ETV Bharat / city

தீபாவளிக்காக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மலர் அலங்கார தோரணங்கள்!

வெளிநாடு வாழ் இந்தியர்கள், அங்கு பாரம்பரிய முறைப்படி தீபாவளி கொண்டாடுவதற்காக, அவர்களின் வீடுகள், வணிக நிறுவனங்களை அலங்கரிக்க மாவிலை, மலர் தோரணங்களாகி விமானம் ஏறி பறக்கிறது, சத்தியமங்கலத்து சுற்று வட்டாரப் பூக்கள். கோவையைச் சேர்ந்த மலர் ஏற்றுமதி நிறுவனம் மேற்கொண்டிருக்கும் கன்னி முயற்சியின் கதையிது..

author img

By

Published : Nov 12, 2020, 2:41 PM IST

deepavali_poo_export
deepavali_poo_export

ஈரோடு : திரைகடல் ஓடி, திரவியம் தேடிப் பயணித்த தமிழர்கள் தாங்கள் சென்று வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் தங்களின் எச்சங்களைப் பதிக்கத் தவறவில்லை. உணவு, வழிபாடுகளில் வெளிப்பட்ட இந்த அடையாளத் தேடல், இப்போது கொண்டாட்டங்களிலும் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

பரந்த கண்டங்களை கிராமங்களாக்கிய உலகமயமாக்கல், கொண்டாட்டங்களையும், அதன் பாரம்பரியங்களையும் பரவலாக்கி உள்ளது. இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி பண்டிகை கடல், கண்டங்கள் கடந்தும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களாலும் இப்போது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தக் கொண்டாட்டங்களின் முக்கிய நோக்கம், தங்களின் பூர்வீகப் பாரம்பரிய கலாச்சாரங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே! இந்த கலாச்சாரக் கடத்தல்களுக்கு இதுவரை உதவியது, தமிழ் புத்தகங்கள், கோயில் விழாக்கள், பண்டிகை கொண்டாட்டங்கள். இந்த வரிசையில் இப்போது புதிதாய் இணைந்திருக்கிறது, பண்டிகை கால அலங்காரங்கள்.

நம் பாரம்பரிய கொண்டாட்டங்களில் தோரண அலங்காரங்கள் முதன்மையானது. பண்டிகைகளை வரவேற்கும் முகமாக மக்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது தோரணங்கள். அப்படியான தோரணங்களில் மாவிலை, நெற்கதிர், மலர் தொங்கல்களுக்கும் முக்கிய இடமுண்டு. ப்ளாஸ்டிக் பூக்கள் இல்லாமல், நிஜமான பூக்களில் தோரண அலங்காரம் செய்ய ஐக்கிய அமீரகம், அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மத்தியில் விருப்பம் அதிகரித்துள்ளது. அவர்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்ற முனைந்திருக்கிறது கோவையைச் சேர்ந்த பூ ஏற்றுமதி நிறுவனம் ஒன்று.

இந்த புதிய முயற்சிக்காக இரண்டு மாவட்டங்களை இணைத்திருக்கிறது அந்த நிறுவனம். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டாரங்களில் விளையும் பூக்களை, திருநெல்வேலியிலிருந்து வரவழைக்கப்பட்ட பூக்கட்டும் தொழிலாளர்கள் கொண்டு, அலங்காரத் தோரணங்களாக்கி அமெரிக்கா, ஷார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது அந்த கோவை மலர் ஏற்றுமதி நிறுவனம்.

'தோரண மாலை கட்டுவதற்காக திருநெல்வேலியிலிருந்து நாங்க 12 பேர் வந்திருக்கோம். வெளிநாடுகள்ல நம்ம ஊர் பூக்கள் கிடைக்காததால, மாவிலை, நெல்மணி, செண்டு மல்லி வைச்சு தோரணங்கள் கட்டியிருக்கோம். நாங்க கட்டிய தோரணங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதியாகிறது என பரவசமாக சொல்கிறார், பூ கட்டும் தொழிலாளியான வெங்கடேஷ்.

மாவிலை, செண்டு மல்லி, நெற்கதிர்கள் கொண்டு கட்டப்பட்ட அலங்காரத் தோரணங்கள், 2 அடி, 5 அடி, 7 அடி என வீட்டு வாசலுக்கு தேவையான அளவில் கட்டப்பட்டுள்ளன. அதே போல், கல்வி, வணிக நிறுவனங்களின் அலங்காரங்களுக்காக செண்டு மல்லி பூ தோரணங்கள 2 அடி முதல் 12 அடிவரை கட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

'இங்க வந்து பூ கட்டுறதால எங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும்கிறதை விட, நாங்க கட்டின பூக்கள் வெளிநாட்டுல வாழுற நம்ம மக்களோட வீடுகளை அலங்கரம் பண்ணப் போகுதுங்கிறது இன்னும் சந்தோஷமா இருக்கு என்கிறார் மற்றொரு பூ கட்டும் தொழிலாளியான ஐயப்பன்.

துபாய், ஷார்ஜா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு, இந்த அலங்காரத் தோரண பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பூக்களால்,சத்தியமங்கலம் சந்தையில், பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்து முதல் முறையாக, ஏற்றுமதியாகும் அலங்காரத் தோரண ஏற்றுமதி, அதன் வரவேற்பைப் பொறுத்து இனியும் தொடரலாம்.

