ETV Bharat / city

‘கீழடி அகழாய்வுக்காக சொந்த நிலத்தை வழங்கத் தயார்’ - ஈடிவி பாரத்துக்கு தமிழ்ப் பேராசிரியர் தகவல்! - பேராசிரியர் முருகேசன்

மதுரை: கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வில் தனது நிலத்திற்குட்பட்ட இடத்தில் கண்டறியப்பட்ட உறை கிணறு, செங்கல் கட்டுமான பகுதிகளை அரசுக்கு தருவதற்கு தயார் என்று அந்நிலத்தின் உரிமையாளர் பேராசிரியர் முருகேசன் ஈடிவி பாரத் செய்திகளிடம் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் முருகேசன்
author img

By

Published : Oct 1, 2019, 7:36 PM IST

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வு நிறைவுக்கு வந்த நிலையில் அங்கு ஏறக்குறைய நான்கு ஏக்கர் நிலப்பகுதிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் ஒரு பகுதி நிலம் கீழடியை பூர்வீகமாகக் கொண்ட மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியரும், கல்லூரி துணை முதல்வருமான முருகேசன் என்பவருக்கு சொந்தமானதாகும்.

இன்று நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலில், தனக்குச் சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உறைகிணறு, இரட்டைச் சுவர்கள், அகலமான செங்கலையுடைய வளைவான சுவர் பகுதி ஆகியவை கிடைத்துள்ளன எனவும், அதனை தமிழ்நாடு தொல்லியல்துறை விருப்பப்பட்டால் கள அருங்காட்சியகத்திற்கு எடுத்துக் கொள்ள முழு சம்மதம் தெரிவிப்பதாகவும் பேராசிரியர் முருகேசன் கூறினார்.

பேராசிரியர் முருகேசன்

தமிழ் உணர்வின் அடிப்படையிலும், உலக தமிழ் மக்கள் இந்த இடத்தைக்கண்டு பயனுற வேண்டும் எனவும் இதற்கு முழுமையாக தனது ஒப்புதலை தெரிவிப்பதாக முருகேசன் கூறினார்.

முழு இடத்தையும் தருவதற்கு வசதி போதாது என்று கூறிய முருகேசன், விவசாய நிலம் என்பதால் தனது வாழ்வாதாரம் அதுதான் என்று கூறினார். மேலும், அடுத்தடுத்து தொடரவிருக்கின்ற அகழாய்வுகளில் தனது நிலங்களை தொல்லியல்துறை பயன்படுத்திக்கொள்ள பூரண ஒத்துழைப்பை அளிப்பதாகவும் முருகேசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காமராஜர் நகர் இடைத்தேர்தல் - 11 முக்கிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வு நிறைவுக்கு வந்த நிலையில் அங்கு ஏறக்குறைய நான்கு ஏக்கர் நிலப்பகுதிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் ஒரு பகுதி நிலம் கீழடியை பூர்வீகமாகக் கொண்ட மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியரும், கல்லூரி துணை முதல்வருமான முருகேசன் என்பவருக்கு சொந்தமானதாகும்.

இன்று நமது ஈடிவி பாரத் செய்திகளுக்காக அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலில், தனக்குச் சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உறைகிணறு, இரட்டைச் சுவர்கள், அகலமான செங்கலையுடைய வளைவான சுவர் பகுதி ஆகியவை கிடைத்துள்ளன எனவும், அதனை தமிழ்நாடு தொல்லியல்துறை விருப்பப்பட்டால் கள அருங்காட்சியகத்திற்கு எடுத்துக் கொள்ள முழு சம்மதம் தெரிவிப்பதாகவும் பேராசிரியர் முருகேசன் கூறினார்.

பேராசிரியர் முருகேசன்

தமிழ் உணர்வின் அடிப்படையிலும், உலக தமிழ் மக்கள் இந்த இடத்தைக்கண்டு பயனுற வேண்டும் எனவும் இதற்கு முழுமையாக தனது ஒப்புதலை தெரிவிப்பதாக முருகேசன் கூறினார்.

