ETV Bharat / city

'உல்லாசமாக இருக்க பெண் ஏற்பாடு செய்!' - மிரட்டும் மாஜி எம்பியின் கணவர்! - சத்தியபாமாவின் கணவர் வாசு

ஈரோடு: பெண் விடுதி உரிமையாளரிடம் திருப்பூர் மக்களவை முன்னாள் உறுப்பினர் சத்தியபாமாவின் கணவர் வாசு உல்லாசமாக இருப்பதற்கு பெண் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

விடுதி உரிமையாளர் நிர்மலா
author img

By

Published : Sep 12, 2019, 3:25 PM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தங்கும் விடுதி ஒன்றை 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருபவர் நிர்மலா. திருப்பூர் மக்களவை முன்னாள் உறுப்பினர் சத்யபாமாவின் கணவர் வாசு நிர்மலாவின் தொலைபேசியில் அழைத்து, உல்லாசமாக இருக்கப் பெண் தேவை என்றும், அதற்கு ஏற்பாடு செய்துதருமாறும் வற்புறுத்தினார்.

மேலும் விடுதில் என்னென்ன நடைபெறுகிறது என்று தனக்குத் தெரியும் என்று மிரட்டிய அவர், பெண் ஏற்பாடு செய்யாவிடில் நடக்கும் விபரீதங்களைக் காணத் தயாராக இரு எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தனது தங்கும் விடுதிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், இது போன்ற நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டுவருவதாக நிர்மலா புகார் தெரிவித்துள்ளார்.

விடுதி உரிமையாளர் நிர்மலா செய்தியாளர்கள் சந்திப்பு

ஆகையால் தனக்கும் விடுதிக்கும் பாதுகாப்பு வேண்டுமெனவும் அவதூறாகப் பேசிய வாசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் நிர்மலா புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது இவரது புகாரை வாங்க மறுத்த காவல் துறையினர், நிர்மலாவை அவதூறாகப் பேசி அனுப்பியதாக நிர்மலா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் கோபிசெட்டிபாளையத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இது காவல் நிலையம் அல்ல தரகர் அலுவலகம் எனவும் ஒருமுறை கடவுச்சீட்டிற்கு ஒப்புதல் அளிக்க தன்னிடம் ரூ.20 ஆயிரம் கையூட்டு வாங்கியதாகவும் தெரிவித்தார். ஆகவே உயர் அலுவலர்கள் தலையிட்டு தனது புகாரைப் பதிவு செய்து உரியவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

இது குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்கப்போவதாகவும் நிர்மலா மிரட்டல் விடுத்துள்ளார். இவரது சொத்துகள் மீது ஆசைப்பட்டு சிலர் இவருக்கு எதிராக வேலை செய்வதாகவும், இவரைக் கொலை செய்யும் நோக்குடன் சிலர் இருப்பதாகவும் அச்சம் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தங்கும் விடுதி ஒன்றை 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருபவர் நிர்மலா. திருப்பூர் மக்களவை முன்னாள் உறுப்பினர் சத்யபாமாவின் கணவர் வாசு நிர்மலாவின் தொலைபேசியில் அழைத்து, உல்லாசமாக இருக்கப் பெண் தேவை என்றும், அதற்கு ஏற்பாடு செய்துதருமாறும் வற்புறுத்தினார்.

மேலும் விடுதில் என்னென்ன நடைபெறுகிறது என்று தனக்குத் தெரியும் என்று மிரட்டிய அவர், பெண் ஏற்பாடு செய்யாவிடில் நடக்கும் விபரீதங்களைக் காணத் தயாராக இரு எனவும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். தனது தங்கும் விடுதிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில், இது போன்ற நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டுவருவதாக நிர்மலா புகார் தெரிவித்துள்ளார்.

விடுதி உரிமையாளர் நிர்மலா செய்தியாளர்கள் சந்திப்பு

ஆகையால் தனக்கும் விடுதிக்கும் பாதுகாப்பு வேண்டுமெனவும் அவதூறாகப் பேசிய வாசு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் நிர்மலா புகார் அளிக்கச் சென்றுள்ளார். அப்போது இவரது புகாரை வாங்க மறுத்த காவல் துறையினர், நிர்மலாவை அவதூறாகப் பேசி அனுப்பியதாக நிர்மலா குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் கோபிசெட்டிபாளையத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், இது காவல் நிலையம் அல்ல தரகர் அலுவலகம் எனவும் ஒருமுறை கடவுச்சீட்டிற்கு ஒப்புதல் அளிக்க தன்னிடம் ரூ.20 ஆயிரம் கையூட்டு வாங்கியதாகவும் தெரிவித்தார். ஆகவே உயர் அலுவலர்கள் தலையிட்டு தனது புகாரைப் பதிவு செய்து உரியவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனக் கோரியிருக்கிறார்.