இதையும் படிங்க : கோவையில் 'வெடிக்கு பதிலாக செடி' என்ற தலைப்பில் பசுமை தீபாவளி

ஈரோடு : திரைகடல் ஓடி, திரவியம் தேடிப் பயணித்த தமிழர்கள் தாங்கள் சென்று வாழ்ந்த பகுதிகளில் எல்லாம் தங்களின் எச்சங்களைப் பதிக்கத் தவறவில்லை. உணவு, வழிபாடுகளில் வெளிப்பட்ட இந்த அடையாளத் தேடல், இப்போது கொண்டாட்டங்களிலும் வெளிப்படத் தொடங்கியுள்ளது.

பரந்த கண்டங்களை கிராமங்களாக்கிய உலகமயமாக்கல், கொண்டாட்டங்களையும், அதன் பாரம்பரியங்களையும் பரவலாக்கி உள்ளது. இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் தீபாவளி பண்டிகை கடல், கண்டங்கள் கடந்தும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களாலும் இப்போது சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தக் கொண்டாட்டங்களின் முக்கிய நோக்கம், தங்களின் பூர்வீகப் பாரம்பரிய கலாச்சாரங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே! இந்த கலாச்சாரக் கடத்தல்களுக்கு இதுவரை உதவியது, தமிழ் புத்தகங்கள், கோயில் விழாக்கள், பண்டிகை கொண்டாட்டங்கள். இந்த வரிசையில் இப்போது புதிதாய் இணைந்திருக்கிறது, பண்டிகை கால அலங்காரங்கள்.

நம் பாரம்பரிய கொண்டாட்டங்களில் தோரண அலங்காரங்கள் முதன்மையானது. பண்டிகைகளை வரவேற்கும் முகமாக மக்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது தோரணங்கள். அப்படியான தோரணங்களில் மாவிலை, நெற்கதிர், மலர் தொங்கல்களுக்கும் முக்கிய இடமுண்டு. ப்ளாஸ்டிக் பூக்கள் இல்லாமல், நிஜமான பூக்களில் தோரண அலங்காரம் செய்ய ஐக்கிய அமீரகம், அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மத்தியில் விருப்பம் அதிகரித்துள்ளது. அவர்களின் இந்த விருப்பத்தை நிறைவேற்ற முனைந்திருக்கிறது கோவையைச் சேர்ந்த பூ ஏற்றுமதி நிறுவனம் ஒன்று.

இந்த புதிய முயற்சிக்காக இரண்டு மாவட்டங்களை இணைத்திருக்கிறது அந்த நிறுவனம். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் சுற்று வட்டாரங்களில் விளையும் பூக்களை, திருநெல்வேலியிலிருந்து வரவழைக்கப்பட்ட பூக்கட்டும் தொழிலாளர்கள் கொண்டு, அலங்காரத் தோரணங்களாக்கி அமெரிக்கா, ஷார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது அந்த கோவை மலர் ஏற்றுமதி நிறுவனம்.

'தோரண மாலை கட்டுவதற்காக திருநெல்வேலியிலிருந்து நாங்க 12 பேர் வந்திருக்கோம். வெளிநாடுகள்ல நம்ம ஊர் பூக்கள் கிடைக்காததால, மாவிலை, நெல்மணி, செண்டு மல்லி வைச்சு தோரணங்கள் கட்டியிருக்கோம். நாங்க கட்டிய தோரணங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதியாகிறது என பரவசமாக சொல்கிறார், பூ கட்டும் தொழிலாளியான வெங்கடேஷ்.

மாவிலை, செண்டு மல்லி, நெற்கதிர்கள் கொண்டு கட்டப்பட்ட அலங்காரத் தோரணங்கள், 2 அடி, 5 அடி, 7 அடி என வீட்டு வாசலுக்கு தேவையான அளவில் கட்டப்பட்டுள்ளன. அதே போல், கல்வி, வணிக நிறுவனங்களின் அலங்காரங்களுக்காக செண்டு மல்லி பூ தோரணங்கள 2 அடி முதல் 12 அடிவரை கட்டப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

'இங்க வந்து பூ கட்டுறதால எங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கும்கிறதை விட, நாங்க கட்டின பூக்கள் வெளிநாட்டுல வாழுற நம்ம மக்களோட வீடுகளை அலங்கரம் பண்ணப் போகுதுங்கிறது இன்னும் சந்தோஷமா இருக்கு என்கிறார் மற்றொரு பூ கட்டும் தொழிலாளியான ஐயப்பன்.

துபாய், ஷார்ஜா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு, இந்த அலங்காரத் தோரண பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பூக்களால்,சத்தியமங்கலம் சந்தையில், பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது. இந்தியாவிலிருந்து முதல் முறையாக, ஏற்றுமதியாகும் அலங்காரத் தோரண ஏற்றுமதி, அதன் வரவேற்பைப் பொறுத்து இனியும் தொடரலாம்.

இதையும் படிங்க : கோவையில் 'வெடிக்கு பதிலாக செடி' என்ற தலைப்பில் பசுமை தீபாவளி

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.