ETV Bharat / city

கரோனா சிகிச்சை: தனியார் மருத்துவமனைகள் அரசு நிர்ணய தொகைக்கு கட்டணம் பெறுவதை உறுதி செய்ய கோரி வழக்கு!

author img

By

Published : Dec 22, 2020, 7:19 PM IST

Updated : Dec 22, 2020, 8:23 PM IST

கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க அரசு நிர்ணயம் செய்த தொகையை தான் தனியார் மருத்துவமனைகள் பெறுகின்றன என்பதை அரசு உறுதி செய்ய கோரிய வழக்கில் சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: திருச்சியைச் சேர்ந்த அஞ்சலை என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

அதில், "கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி எனது கணவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது, இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அதில், எனது கணவருக்கு கரோனா தொற்று உள்ளது எனத் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக முன்பணமாக ரூ. 50,000 செலுத்தினோம். பின்னர் 2 நாள்கள் கழித்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் செலுத்த மருத்துவமனை தரப்பினர் கட்டாயப்படுத்தினர். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறி, எனது கணவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். பின்னர், நெஞ்சு வலி காரணமாக கடந்த நவம்பர் 28 ஆம் தேதி உயிரிழந்தார்.

தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மற்றும் தொற்று பரிசோதனை செய்வதற்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை விட அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனையில் ரூ.5,000 முதல் ரூ.7,500 மட்டுமே பெற வேண்டும். கரோனா தொற்று சிகிச்சை அளிக்க ரூ.15,000 பெற வேண்டும் என அரசு நிர்ணயம் செய்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. எனவே கரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு நிர்ணயம் செய்த தொகை தான் தனியார் மருத்துவமனைகளில் பெறப்படுகிறதா என்பதை அரசு உறுதி செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு குறித்து சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை, 3 வாரங்கள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: லஞ்சப் புகாரில் வழக்குரைஞர் சீதாராமனுக்கு தடை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மதுரை: திருச்சியைச் சேர்ந்த அஞ்சலை என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

அதில், "கடந்த நவம்பர் மாதம் 7ஆம் தேதி எனது கணவருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது, இதையடுத்து அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். அப்போது அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது, அதில், எனது கணவருக்கு கரோனா தொற்று உள்ளது எனத் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சிகிச்சைக்காக முன்பணமாக ரூ. 50,000 செலுத்தினோம். பின்னர் 2 நாள்கள் கழித்து ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் செலுத்த மருத்துவமனை தரப்பினர் கட்டாயப்படுத்தினர். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறி, எனது கணவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தொற்று இல்லை என தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். பின்னர், நெஞ்சு வலி காரணமாக கடந்த நவம்பர் 28 ஆம் தேதி உயிரிழந்தார்.

தனியார் மருத்துவமனையில் கரோனா சிகிச்சை மற்றும் தொற்று பரிசோதனை செய்வதற்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை விட அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பரிசோதனை செய்ய தனியார் மருத்துவமனையில் ரூ.5,000 முதல் ரூ.7,500 மட்டுமே பெற வேண்டும். கரோனா தொற்று சிகிச்சை அளிக்க ரூ.15,000 பெற வேண்டும் என அரசு நிர்ணயம் செய்துள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. எனவே கரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு நிர்ணயம் செய்த தொகை தான் தனியார் மருத்துவமனைகளில் பெறப்படுகிறதா என்பதை அரசு உறுதி செய்ய உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு குறித்து சுகாதாரத்துறை செயலர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை, 3 வாரங்கள் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: லஞ்சப் புகாரில் வழக்குரைஞர் சீதாராமனுக்கு தடை - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

Last Updated : Dec 22, 2020, 8:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.