ETV Bharat / city

ஈரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்... மாற்று இடம் கேட்டு மக்கள் போராட்டம்...

author img

By

Published : Jul 30, 2022, 4:47 PM IST

ஈரோடு மாவட்டம் நசியனூரில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்ட 21 வீடுகளை வருவாய்த் துறையினர் அகற்றினர்.

ஈரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- மாற்று இடம் கேட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள்  கைது
ஈரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்- மாற்று இடம் கேட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள் கைது

ஈரோடு: நசியனூர் பெருமாபாளையம் பகுதியில் உள்ள பள்ளிபாளையம் கிழக்கு வீதியில் சாலை புறம்போக்கு நிலத்தை, ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிமன்றம் சாலை புறம்போக்குகளை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற உத்தரவிட்டது.

அதோடு வீடுகளை காலி செய்ய ஆறு மாத காலம் அவகாசம் அளித்தது. ஆனால் காலக்கொடு முடிந்தும் வீடுகளை காலி செய்யாததால் வருவாய்த்துறையினர் நில அளவையாளர்கள் மூலம் நிலங்களை அளந்து வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரம் முன்பு படுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.


இதனால் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வீடுகள் இடிக்கப்பட்டன. அதோடு போராட்டத்தில் ஈடுபட்டோரை குண்டு கட்டாக தூக்கி காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

இதையும் படிங்க: அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை; தமிழ்நாடு அரசு

ஈரோடு: நசியனூர் பெருமாபாளையம் பகுதியில் உள்ள பள்ளிபாளையம் கிழக்கு வீதியில் சாலை புறம்போக்கு நிலத்தை, ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன. இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது நீதிமன்றம் சாலை புறம்போக்குகளை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளை அகற்ற உத்தரவிட்டது.

அதோடு வீடுகளை காலி செய்ய ஆறு மாத காலம் அவகாசம் அளித்தது. ஆனால் காலக்கொடு முடிந்தும் வீடுகளை காலி செய்யாததால் வருவாய்த்துறையினர் நில அளவையாளர்கள் மூலம் நிலங்களை அளந்து வீடுகளை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜேசிபி இயந்திரம் முன்பு படுத்து பரபரப்பை ஏற்படுத்தினர்.


இதனால் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் வீடுகள் இடிக்கப்பட்டன. அதோடு போராட்டத்தில் ஈடுபட்டோரை குண்டு கட்டாக தூக்கி காவல்துறை வாகனத்தில் ஏற்றி சென்றனர்.

இதையும் படிங்க: அடையாறு ஆற்றங்கரை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை; தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.