ETV Bharat / city

இலவச கரோனா தடுப்பூசி செலுத்தக்கோரிய வழக்கு ஒத்திவைப்பு

author img

By

Published : Apr 26, 2021, 10:17 PM IST

மதுரை: தமிழ்நாட்டில் பொதுமக்களுக்கு போர்க்கால அடிப்படையில் இலவசமாக கரோனா தடுப்பூசி செலுத்த கோரிய வழக்கை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றின் காரணமாக 1.5 லட்சத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது மத்திய அரசின் உத்தரவின்பேரில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 135 தனியார் மருத்துவமனைகளுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் பயன்பெற முடியாத நிலையுள்ளது. அரசுத் தரப்பில் இலவசமாக போடப்படும் கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு தற்போது வரை போடப்படவில்லை.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

எனவே, போர்க்கால அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசியை போட ஏற்பாடு செய்யவும், தனியார் மருத்துவமனையில் போடப்படும் கரோனா தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்தும் உத்தரவிட வேண்டும்.' என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம், ஆனந்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை, பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை பரவாயில்லை. அரசும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது’ என கூறி வழக்கை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'இந்தியாவில் கரோனா நோய்த் தொற்றின் காரணமாக 1.5 லட்சத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது மத்திய அரசின் உத்தரவின்பேரில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 135 தனியார் மருத்துவமனைகளுக்கு கரோனா தடுப்பூசி போடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் பயன்பெற முடியாத நிலையுள்ளது. அரசுத் தரப்பில் இலவசமாக போடப்படும் கரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு தற்போது வரை போடப்படவில்லை.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தகவல் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.

எனவே, போர்க்கால அடிப்படையில் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கரோனா தடுப்பூசியை போட ஏற்பாடு செய்யவும், தனியார் மருத்துவமனையில் போடப்படும் கரோனா தடுப்பூசிக்கு விலை நிர்ணயம் செய்தும் உத்தரவிட வேண்டும்.' என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சிவஞானம், ஆனந்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பொறுத்தவரை, பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை பரவாயில்லை. அரசும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது’ என கூறி வழக்கை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.