முழு இடத்தையும் தருவதற்கு வசதி போதாது என்று கூறிய முருகேசன், விவசாய நிலம் என்பதால் தனது வாழ்வாதாரம் அதுதான் என்று கூறினார். மேலும், அடுத்தடுத்து தொடரவிருக்கின்ற அகழாய்வுகளில் தனது நிலங்களை தொல்லியல்துறை பயன்படுத்திக்கொள்ள பூரண ஒத்துழைப்பை அளிப்பதாகவும் முருகேசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காமராஜர் நகர் இடைத்தேர்தல் - 11 முக்கிய கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

Intro:கள அருங்காட்சியகத்திற்கு இடம் தர தயார் - கீழடி அகழாய்வு நில சொந்தக்காரர் பேராசிரியர் முருகேசன் அறிவிப்பு

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வில் எங்களுடைய நிலத்திற்கு உட்பட்ட இடத்தில் கண்டறியப்பட்ட உறை கிணறு மற்றும் செங்கல் கட்டுமான பகுதிகள் உள்ள பகுதிகளை கள அருங்காட்சியகத்திற்கு தர தயாராக உள்ளேன் என்று அந் நிலத்தின் சொந்தக்காரர் பேராசிரியர் முருகேசன் சிறப்பு பேட்டிBody:கள அருங்காட்சியகத்திற்கு இடம் தர தயார் - கீழடி அகழாய்வு நில சொந்தக்காரர் பேராசிரியர் முருகேசன் அறிவிப்பு

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வில் எங்களுடைய நிலத்திற்கு உட்பட்ட இடத்தில் கண்டறியப்பட்ட உறை கிணறு மற்றும் செங்கல் கட்டுமான பகுதிகள் உள்ள பகுதிகளை கள அருங்காட்சியகத்திற்கு தர தயாராக உள்ளேன் என்று அந் நிலத்தின் சொந்தக்காரர் பேராசிரியர் முருகேசன் சிறப்பு பேட்டி

கீழடி ஐந்தாம் கட்ட அகழாய்வு நிறைவுக்கு வந்த நிலையில் அங்கு ஏறக்குறைய 4 ஏக்கர் நிலப் பகுதிகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன அதில் ஒரு பகுதி நிலத்திற்கு சொந்தக்காரர் கீழடி பூர்வீகமாகக் கொண்ட மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த் துறை பேராசிரியரும் கல்லூரி துணை முதல்வருமான பேராசிரியர் முருகேசன் ஆவார்

இன்று ஈடிவி பாரத் செய்திகளுக்காக அவர் வழங்கிய சிறப்பு நேர்காணலில், எனக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் உறைகிணறு இரட்டைச் சுவர்கள் மற்றும் அகலமான செங்கல்லை உடைய வளைவான சுவர் பகுதி ஆகியவை கிடைத்துள்ளன இந்த பகுதி மட்டும் ஏறக்குறைய 30 சென்ட் ஆகும் அதனை தமிழக தொல்லியல்துறை விருப்பப்பட்டால் கள அருங்காட்சியகத்திற்கு எடுத்துக் கொள்ள முழு சம்மதம் தெரிவிக்கிறேன். மேலும் அவ்வாறு இல்லையேல் தமிழக அரசு அனுமதிக்கும் பட்சத்தில் அப்பகுதியை என்னால் இயன்ற அளவுக்கு பராமரித்து பேணி பாதுகாக்கவும் தயாராக உள்ளேன்.

தமிழ் உணர்வின் அடிப்படையிலும் உலக தமிழ் மக்கள் இந்த இடத்தை கண்டு பயனுற வேண்டும் என்ற எனது ஆவலின் காரணமாகவும் இதற்கு முழுமையாக எனது ஒப்புதலை தெரிவித்துக் கொள்கிறேன்.

முழு இடத்தையும் தருவதற்கு வசதி போதாது ஏனென்றால் இதனை நம்பித்தான் நாங்கள் நான்கு சகோதரர்களும் எனது தாயாரும் இருக்கிறோம் விவசாய நிலம் என்பதால் எங்களின் வாழ்வாதாரம் அதுதான். மேலும் அடுத்தடுத்து தொடரவிருக்கின்ற அகழாய்வுகளில் எங்களது நிலங்களை தொல்லியல்துறை பயன்படுத்திக்கொள்ள பூரண ஒத்துழைப்பை நாங்கள் வழங்குவோம் என்றார். இந்த பேட்டியின் போது முருகேசனின் தாயார் முத்துலட்சுமி உடனிருந்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.