ETV Bharat / city

பண்ணாரியம்மன் கோயில் குண்டம் விழா... லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு...

author img

By

Published : Mar 22, 2022, 9:51 AM IST

ஈரோடு மாவட்டம் பண்ணாரியம்மன் கோயில் குண்டம் விழாவில் தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

pannariyamman-temple-gundam-festival-2022
pannariyamman-temple-gundam-festival-2022

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோயில். இந்த கோயிலுக்கு தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வார்கள். அதோபோல ஆண்டுதோறும் நடக்கும் குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

இந்த குண்டம் விழா கரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், 14ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து இன்று குண்டம் விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. விழாவையொட்டி, கோயிலை சுற்றி உள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவ ஊர்வலம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன. பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு, ஊஞ்சல், மரத்துண்டுகளை கொண்டு நள்ளிரவு முதல் தீக்குண்டம் வளர்க்கப்பட்டது. அதிகாலை 4.00 மணிக்கு பூசாரி குண்டத்தில் இறங்கி தீ மிதி விழாவை தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.

இதையும் படிங்க: பண்ணாரி கோவில் குண்டம் திருவிழா : திம்பம் மலைப்பாதையில் 21-22ஆம் தேதிகளில் அனைத்து கனரக வாகனங்கள் செல்ல தடை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதியில் உள்ளது பண்ணாரி மாரியம்மன் கோயில். இந்த கோயிலுக்கு தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்துசெல்வார்கள். அதோபோல ஆண்டுதோறும் நடக்கும் குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள்.

இந்த குண்டம் விழா கரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால், 14ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து இன்று குண்டம் விழா கோலாகலமாக நடத்தப்பட்டது. விழாவையொட்டி, கோயிலை சுற்றி உள்ள கிராமங்களில் பண்ணாரி அம்மன் உற்சவ ஊர்வலம் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் நடைபெற்றன. பக்தர்கள் காணிக்கையாக அளித்த வேம்பு, ஊஞ்சல், மரத்துண்டுகளை கொண்டு நள்ளிரவு முதல் தீக்குண்டம் வளர்க்கப்பட்டது. அதிகாலை 4.00 மணிக்கு பூசாரி குண்டத்தில் இறங்கி தீ மிதி விழாவை தொடங்கிவைத்தார். அதனைத் தொடர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கினர்.

இதையும் படிங்க: பண்ணாரி கோவில் குண்டம் திருவிழா : திம்பம் மலைப்பாதையில் 21-22ஆம் தேதிகளில் அனைத்து கனரக வாகனங்கள் செல்ல தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.