ETV Bharat / city

முயல் வேட்டைக்குச் சென்றவர் மின்சாரம் தாக்கி பலி!

author img

By

Published : Jun 17, 2019, 5:43 PM IST

ஈரோடு: புலவபாளையம் பகுதியில் முயல் வேட்டைக்குச் சென்ற ஒருவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விவயசாயி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் ராயர்பாளையத்தைச் சேர்ந்த குழந்தைவேலுவின் மகன் பொன்னுசாமி(23). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

நேற்று புலவபாளையம் பகுதியில் அவர் முயல் வேட்டைக்குச் சென்றுள்ளார்.அங்கு ஒரு முயலைக் கண்டு அதை பிடிக்கத் துரத்தியபோது அது அருகில் இருந்த ஆலை அருகே பதுங்கியது. முயலைப் பிடிக்கும் ஆர்வத்தில் அவர் அங்கிருந்த மதில் சுவரைத் தாண்ட முயற்சித்தபோது சுவரின் மேல் இருந்த கேபிள் ஒயரில் அவருடைய கால் சிக்கிக் கொண்டது. கீழே விழாமல் இருப்பதற்காக அவர் சுவரின் மேல் இருந்த மின்சார கம்பியை எதிர்பாராதவிதமாக தொட்டதில், மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்த நம்பியூர் கவால்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொன்னுசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ஈரோடு மாவட்டம் ராயர்பாளையத்தைச் சேர்ந்த குழந்தைவேலுவின் மகன் பொன்னுசாமி(23). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.

நேற்று புலவபாளையம் பகுதியில் அவர் முயல் வேட்டைக்குச் சென்றுள்ளார்.அங்கு ஒரு முயலைக் கண்டு அதை பிடிக்கத் துரத்தியபோது அது அருகில் இருந்த ஆலை அருகே பதுங்கியது. முயலைப் பிடிக்கும் ஆர்வத்தில் அவர் அங்கிருந்த மதில் சுவரைத் தாண்ட முயற்சித்தபோது சுவரின் மேல் இருந்த கேபிள் ஒயரில் அவருடைய கால் சிக்கிக் கொண்டது. கீழே விழாமல் இருப்பதற்காக அவர் சுவரின் மேல் இருந்த மின்சார கம்பியை எதிர்பாராதவிதமாக தொட்டதில், மின்சாரம் தாக்கி உடல் கருகி உயிரிழந்தார்.

இதுபற்றி அறிந்த நம்பியூர் கவால்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து பொன்னுசாமியின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Intro:TN_ERD_04_17_SATHY_ELECTRI_DEATH_VIS_TN10009Body:மின்சாரம் தாக்கி விவசாயி சாவு

முயல் வேட்டைக்கு சென்ற போது பரிதாபம்

ஈரோடு மாவட்டம் நம்பியூரை அடுத்த ராயர்பாளையத்தை சேர்ந்தவர் குழந்தைவேலு. இவருடைய மகன் பொன்னுசாமி (வயது 23). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இவர் முயல் வேட்டைக்கு புலவபாளையம் பகுதியில் சென்றபோது ஒரு முயல் ஓடியது. உடனே அந்த முயலை துரத்திக்கொண்டு அவர் ஓடினார்.

ஆனால் அந்த முயல் அந்த பகுதியில் உள்ள நூற்பாலைக்குள் சென்றுவிட்டது. உடனே முயலை பிடிப்பதற்காக அவர் நூற்பாலையில் உள்ள மதில் சுவரில் ஏறினார். அப்போது அந்த சுவரின் வழியாக சென்ற டி.வி. கேபிள் ஒயரில் அவருடைய கால் சிக்கி கொண்டது.
இதனால் அவர் கீழே விழாமல் இருப்பதற்காக மேலே சென்று கொண்டிருந்த மின்சார கம்பியை எதிர்பாராதவிதமாக பிடித்துவிட்டார். இதனால் அவர் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
மின்சாரம் தாக்கியதில் அவரது உடை தீ
தீப்பிடித்து எரிந்ததுடன், மதில் சுவரில் உள்ள கம்பியில் கருகிய நிலையில் அவருடைய உடல் தொங்கி கொண்டிருந்தது. இதை பார்த்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனே இதுபற்றி மின்சார வாரியத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று அந்த பகுதியில் மின்சார வினியோகத்தை நிறுத்தினர்.
இதுபற்றி அறிந்ததும் நம்பியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொன்னுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.