ETV Bharat / city

தலைக்கவசம் அணியாததால் இளைஞர் உயிரிழப்பு!

author img

By

Published : Jun 11, 2019, 8:11 AM IST

ஈரோடு: சத்தியமங்கலத்தில் நடந்த சாலை விபத்தில் தலையில் அடிபட்டு பொறியியல் பட்டதாரி உயிரிழந்தார். தலைக்கவசம் அணிந்திருந்தால் உயிர் தப்பியிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இளைஞர் உயிரிழப்பு!

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், உதயமரத்திட்டு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி, கருணாம்பிகா தம்பதியின் மகனான ஷியாம்சுந்தர்(23), பொறியியல் படிப்பை முடித்துள்ளார். இரு சக்கர வாகனத்தில் பண்ணாரி சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது, உதயமரத்திட்டு மேடான பகுதியில் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள மரத்தின் மீது வாகனத்தை மோதியுள்ளார்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், மேல்சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Engineering student died on driving without helmet
தலைக்கவசம் அணியாததால் இளைஞர் உயிரிழப்பு!

இது குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை செய்ததில், "விபத்தில் இறந்த ஷியாம்சுந்தர் வாகனம் ஓட்டும்போது தலைகவசம் அணிந்திருந்தால், விபத்தில் சிறு காயங்களுடன் அவர் உயிர் பிழைத்திருக்க முடியும், இதுபோன்று சிறு அலட்சியத்தினால் இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனர்" என தெரிவித்தனர்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், உதயமரத்திட்டு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி, கருணாம்பிகா தம்பதியின் மகனான ஷியாம்சுந்தர்(23), பொறியியல் படிப்பை முடித்துள்ளார். இரு சக்கர வாகனத்தில் பண்ணாரி சாலை அருகே சென்றுகொண்டிருந்தபோது, உதயமரத்திட்டு மேடான பகுதியில் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள மரத்தின் மீது வாகனத்தை மோதியுள்ளார்.

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், மேல்சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Engineering student died on driving without helmet
தலைக்கவசம் அணியாததால் இளைஞர் உயிரிழப்பு!

இது குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் விசாரணை செய்ததில், "விபத்தில் இறந்த ஷியாம்சுந்தர் வாகனம் ஓட்டும்போது தலைகவசம் அணிந்திருந்தால், விபத்தில் சிறு காயங்களுடன் அவர் உயிர் பிழைத்திருக்க முடியும், இதுபோன்று சிறு அலட்சியத்தினால் இளைஞர்கள் அதிக அளவில் உயிரிழக்கின்றனர்" என தெரிவித்தனர்


ஹெல்மெட் போடாததால் உயிர் போச்சு: போலீசார் கவலை  
--
;டி.சாம்ராஜ்,
செய்தியாளர்
சத்தியமங்கலம்
94438 96939, 88257 02216
 
TN_ERD_04_10_SATHY_HELMET_DEATH_PHOTO_TN10009
(Visual  FTP இல் உள்ளது)

ஹெல்மெட் போடாததால் உயிர் போச்சு: போலீசார் கவலை


சத்தியமங்கலத்தில் சாலை விபத்தில் தலையில் அடிபட்டு பொறியியல் பட்டதாரி சாவு


சத்தியமங்கலத்தில் திங்கள்கிழமை நடந்த சாலை விபத்தில் பொறியியல் பட்டதாரி இளைஞர் தலையில்அடிபட்டு உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என போலீசார் வேதனையுடன் தெரிவித்தனர்.


சத்தியமங்கலம்  உதயமரத்திட்டு பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி கருணாம்பிகா தம்பதி மகன் ஷியாம்சுந்தர்(23),பொறியியல் பட்டதாரி.  தண்டபாணி கட்டடித்தொழிலாளி. இவர் இரு சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து பண்ணாரி சாலையில் சென்றுகொண்டிருந்தார். உதயமரத்திட்டு மேடான பகுதியில் இரு சக்கர வாகனம் நிலைதடுமாறி சாலையோர மரத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஷியாம்சுந்தரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக கோவை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிரை காப்பாற்றியிருக்க முடியும் என போலீசார் வேதனையுடன் தெரிவித்தனர். இதையடுத்து அவ்வழியாக வரும் வாகனஓட்டிகளிடம் ஹெல்மெட் அணியும்மாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.