உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (ஜன.17) கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில் 700 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காண்பதற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் நேற்று இரவிலிருந்தே அலங்காநல்லூர் கிராமத்திற்கு வருகைதந்தனர்.
ஜல்லிக்கட்டை பார்வையிட செக்காணூரணி பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி (35) என்பவரும் சென்றுள்ளார். கூட்ட நெரிசலில் அமர்ந்து பார்த்துகொண்டிருந்த அவர் திடீரென்று மயக்கமடைந்தார். பின்னர் அருகில் இருந்தவர்கள் அவரை அலங்கநல்லூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்நிலையில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலியே அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவரது உடலை உடற்கூறாய்வுக்காக மதுரை அரசு இராசாசி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: