ETV Bharat / city

உடலில் காயத்துடன் இறந்துகிடந்த தொழிலாளி!

author img

By

Published : Nov 21, 2020, 2:55 PM IST

ஈரோடு: சென்னிமலையைச் சேர்ந்த தனியார் தொழிற்சாலை தொழிலாளி உடலில் காயத்துடன் பிரதான சாலைப் பகுதியில் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.

இறந்த நிலையில் ஆண் உடல் மீட்பு
இறந்த நிலையில் ஆண் உடல் மீட்பு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள கே.ஜி. வலசு பகுதியைச் சேர்ந்தவர் கொற்றவேல். இவர் அதே பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையொன்றில் பணியாற்றிவந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கொற்றவேலுக்கும், சென்னிமலையைச் சேர்ந்த விக்னேஸ்வரிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் நேற்று (நவ.20) ஈரோட்டில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள ஈரோடு வந்த கொற்றவேல் திருமணத்தில் கலந்து கொண்டு சென்னிமலைக்கு நடந்தே திரும்பியுள்ளார். இதனிடையே மாலை திருமணத்திற்கு சென்றவர் இன்று (நவ.21) காலை வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த விக்னேஸ்வரி திருமண வீட்டாரிடம் கேட்டபோது திருமணத்திற்கு வந்து விட்டு இரவே திரும்பி விட்டதாக கூறியுள்ளனர்.

இறந்த நிலையில் ஆண் உடல் மீட்பு

இதனைத்தொடர்ந்து உறவினர்கள் வீடு, கணவரின் நண்பர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரித்து முறையான தகவல் கிடைக்காததால் சந்தேகமடைந்து சென்னிமலை காவல்நிலையத்தில் திருமணத்திற்கு சென்று வீடு திரும்பாத தனது கணவரை கண்டுபிடித்துத் தர வேண்டுமென புகார் தெரிவித்தார்.

இதனிடையே வெள்ளோடு பிரதான சாலைப் பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே காயங்களுடன் ஒருவர் அடையாளம் தெரியாத முறையில் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து சென்னிமலை காவல் துறையினர் விக்னேஸ்வரியை அடையாளம் காண்பதற்காக வெள்ளோட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

வெள்ளோடு வந்த விக்னேஸ்வரி அங்கு இறந்து கிடந்தவர் உடலைக் கண்ட அவர் தனது கணவர் கொற்றவேல்தான் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத முறையில் தலை, உடல் பகுதியில் காயங்களுடன் இறந்து கிடந்த கொற்றவேலின் உடலைக் கைப்பற்றிய வெள்ளோடு காவல்துறையினர் உடற்கூறாய்விற்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: வங்கி ஊழியரின் பைக் திருட்டு: போலீஸ் விசாரணை!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள கே.ஜி. வலசு பகுதியைச் சேர்ந்தவர் கொற்றவேல். இவர் அதே பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலையொன்றில் பணியாற்றிவந்தார். கடந்த ஒரு ஆண்டுக்கு முன் கொற்றவேலுக்கும், சென்னிமலையைச் சேர்ந்த விக்னேஸ்வரிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் நேற்று (நவ.20) ஈரோட்டில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்துகொள்ள ஈரோடு வந்த கொற்றவேல் திருமணத்தில் கலந்து கொண்டு சென்னிமலைக்கு நடந்தே திரும்பியுள்ளார். இதனிடையே மாலை திருமணத்திற்கு சென்றவர் இன்று (நவ.21) காலை வரை வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த விக்னேஸ்வரி திருமண வீட்டாரிடம் கேட்டபோது திருமணத்திற்கு வந்து விட்டு இரவே திரும்பி விட்டதாக கூறியுள்ளனர்.

இறந்த நிலையில் ஆண் உடல் மீட்பு

இதனைத்தொடர்ந்து உறவினர்கள் வீடு, கணவரின் நண்பர்கள் உள்ளிட்டவர்களிடம் விசாரித்து முறையான தகவல் கிடைக்காததால் சந்தேகமடைந்து சென்னிமலை காவல்நிலையத்தில் திருமணத்திற்கு சென்று வீடு திரும்பாத தனது கணவரை கண்டுபிடித்துத் தர வேண்டுமென புகார் தெரிவித்தார்.

இதனிடையே வெள்ளோடு பிரதான சாலைப் பகுதியிலுள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே காயங்களுடன் ஒருவர் அடையாளம் தெரியாத முறையில் இறந்து கிடப்பதாக வந்த தகவலையடுத்து சென்னிமலை காவல் துறையினர் விக்னேஸ்வரியை அடையாளம் காண்பதற்காக வெள்ளோட்டிற்கு அனுப்பிவைத்தனர்.

வெள்ளோடு வந்த விக்னேஸ்வரி அங்கு இறந்து கிடந்தவர் உடலைக் கண்ட அவர் தனது கணவர் கொற்றவேல்தான் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அடையாளம் தெரியாத முறையில் தலை, உடல் பகுதியில் காயங்களுடன் இறந்து கிடந்த கொற்றவேலின் உடலைக் கைப்பற்றிய வெள்ளோடு காவல்துறையினர் உடற்கூறாய்விற்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: வங்கி ஊழியரின் பைக் திருட்டு: போலீஸ் விசாரணை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.