இது குறித்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்கப்போவதாகவும் நிர்மலா மிரட்டல் விடுத்துள்ளார். இவரது சொத்துகள் மீது ஆசைப்பட்டு சிலர் இவருக்கு எதிராக வேலை செய்வதாகவும், இவரைக் கொலை செய்யும் நோக்குடன் சிலர் இருப்பதாகவும் அச்சம் தெரிவித்துள்ளார்.

Intro:முன்னாள் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவின் கணவர் வாசு உல்லாசத்திற்கு பெண் கேட்டு மிரட்டgவதாக தொழிலதிபர் பெண்மணி கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை வாங்க மறுத்து Body:tn_erd_03_sathy_illegal_talk_vis_tn10009

கோபிசெட்டிபாளையத்தில் தனியார் தங்கும் விடுதி நடத்தும் நிர்மலா என்ற பெண் தொழிலதிபரிடம் முன்னாள் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவின் கணவர் வாசு உல்லாசத்திற்கு பெண் கேட்டு மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. தொழிலதிபர் பெண்மணி கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை வாங்க மறுத்து அவதூராக பேசிதாக குற்றச்hட்டு கூறியுள்ளார். நடவடிக்கை எடுக்கவில்லையெனில் காவல்நிலையம் முன்பு தீக்குளிப்பதாக அறிப்பு வெளியிட்டுள்ளார்…

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் பிரபல தங்கும் விடுதியை 12 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவருபவர் நிர்மலா என்ற தொழிலதிபர் பெண்மணி. இவரது தொலைபேசிக்கு அழைத்த முன்னாள் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவின் கணவர் வாசு உல்லாசமாக இருக்க பெண் தேவை என்றும் ஏற்பாடு செய்துதருமாறும் வற்புறுத்துகிறார். மேலும் விடுதில் என்னென்ன நடைபெறுகிறது என்று எனக்கு தெரியும் பெண் ஏற்பாடு செய்யாவிடில் நடக்கும் விபரீதங்களை பார்த்துக்கொள்ளலாம் என மிரட்டலும் விடுக்கின்றார். தனது தங்கும் விடுதிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் இது போன்ற நடவடிக்கைகளில் பலர் ஈடுபட்டுவருவதாகவும் அதனால் விடுதிக்கும் தனக்கும் பாதுகாப்பு வேண்டும் எனவும் அவதூறாக பேசி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் கணவர் வாசு மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோபிசெட்டிபாளையம் காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது இவரது புகாரை வாங்க மறுத்த காவல்துறையினர் பெண்மணியையும் அவதூராக பேசியுள்ளதாக குற்றம் சுமத்துகிறார். மேலும் கோபிசெட்டிபாளையத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் இது காவல் நிலையம் அல்ல புரோக்கர் அலுவலகம் எனவும் தனது மகளின் கடவுச்சீட்டிற்கு ஒப்புதல் அளிக்க தன்னிடம் ரூ.20 ஆயிரம் கையூட்டு வாங்கியதாகவும் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். ஆகவே உயர் அதிகாரிகள் தலையிட்டு தனது புகாரை பதிவு செய்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமாவிற்கும் அவரது கணவர் வாசுவின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்றும் தனக்கும் தனது சொத்துக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் கோரிக்கைவைத்துள்ளார். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையம் முன்பு தீக்குளிக்கப்போவதாகவும் நிர்மலா தெரிவித்துள்ளார்… இவரது சொத்துக்கள் மீது ஆசைபட்டு சிலர் இவருக்கு எதிராக வேலை செய்வதாகவும் இவரை கொலை செய்யும் நோக்குடன் இருப்பதாகவும் அச்சம் தெரிவித்துள்ளார்.
பேட்டி:
திருமதி.நிர்மலா - தனியார் தங்கும் விடுதி உரிமையாளர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.