ஓடுதளத்தை நீட்டித்தல், அண்டர் பாஸ் முறையில் நெடுஞ்சாலை அமைத்தல் உள்ளிட்டப் பணிகளுக்கு ஒன்றிய அரசிடம் நிதி கோர உள்ளோம். விரிவாக்கப் பணிகள் முடிவடைந்த உடன், பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் சென்று வர முடியும்.

தென் தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கு இது உதவியாக இருக்கும். அடுத்தாண்டு இறுதிக்குள் மதுரை விமான நிலையம் முழு சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கரோனா 2ஆவது அலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.